Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம்சை அரசன் பிரான்ஸ்ம் 14 ஆவது சார்க் மாநாடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இம்சை அரசன் பிரான்ஸ்ம் 14 ஆவது சார்க் மாநாடும்

-சி.இதயச்சந்திரன்-

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையோடு காலூன்றியுள்ள பிராந்திய நலன் தேடும் சக்திகள் ஒன்றுகூடுமிடமாக சார்க் மாநாடு அமைந்துள்ளது.

பார்வையாளராக சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகிறது.

ஏற்கனவே சார்க் அமைப்பிலுள்ள பெரும் புள்ளிகளான இந்தியா, பாகிஸ்தானுடன் ஏனைய வல்லரசுகளும் குவிக்கப்படும் இடத்தில், பிராந்திய பயங்கரவாதத்தை முறியடிப்பது குறித்து பேசப்பட்டது இலங்கை அரசின் அடுத்த நகர்விற்கு மூலப்பொருளாக அமையும்.

சர்வதேசம் திணிக்க முனையும் பேச்சுவார்த்தைப் பாதையைத் திசைமாற்ற, பயங்கரவாதத்திற்கெதிரான நகர்வினை முன்னிலைப்படுத்துவதை எவ்வாறு மேற்கொள்ளலாமென்கிற சிந்தனையில் அரசாங்கம் மூழ்கியுள்ளது.

வான்புலிகளின் பலம், தென்னாசியப் பிராந்தியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகுமென்று, வான் தாக்குதலைத் தொடர்ந்து அரசு வெளியிட்ட அறிக்கையின் மறுபக்கத்தில் ~சார்க்| மாநாடு நிழலாடியிருக்கும்.

இம் மாநாட்டில் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கோரும் அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொள்வதென்பதே அரசிற்குரிய பெருங்கவலை. பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கை குறித்தும், அதனோடு தொடர்புறும் பணம் மற்றும் ஆயுத பரிமாற்றங்களைத் தடுப்பது பற்றியும் ஆராயப்பட்ட அதேவேளை இம்மாநாட்டில் பங்குபற்றிய நாடுகள் எதிர்நோக்கும் பயங்கரவாதச் செயல்கள் வேறுபட்டு இருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.

பாகிஸ்தானூடாக உள்நுழையும் சர்வதேச பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த, அவ்வரசிடம், சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கோர வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது.

இதேவகையான சர்வதேசப் பயங்கரவாதம், பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு அதன் அமெரிக்க சார்பு நிலை காரணமாக பலசிக்கல்களை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் புலிப்பயங்கரவாத கருத்துருவத்தை சர்வதேச மயப்படுத்தாமல் விட்டால், தனது நாட்டுப் பாதுகாப்பிற்கான செய்தியின் கனதி குறைக்கப்படுமென்பது அரசாங்கத்திற்குப் புரியும்.

புலிகளை அழித்தொழிக்க, தான் மேற்கொள்ளும் இராணுவ நகர்வுகளுக்கு சர்வதேசத்தின் பூரண அங்கீகாரம் நிபந்தனையற்ற வகையில் பெறப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தின் குறிக்கோள்.

அதேவேளை, புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இலங்கை அரசுமீது அழுத்தங்களை எவ்வாறு மேற்கொள்வதென்பதே இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் எதிர் கொள்ளும் பாரிய சவாலாகும்.

வௌ;வேறு இரு திசைகளில் பயணிக்கும் இருவருக்குமிடையே பொது நிலைக்கருத்தொன்றை உருவாக்குவது கடினமான விடயமாக அமையும். பயங்கரவாத தடுப்பு ஒப்பந்தம் இவற்றில் ஒன்றாக இருக்கும்.

இலங்கை அரசின் மீது ஐரோப்பிய யூனியன் இராஜதந்திர அழுத்தங்களைத் திணிக்க முனைந்தால், சீனாவின் பக்கம் அரசு சாயும் வாய்ப்பிருப்பதாக, நிரஞ்சன் தேவா எனும் ஐரோப்பிய யூனியனின் பிரித்தானியப் பிரதிநிதி அண்மையில் தெரிவித்த கருத்து இந்நேரத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய நிலைப்பாட்டில், அரசை நடத்துபவர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்குமிடையேயுள

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை| மேசைக்குச் செல்லுமாறு இந்தியாவும் மேற்குலகமும் இலங்கையை வற்புறுத்தும் போதுஇ புலம்பெயர் நாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கும் நிதி ஆதரவினைக் கட்டுப்படுத்தும்படி ஜனாதிபதி வலியுறுத்துவாரென ஊகித்த மேற்குலகம்இ பிரான்ஸிலுள்ளஇ தமிழீழ ஆதரவுச் செயற்பாட்டாளர்களை கைது செய்துள்ளது.

புலிகளின் வான்படை உருவாக்கத்திற்கு புலம்பெயர் மக்களின் ஆதரவு இருப்பதாக அரசாங்கம் குற்றச்சாட்டை முன்வைக்குமென்பதை உய்த்துணர்ந்த மேற்குலகம்இ மாநாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம்.

இந்த கைது நடவடிக்கையின் பின்னணியில் இருவித உள் நோக்க நகர்வுகள் இணைக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களிற்கு முன்பாக பிரான்ஸிலுள்ள காதிநூர் புகையிரத தரிப்பிடத்தில் நிகழ்ந்த அசம்பாவித சம்பவங்களின் பெறுபேறாகஇ எதிர்வரும் அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் வலதுசாரி வேட்பாளர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக மக்கள் கருத்து கணிப்பு கூறுகிறது.

குறிப்பாகஇ சிறுபான்மை இன மக்கள் பெருவாரியாக ஆதரவு வழங்கும் சோசலிசக் கட்சியின் பெண் வேட்பாளர் செகலோன் றொயாலினை விடஇ வலதுசாரியான நிகலாஸ் சார்கோசி மற்றும் அதிதீவிர வலதுசாரியான ஜோன் மரி லூபெனின் செல்வாக்குகள் பலமடங்காக உயர்ந்துள்ளதை மேற்குறிப்பிடப்பட்ட வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய மாற்றமென ஊகிக்கலாம்.

நாடுகள்

மனிதர்கள்

நிறங்கள் தான் மாற்றமே தவிர அரசியல்வாதிகள் எங்குமே ஒரேமாதிரித்தான் சிந்திக்கின்றனர்

தான் வெல்லவேண்டும் என்பதற்காய் எதுவும் செய்வர்.

நியாயம் அநியாயம் ???????

--------------------

தமிழ்ப் பிரதிநிதிகளை விடுவிக்கக் கோரி பாரிசில் எதிர்வரும் 9 நாள் ரொக்கட்ரோ(Trocadero) சதுக்கத்தில் 3 மணி முதல் 5 மணி வரை எதிர்ப்புப் போராட்டம். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.