Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனந்தி மாகாணசபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டமை குறித்து எதற்காக கேள்வி எழுப்பவில்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி மாகாணசபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டமை குறித்து எதற்காக கேள்வி எழுப்பவில்லை.

October 23, 2018
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ananthy-1.jpg?resize=750%2C420

வடமாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அதனை கட்சி ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அனந்தி மாகாணசபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டமை குறித்து எதற்காக கேள்வி எழுப்பவில்லை என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவைத்தலைவரை கேள்விக்குட்படுத்தினர்.

அமைச்சர் என கூறப்படும் திருமதி அனந்தி சசிதரன் புதிய கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளதுடன், தன்னுடைய சுய விருப்பத்தின் பெயரில் தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தினை கட்சியின் செயலாளருக்கு அனுப்பியிருந்தார்.

இதனை கட்சி அங்கீகரித்துள்ளதுடன், திருமதி அனந்தி சசிதரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபைக்கு எழுத்துமூல அறிவித்தலையும் வழங்கியிருந்தது. அந்த அறிவித்தல் இன்றைய தினம் சபையில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் வாசித்து காண்பிக்கப்பட்டது.

எனினும் அது கட்சிசார்ந்த விடயம் ஆகவே அதனை எதற்காக சபையில் கூறவேண்டும் என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் கல்வி அமைச்சர் என கூறப்படும் க.சர்வேஸ்வரன் ஆகியோர் வாதிட்டனர்.

இதன்போது எழுந்த மாகாணசபை உறுப்பினர்களான கே.சயந்தன், ஆ.பரஞ்சோதி மற்றும் அயூப் அஸ்மின் ஆகியோர், அனந்தி சசிதரன் தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த கட்சியிலிருந்து நீங்குவதாக அறிவித்துள்ளார். அதனை கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதுடன், சபைக்கும் அறிவித்துள்ளது. இதன்படி அனந்தி சசிதரன் தனது உறுப்பினர் பதவியையும் இழக்கின்றார்.

அதனை அவை தலைவர் ஏன் கேள்வி கேட்கவில்லை? என கேட்டதுடன், சபைக்குள் வருவதற்கு கூச்சம் இல்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.  ஆயினும் அனந்தி சசிதரன் அமைதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2018/100439/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.