Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபாவளிப் பண்டிகை

Featured Replies

தீபாவளி .   ஆரிய_பண்டிகை

புராணம் கற்பித்த திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரனை கொன்ற தினம் என்று ஒருநாளை தீபாவளியாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர். சரி பாகவத புராண கதை என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்..!

வராக அவதாரத்தில் (பன்றி அவதாரத்தில்) பூமாதேவிக்கும் (பூமிக்கும்) விஷ்ணுவிற்கும்  (பன்றிக்கும்) பிறந்தவன் நரகாசுரன் எனும் அசுரன்.

இரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் பூமியை எடுத்துச் சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்துவிட்டான். அதனை மீட்டெடுக்க விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கடலின் அடிவரைசென்று பாதாளம் நோக்கி துளை அமைத்துச்சென்று அசுரனுடன் ஆயிரம் வருடங்கள் போரிட்டு அவனை வென்றார். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி நரகாசுரன் என்ற மகனைப் பெற்றெடுத்தார். என்ன ஒரு அறிவார்ந்த கற்பனை. பன்றியின் பரிசத்தினால் பூமி ஒரு மகனை பெற்றெடுத்ததாம். 

அந்த நரகாசுரன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம், பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.

கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணனை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.

நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயக்கமடைந்தார்.  தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.
இதுதான் பாகவத புராணம் கூறுவது.

இத்தகைய வீரக்கடவுளான கிருஷ்ணனுக்கு எதற்கு அவதாரம்? நரகாசுரனிடம் தோற்ற இவன் கடவுளா? பிரம்மாவிற்கு சக்தி அதிகம் என்றுதானே பொருள். கிருஷ்ணன் கொல்லவில்லை, மனைவி சத்தியபாமாதானே கொன்றார். கதை கூறினாலும் பொருந்த கூடியவாறு சொல்வதற்குகூட அறிவில்லையா?

பண்டைய படிப்பறிவற்றவர் எதைக்கூறினாலும் நம்புவர் என்பதனால் வந்த மெத்தனம். இன்று மூக்குடைபட்டு நிற்கிறார்கள்.

ஆனால் இன்றும்கூட இந்த கற்பனை கதைகளை உண்மை என்று நம்பிய நமது அறிவாளிகள் அல்லது இது எதுவுமே தெரியாத அப்பாவிகள் ஒவ்வொரு வருடமும் இதை தீபாவளியாக நினைவுகூருகிறார்கள். 

கிருத யுகத்தில் நடந்ததாம் வராக அவதாரம். துவாபர யுகத்தில் நடந்ததாம் கிருஷ்ண அவதாரம். ஆக கிருத யுகத்தில் பிறந்த நரகாசுரன் துவாபர யுகத்தில் இறக்கும்வரை எத்தனை கோடி ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதை பார்த்துவிடுங்கள். கல்பம், யுகம் என்பதற்கு இவர்கள் கூறும் வரைவிலக்கணத்தையும் பார்த்துவிடுங்கள். பல குட்டுக்கள் வெளிப்படும். 

 

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.