Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்க் உச்சிமாநாடும் பயங்கரவாத ஒழிப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சார்க் உச்சிமாநாடும் பயங்கரவாத ஒழிப்பும்

கடந்த 3 ஆம், 4 ஆம் திகதிகளில் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான (சார்க்) அமைப்பின் 14 ஆவது உச்சி மகாநாடு நடைபெற்றது. ஏற்கனவே, உள்ள ஏழு நாடுகளுடன் இம்முறை எட்டாவது நாடாக ஆப்கானிஸ்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. எட்டு நாடுகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கைகோர்த்து நின்ற போதிலும் இந்நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும் பிரச்சினைகளும் அவநம்பிக்கைகளும் ஒவ்வொருவரிடமும் உறைந்திருப்பதை நிராகரிக்க முடியாது. அதன் காரணமாகவே சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு இருபத்திரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு பலாபலனையும் எட்ட முடியவில்லை என்பது யதார்த்தமாகும்.

இவ்வேளை, சார்க் அமைப்பின் தொடக்க காலத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா கூறிய கூற்று நினைவுக்கு வருகிறது. "கப்பல் புறப்படுகிறது. அதனுள் உள்ளவர்களிடையே கிளர்ச்சிகள் ஏற்படாமல் இருக்கும் என நம்புவோம். அத்துடன், கடற்கொள்ளைகள், கடல் கொந்தளிப்புகள் என்பவற்றைத் தாண்டி உரிய துறைமுகங்களை சென்றடையுமா என்றும் சிந்திக்க வேண்டும்" எனக் கூறி இருந்தார். அவரது கூற்றில் அரை நக்கலும் அரை உண்மையும் இருந்தன. ஆயினும், சார்க்கின் இன்றைய நிலை நம்பிக்கை தருவதாக இல்லை என்பது மட்டும் நடைமுறையில் காண முடிகின்ற விடயமாகும்.

பிராந்திய ஒத்துழைப்பு என்பது நாடுகளுக்கிடையில் ஏற்படுவதும் உறுதியாக்கப்படுவதும் அவசியமாகும். குறிப்பாக, பின்தங்கிய ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே உறுதியான கொள்கை அடித்தளத்தின் மீது அவை கட்டியெழுப்பப்படல் வேண்டும். அந்த வகையில் நூற்று ஐம்பது கோடி சனத்தொகையுடைய தெற்கு ஆசிய நாடுகள் தம்மிடையே பிராந்திய ஒத்துழைப்பைக் கொண்டிருப்பது அவசியமானதாகும். பொருளாதார வளர்ச்சிக்கான அபிவிருத்தியிலும் வறுமை ஒழிப்பிலும் வேலை இன்மையைப் போக்குவதிலும் வளங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் நாடுகளிடையே புரிந்துணர்வு நட்புறவை வளர்த்துக் கொள்வதிலும் கடந்த இருபத்திரெண்டு வருடங்களில் சார்க் அமைப்பு வெற்றிபெறவில்லை என்பது நிதர்சனமாகும். அதற்கு அடிப்படையாக அமைந்த காரணம், ஒவ்வொரு நாடும் தத்தமது "தேசிய நலன்கள்" என்பதை முதன்மைப்படுத்தி ஏனைய நாடுகளின் பிரச்சினைகளைத் தத்தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைந்து நின்ற பிரதான போக்கேயாகும். இவ்விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு விவாதத்திற்குரியதாகவே இருந்து வந்துள்ளது. சார்க் நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலப்பரப்புடனும் அதன் நலன்களுடனும் தரையிலும் கடலாலும் தொடர்புபட்டிருக்கின்றன. அதன் மிகப்பெரிய சனத்தொகையும் ஏனைய வளங்களும் இந்தியாவை ஒரு "பெரிய அண்ணன்" பாத்திரத்தை வகிக்கச் செய்துள்ளது. அதன் அடுத்த சகோதரனான பாகிஸ்தானுடன் பிரதான முரண்பாட்டை நீடித்து வருவதுடன், ஏனைய நாடுகளின் விடயங்களிலும் இந்தியா நல்ல சகோதரனாகவோ சிறந்த அயலவனாகவோ இல்லை என்ற பலமுனைக் குற்றச்சாட்டுகளும் சார்க் அமைப்பின் வெற்றியின்மைக்கு காரணங்கள் என்று கூறப்படுகின்றன.

இத்தனைக்கும் மத்தியிலேயே தற்போதைய 14 ஆவது உச்சிமகாநாடு நடந்து முடிந்துள்ளது. இந்த மகாநாட்டிலே கலந்துகொண்ட தலைவர்கள் சார்க் அமைப்பின் எதிர்காலத்திற்கான அடிப்படைகளை ஆராய்ந்து உறுதியான முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக தத்தமது நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆதங்கங்களாக வெளியிடுவதையே முதன்மைப்படுத்தியிருக்கிறா

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.