Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதப் பேரவலங்களை உருவாக்கி தெற்குப் போதிக்கும் பாடம்

Featured Replies

மனிதப் பேரவலங்களை உருவாக்கி தெற்குப் போதிக்கும் பாடம் `

"பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கிழக்கிலங்கையை விடுவித்தல்' என்ற பெயரில் ஜனாதிபதி மஹிந்தரின் அரசு ஆரம்பித்திருக்கும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவுகளும் சேதங்களும் நாசங்களும் இழப்புகளும் சொல்லில் அடங்காதவை. கொடூர ஷெல், பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் அஞ்சி இடம்பெயர்ந்து வரும் அப்பாவித் தமிழ் மக்கள், தங்கள் வீடு, வாசல்கள் மற்றும் உடைமைகளைத் துறந்து அகதிகளாக அல்லற்படுகின்றனர்.

* மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் சுமார் 42 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் உள்நாட்டுக்குள் அகதிகளாகியுள்ளனர். அவர்கள் 90 இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டி ருக்கின்றனர்.

* இவர்களில் சுமார் 22ஆயிரம் சிறார்கள் தமது கல்வி வாய்ப்பை இழந்துள்ளனர்.

* மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் அண்மைக்கால இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 116 பாடசாலைகள் செயலிழந்திருக்கின்றன. பல பாடசாலைகள் இடம்பெயர்ந்த அகதிகளால் நிரம்பி வழிகின்றன.

* சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான சிறார் கள் தமது பெற்றோரில் ஒருவரையாவது இழந்து இடம்பெயர்ந்து இருக்கின்றனர்.

* 467 சிறார்கள் தங்களின் இரு பெற்றோர்களையும் விட்டு விலக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கிழக்கில் தமிழ் அகதிகளின் அவல நிலை பற்றிய புள்ளிவிவரம் மனதை உலுப்புவதாக அமைந்துள்ளது. அதுவும் இளம் தமிழ்ச் சமுதாயத்தின் கல்வி நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

நமது அடுத்த தலைமுறை கல்வி வாய்ப்பை இழந்து பின் தள்ளப்படும் பேராபத்து அங்கு சூழ்ந்து வருகின்றது.

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள ஏதிலிகள், அந்த அகதிமுகாம்களில் கூட நிம்மதியாகத் தமது பொழுதைக் கழிக்க முடியாத இக்கட்டில் சிக்கியுள்ளனர் என்பதை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி அம்பலப்படுத்தி இருக்கின்றார்.

அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களுக்குள் செல்லும் படையினர் அங்கிருப்போரைக் கைது செய்து, தடுத்து வைத்து, தொந்தரவுக்கு உள்ளாக்குகின்றனர் என்பதையும் ஜெயானந்த மூர்த்தி வெளிப்படுத்தி இருக்கின்றார்.

ஏற்கனவே, வீடு, வாசல்களையும், நிலபுலன்களையும் துறந்து இடம்பெயர்ந்த, அடுத்த நேர உணவுக்கு வழியின்றி அவதிப்படும் இந்த அகதி மக்களைச் "சந்தேகம்' என்ற பெயரில் கைதுசெய்து இம்சைப்படுத்துவது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பது போன்ற செயலாகும்.

தனது இராணுவ மேலாண்மையை உறுதி செய்து, தமிழினத்தின் மீதான தனது அதிகாரப் பிடியை இறுக்கி, தமிழர் தேசத்தின் குரல்வளையை நசுக்கும் தென்னிலங்கையின் ஒடுக்குமுறைச் செயற்பாடு வடக்கு, கிழக்கு என்று வேறுபாடின்றி தமிழர் தாயகம் எங்கும் அகதிகள் பெருவெள்ளத்தை உருவாக்கி நிற்கின்றது. யுத்தத்தின் கோரமான வடுக்கள் தமிழர் தாயகத்தின் மீது பொறிக்கப்பட்டிருக்கின்றன. பொதுக்கட்டுமானங்கள் சிதைவுற்று, தமிழரின் வாழ்வியல் கட்டமைப்பு சிதறடிக்கப்பட்டு இருக்கின்றது. இடம்பெயர்ந்த மக்கள் ஏழ்மைக்கும், இழி நிலைக்கும் ஆளாகியுள்ளனர். பலர் தமது அன்றாட வாழ்வியலுக்கான ஜீவனோ பாயத்தை இழந்து தவிக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டு பரிதவிக்கின்றன.

ஆனால், விடுதலைப் புலிகளை அழித்தே தீருவோம் என்ற கங்கணத்துடன், விளைவுகள் குறித்துச் சிந்திக்காமல் தனது படை நடவடிக் கைத் திட்டங்களை தமிழர் தாயகம் மீது மோசமா கக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது கொழும்பு.தமிழர் தேசம் எதிர்கொள்ளும் மனிதப் பேரவலம் குறித்துச் சிந்திக்காமல் சிரத்தை எடுக்காமல் கவனத்தில் கொள்ளாமல் அந் தப் பேரவலத்தை மென்மேலும் மோசமடை ச் செய்யும் வகையில் கொழும்பு மோசமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு பாடத்தை விழிப்புணர்வை தமிழர்க ளுக்குத் தருகின்றது.

தமிழர் தேசத்தின் வாழ்வியல் கட்டமைப்புக் குறித்துத் தென்னிலங்கைத் தலைமைக்கு எள்ளளவும் சிரத்தை இல்லை. தமிழர் தாயகம் எக்கேடு கெட்டும் போகட்டும். அதைவிட, தமிழர் தாயகத்தை அடக்கி, ஒடுக்கி, தனது ஆட்சி அதிகார மேலாண்மையை அதன் மீது திணிப்பதன் மூலம் தான் கூறிக்கொள்ளும் "இறைமையை' நிலைநிறுத்துவதுதான் தென்னிலங்கைக்கு முக்கியம். இதுவே கொழும்பின் ஒரே முனைப்பாகவும் நிலைப்பாடாகவும் உள்ளது. இதனை நிலைநாட்டுவதற்காகத் தமிழர் தாயகத்துக்கு எவ்வளவு பேரிழப்பு நேரினும் பாதிப்புகள், அழிவுகள் ஏற்படினும் அவை பற்றியெல்லாம் கொழும்பு அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்பதும் நிச்சயம்.

நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் வழி வகையை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அனுபவப் பாடத்தைக் கொழும்பின் பௌத்த சீலம் தமிழர் தாயகத்துக்குப் போதிக்கின்றது.

பட்டறிவை விட வேறு பொருத்தமான பாடம் இல்லையல்லவா?

uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.