Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கூட்டமைப்பின் நிபந்தனை சாத்தியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கூட்டமைப்பின் நிபந்தனை சாத்தியமா?

பதிவேற்றிய காலம்: Oct 29, 2018

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில் மகிந்த, ரணில் இருவரும் தள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்மானகரமான சக்தியாக மேலெழுந்துள்ளது. பேரம் பேசல்கள் ஊடாகப் பணத்தை அள்ளி வீசி ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிந்த, மைத்திரி தரப்பு தம் பக்கம் இழுத்துக்கொள்ளாத நிலையில் கூட்டமைப்பு மட்டுமே ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் ஒரே சக்தியாக மேலெழும் வாய்ப்பும் உள்ளது.

இத்தகைய ஒரு வாய்ப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறது என்பதை அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தியிருக்கி றார். புதிய அரசமைப்பை உருவாக்குவது மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது ஆகிய இரு விடயங்களும் தமது ஆதரவைப் பெறுவதற்கான முக்கியமான விடயங்களாக, நிபந்தனைகளாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் சம்பந்தன்.

 

இந்த இரண்டு விடயங்களிலுமே கடந்த காலங்களில் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர் மகிந்த ராஜபக்ச. இன்னும் சொல்லப்போனால், ஐ.நா. தீர்மா னத்தை முழுமையாக நிறைவேற்றுவது என்பது மகிந்த வின் குடும்பத்தினருக்கு எதிராக அவரே செயற்படுவதைப் போன்றதாகிவிடும். அத்தோடு புதிய அரசமைப்புக்கு ஊடாக நாட்டைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என்று சிங்கள, பௌத்த மக்களிடம் தாம் செய்து வந்த பரப்புரைக்கு நேர்மாறான பரப்புரையை மகிந்த முன்னெடுக்க வேண்டியிருக்கும். இவையிரண்டுமே மகிந்தவின் அரசியல் தற்கொலைக்கு நிகரானவை என்பதால் மகிந்த இலகுவில் இவற்றுக்கு இணங்கிவர முற்படமாட்டார் அல்லது இணங்குவதாகக் கூறிக்கொண்டு தமிழ்த் தலைமைகளை ஏமாற்றுவதற்குத் தயங்கமாட்டார்.

மறு பக்கத்தில் ரணிலின் நிலமையும் சிக்கலானதுதான், ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதில் கொழும்பையும் ஒரு அனுசரணையாளராக இணைத்துக்கொள்வதற்கு இணங்கி வந்தவர் என்றபோதும் பின்னர் அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டவர் அவர், போர்க் குற்றவிசார ணைகளை நடத்துவதற்கான கலப்பு நீதிமன்றங்களை அமைப்பது இலங்கை போன்ற நாடுகளுக்குப் பொருத்தமானதல்ல என்றுகூறியவர்தான் ரணில் விக்கிரமசிங்க. புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்ட நாடாளுமன்றத்தால் 6 உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுச் செயற்பட்டுக்கொண்டி ருந்தபோது அந்தக் குழுக்களின் பரிந்துரைகளில் தமிழர்க ளுக்குச் சாதகமான சில அம்சங்கள் இடம்பெறப்போகின்றன என்பதை அறிந்துகொண்டு அவற்றைக் கட்டுப்படுத்து வதற்கும் மட்டுப்படுத்துவதற்குமாக 7ஆவதாக ஒரு குழுவைத் தானாக நியமித்து அதற்கூடாக முற்போக்காக முன்வைக்கப்பட்ட யோசனைகளை வலுவிழக்கச் செய்யும் பரிந்துரைகளை முன்வைத்தார் ரணில். எனவே அவரும் கூட்டமைப்பின் இரு நிபந்தனைகளையும் இதய சுத்தியோடு ஏற்றுக்கொள்வார் என்று சொல்வதற்கில்லை.
இரு நிபந்தனைகளையும் நிறைவேற்றுவோம் என்று இரு தரப்பினரும் வாக்குறுதிகளை வழங்கினால்கூட அவர்கள் அவற்றை நிறைவேற்றமாட்டார்கள் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஏனெனில் ஒரு சில தினங்களுக்கு முன்னர் வரையில் அதனை நிரூபித்தவர்கள் அவர்கள். எனவே நிபந்தனைகளை விதித்து சிங்களத் தலைவர்களிடம் இருந்து வாக்குறுதிகளைப் பெறுவது தமிழர்களைப் பொறுத்தவரையில் பயனற்ற ஒன்று. 2015இல் மைத்திரிபால சிறிசேன வழங்காத வாக்குறு திகளா? இப்போது என்ன நடந்திருக்கிறது? எனவே மீண்டும் மீண்டும் ஏமாறும் ஏமாளிகளாகத் தமிழ்த் தலைமைகள் இல்லாதிருக்கவேண்டியிருக்கிறது.
இந்த விவாகரத்தில் தமிழ்த் தலைவர்கள் செயற்படு வதற்கான வெளி மிக மட்டுப்படுத்தப்பட்டதுதான் என்கிற போதும் அதற்குள்ளும் அவர்கள் எவ்வளவு விவேகத்துடன் வெற்றியைச் சாத்தியமாக்குகிறார்கள் என்பதிலேயே தமிழ் இனத்தின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

 

https://newuthayan.com/story/13/தமிழ்க்-கூட்டமைப்பின்-நிபந்தனை-சாத்தியமா.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.