Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திரைமறைவில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் - கெஹெலிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரைமறைவில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் - கெஹெலிய

 

பாராளுமன்றத்தில் திரை மறைவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும், மேன்மைக்குறிய பாராளுமன்ற சம்பிரதாயங்கனை துச்சமென மதித்து நடவடிக்கை எடுக்கும் போது அனைப் பார்த்துக்கொண்டு எங்களால் அமைதியாக இருக்க முடியாது என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கண்டி பூஜாபிட்டிய பிரதேசத்தில் நேற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

keahaliya.jpg

கடந்த சில தினங்களாக பாராளுமன்றத்தில் ஏற்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்பாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களை திட்டுகின்றனர். இருந்தபோதும் அங்கு திரைக்கு பின்னால் நடப்பவை பற்றி மக்கள் அறிந்திருக்க வில்லை. 

பாராளுமன்ற சம்பிரதாயப்படி  பாராளுமன்றம் கூடுவதற்கு முன் கட்சி தலைவர்களது கூட்டம் இடம்பெற வேண்டும் அங்கு அன்றைய தினத்தின் சபையின் நடவடிக்கைகள் பற்றி சபாநபயகர் மற்றும் அரச தரப்பினரே முடிவு செய்யவேண்டும்.  

இப் பிரச்சினை ஏற்பட்ட தினங்களில் அரச தரப்பான எங்களுடன் பிரதமரும் அமைச்சரவையும்  இருக்கின்றது.  இருந்தபோதும்  சபாநாயகர்  எமதுகோரிக்கப்படி சபையின் நிகழ்ச்சி நிரலை தயாரிக்க வில்லை. ஐக்கிய தேசிய கட்சியினதும்  அவர்களைச் சார்ந்தவர்களினதும் தேவைக்காக சபாநாயகர் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டார்.  

பாராளுமன்ற சம்பிரதாயங்கள் மதிக்கப்படாதபோது எங்களால் மேலும் அமைதி காக்க முடியவில்லை. அதற்காக நாங்கள்  எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டி வந்தது.  நாங்கள் மேற்கொண்ட முறை சரியா என்ற கேள்வி எழுந்தபோதும் எங்களுக்கு வேறு வழிகள் எதுவும் தெரியவில்லை. 

சபாநாயகர் நம்பிக்கை இல்லாப் பிரேரனைகள் தொடர்பாக இதற்கு முன் நடந்து கொண்டுள்ள முறைகள் பற்றி பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருநாயாக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனையை 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கொண்டு வந்தபோதும் அதனை இரண்டரை மாதங்களுக்கு பின்  2016 ஜூன் மாதமே விவாத்த்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு  எதிராக  2017 ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனையை இன்று வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. வெளிவிவகார அமைச்சர் ரவிக்கு எதிராக இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரனையை 2017 ஆகஸ்ட் மூன்றாம் திகதி முன்வைத்தபோதும் அவர்  இராஜினாமா செய்தார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனயை  2015  மார்ச் மாதம் 21 ம் திகதி முன் வைக்கப்பட்டதுடன் அது இரண்டு கிழமைகளுக்கு பின் 2018 ஏப்ரல் மாதம் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு  எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையை  2018 நவம்பர் 14 ஆம் திகதி முன்வைத்த போது  எவ்வித விவாதமும் இன்றி 10 நிமிடங்களுக்கு பின் வாக்கெடுப்பு நடாத்தியது எந்த வகையில் நியாயம் என்பதை நான் மக்களிடம் கேட்க விரும்புகின்றேன். ஏனென்றால் பாராளுமன்றத்தில் நடக்கும் விடயங்களில் திரை மறைவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும் என்றும் அவர்தெரிவித்தார். எது  எவ்வாறு இருந்தாலும்  ஜனநாயகத்தை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/44762

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.