Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு :

October 21, 2018

 

muslim-3.jpg?resize=800%2C600

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் முஸ்லீம் மக்கள் சந்திப்பு இன்று (21)யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் பெரும் திரளான முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அய்யூப் அஸ்மின் இ.ஜெயசேகரம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மனுவல் ஆனோல்ட் ஆகியோர் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பாறுக் ஷிஹான்-

IMG_2600.jpg?resize=800%2C580IMG_2602.jpg?resize=800%2C557muslim-1.jpg?resize=800%2C600muslim-2.jpg?resize=800%2C600muslim-3.jpg?resize=800%2C600

 
  • கருத்துக்கள உறவுகள்

மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…

 
October 22, 2018
  • Share This!

mavai-vikki.jpg?resize=699%2C443

அரசியலில் அ ஆவையே இப்போதுதான் படிக்கும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எங்களை விமர்சிக்கின்றார். வரலாறு தெரியாத அவர் எம்மைக் குறைசொல்லித் திரிகின்றார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார் . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பும் உதவிப் பொருள் வழங்கலும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று (21.10.18) நடைபெற்ற போது  நிகழ்வில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

 

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், மக்களுக்கு உரிமை தான் வேண்டும். அபிவிருத்தி தேவையில்லை என்று சாரப்பட முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிகழ்வொன்றில் அண்மையில் பேசியுள்ளார். அவர் நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் வடக்கு மாகாண சபையை நடத்திய லட்சணத்தை மக்கள் நன்கு அறிவார்கள். அவரது நடத்தையால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்கின்றார்.

எங்கள் கட்சியில் போட்டியிட்டுதான் வடக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவானவர் இந்த விக்னேஸ்வரன். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒழித்துக் கட்டுவதில் வலு தீவிரமாக செயற்படுகிறார்.. நாடாளுமன்றத் தேர்தல் உள்ளூராட்சித் தேர்தலில் எல்லாம் எங்களுக்கு எதிராகச் செயற்பட்டார். திசை மாறிப் பறப்பவராக இருந்து கொண்டு எங்களைத் தீவிரமாக விமர்சிக்கின்றார்.

அரசியலில் அவர் இப்போதுதான் அ ஆ படிக்கின்றார். வரலாறு தெரியாத அவர் எம்மை சகட்டு மேனிக்கு விமர்சிக்கின்றார். அவர் முதலில் அரசியல் படிக்கவேண்டும். எமது இலட்சியத்தை எப்படித் தந்திரமாகப் பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் அவர் படிக்கவேண்டும் என்றார்.

muslim-1-1.jpg?resize=800%2C600

IMG_2602-1.jpg?resize=800%2C557

tna-5.jpg?resize=800%2C600

பாறுக் ஷிஹான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.