Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசை தக்க வைக்க ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 850 மில்லியன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஞ்சிய 17 பேரையும் தக்க வைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் தலா 50 மில்லியன் ரூபாய்களை அன்பளிப்பாக வழங்க அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச கடந்த வாரம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் ஏப்பிரல் 3 ஆம் நாள் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் தொடரூந்து போக்குவரத்து பிரதி அமைச்சர் எட்வேட் குணசேகர மீண்டும் தனது கட்சிக்கு தாவியதை தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களை சந்தித்த பசில் ராஜபக்ச, இந்த உடன்பாட்டை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இந்த 50 மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்துக்கு தாவியவர்களுக்கு மட்டுமே பிரத்தியோகமாக வழங்கப்பட உள்ளதாகவும். ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கோ அல்லது அரசாங்க தரப்பு உறுப்பினர்களுக்கோ அல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொடுப்பனவை பெறுபவர்கள்:

கரு ஜெயசூர்ய

நவீன் திசநாயக்க

எம்.எச். மொகமட்

தர்மதாசா பண்டா

ஜீ.எல். பீரீஸ்

மிலிந்த மொறகொட

பந்துல குணவர்த்தன

ராஜித சேனாரட்ன

ஹேமகுமார நாணயக்கார

மாயோன் முஸ்தப்பா

பி. தயாரட்னா

காமினி லொக்குகே

நியோமல் பெரேரா

எஸ். சூரியாராச்சி

மனோ விஜயரட்னா

மகிந்த விஜயசேகர

லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன

ஆகியோர் அவர்.

பசில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்களான:

ஜெயராஜ் பெணாட்டோ புள்ளே

நிமல் சிறீபால டீ சில்வா

மைத்திரிபால சிறீசேன

திஸ்ஸ விதாரண

டீ.ஈ.டபிள்யூ. குணசேகர

கரு ஜெயசூர்ய

மிலிந்த மொறகொட

ரவூப் ஹக்கீம்

ஹசன் அலி

முத்து சிவலிங்கம்

ஆர். யோகராஜன்

ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

இதற்காக மொத்தம் 850 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அன்பளிப்புக்கான இந்த பணம் தேசிய கட்டுமான அமைச்சின் ஊடாக வழங்கப்பட உள்ளதாகவும் பசில் ராஜபக்ச இந்த கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றார்.

"அரசாங்கத்துக்கு தாவியபோது தமக்கு உறுதியளித்தபடி பணமோ அல்லது வேறு சலுகைகளோ வழங்கப்படவில்லை" என அமைச்சர் கரு ஜெயசூரியா இந்த கூட்டத்தில் கடுமையாக தொனியில் தெரிவித்ததுடன் "அப்படியான நிலைமைகளில் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நிலைக்க முடியாது" எனவும் எச்சரித்துள்ளார்.

எனினும் "உறுதியளித்தவைகளை நிறைவேற்றுவதில் தமக்கு பல சிக்கல்கள் தோன்றியிருந்ததாகவும், எதிர்வரும் சில நாட்களில் அதனை நிறைவேற்றுவதாகவும்" பசில் ராஜபக்ச உறுதியளித்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

எட்வேட் குணசேகரவின் கட்சித் தாவலுக்கு பின்னர் கூட்டத்தில் காணப்பட்ட பசில் ராஜபக்ச மிகவும் ஆடிப்போய் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாட்டோபுள்ளே "ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவாகப் பேசியதுடன், அவர்கள் அரசாங்கத்தின் பக்கம் தாவிய போது வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அல்லாது போனால் அவர்கள் மீண்டும் கட்சி தாவ நேரிட்டால் அரசாங்கம் கவிழலாம்" எனவும் தெரிவித்திருந்தார்.

அனைத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் 50 மில்லியன் ரூபாய்களை அன்பளிப்பாக கொடுப்பதற்கு பசில் ராஜபக்ச முன்வந்ததனைத் தொடர்ந்தே கரு ஜெயசூர்ய குழுவினர் அரசாங்கத்துக்கும் மகிந்த ராஜபக்ச சகோதரர்களுக்கும் ஆதரவாக அறிக்கை விட்டதுடன், "ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்" எனவும் அதில் தெரிவித்திருந்தனர்.

மகிந்துவிடம் நல்ல பணம் புழங்கிது போல இருக்கு! நானும் ஒனக்கு வெளியல நின்று ஆதரவு தாறன், எனக்கும் கொஞ்சம் அப்படி, இப்படி பார்த்துத் தள்ளப்பா மகிந்து!

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிதாவி வந்த ரனில் கட்சி எம்.பி.களுக்கு ரூ.85 கோடி லஞ்சம்: ஆளும்கட்சி ஆசை காட்டுகிறது

கொழும்பு, ஏப். 8-

இலங்கையில் ரனில் விக்ரமசிங்கே தலைமையில் ஐக்கிய தேசியகட்சி எதிர்கட்சி யாக உள்ளது. இந்த கட்சியில் இருந்து சில எம்.பி.க்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சி தாவி ஆளும் சுந்திரகட்சிக்கும் ராஜபக்சே அரசுக்கும் ஆதரவு அளித்தனர். கட்சி தாவிய எம்.பி.க்கள் சிலருக்கு மந்திரிபதவி உள்பட முக்கிய பதவிகளும் வழங்கப்பட்டன.

கடந்த வாரம் எட்வர்டு குணசேகரா என்பவர் மீண்டும் ரனில்கட்சிக்கு திரும்பிச்சென்று விட்டார்.

இதேபோல் மேலும் சில எம்.பி.க்கள் மீண்டும் ரனில் கட்சிக்கே திரும்பிச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் அதிபர் ராஜபக்சேவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கட்சி தாவி வந்த 17 எம்.பி.க்களை தக்க வைத்துக்கொள்ள அவர்களுக்கு ரூ.85 கோடி வழங்குவதாக இலங்கை அரசு ஆசை காட்டி வருகிறது. ஒவ்வொரு எம்.பி.களுக்கும் தலா ரூ.5 கோடி கிடைக்கும் என்று ராஜபக்சேயின் ஆலோசகர் உறுதி அளித்து இருக்கிறார்.

மாலைமலர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.