Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிக்கு எழுதப்பட்ட லசந்த மகளின் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, விளையாட்டு வீரர் தாஜூடீன் போன்றோர்களின் வழக்குகளை சிறப்பாக விசாரித்த திறமையான  போலீஸ் அதிகாரி, நிசாந்த டீ சில்வா பதவியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண பதவி ஒன்றுக்கு தூக்கி அடிக்கப்படுள்ளார்.

தப்ப முடியாத ஆதாரங்களுடன், இந்த வழக்கு நீதிமன்றம் வர உள்ள நிலையில், அவசர அவசரமாக பிரதமராகிய மகிந்தவின் அழுத்தத்தில், மைத்திரி இந்த வேலையினை செய்துள்ளார். லசந்தவின் வழக்கினை திசை திருப்ப வவுனியாவில் மோட்டார் சைக்ளில் வந்த இரு அப்பாவி தமிழர்கள் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, அனுராத புரத்தில் எரிக்கப்பட்டு, அவர்களது மோட்டார் சைக்கிளினை லசந்த கொலை நடந்த இடத்தில விட்டு தடத்தினை மாத்த நடந்த மோசடியினை, நிசாந்த துப்பறிந்து கண்டு பிடித்துள்ளார்.

ஜனாதிபதி இவ்வாறு செய்தமைக்கு, சட்ட ரீதியான காரணமோ, அல்லது அரசியல் அமைப்பு சபையின் அங்கீகாரமோ இருக்கவில்லை. இந்த அரசியல் அமைப்பு சபையினை உண்டாக்க மகிந்த, அரசியல் அமைப்பு சட்டம் வேண்டிய போதும், தனது காலத்தில் இணங்கி இருக்க வில்லை. ஆனால் மைத்திரி பதவிக்கு வந்ததும் அதனை அமைத்து இருந்தார்.

இப்போது, letter from grave என்று லசந்த மறைந்த பின்னர் வெளிவந்து உலங்கெங்கும் பரவிய கடிதம் போன்று அவரது மகள் அகிம்சா, மைத்திரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தவறு இழைக்காதீர்கள் மிஸ்டர் ஜனாதிபதி, எனதும், ஏனைய குடும்பங்களுக்கும் நடந்த அநீதிக்கு, கிடைக்க வேண்டிய நீதிக்கு குறுக்கே நின்று முயல்வில் தோல்வியினை சந்திக்காதீர்கள்.

போலீஸ் ஆணைக்குழு, அரசியல் அமைப்பு சபை, அல்லது நீதிமன்று உங்கள் இந்த உத்தரவை ஆய்வு செய்து, ரத்து செய்யும் நிலையினை உருவாக்காதீர்கள் என்று நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

image_1542697182-db2224c907.jpg

image_1542697260-93b199efe5.jpg

image_1542697242-5297f177af.jpg

image_1542697272-5e049dce46.jpg

http://www.dailymirror.lk/article/Lasantha-s-daughter-writes-to-President-158631.html

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடிதம் எழுப்பிய அதிர்வலைகளைத் தொடர்ந்து, இந்த தூக்கி அடிப்பினை தேசிய போலீஸ் ஆணைக்குழு ரத்து செய்துள்ளது. மைத்திரி அல்ல.

http://www.dailymirror.lk/article/Transfer-of-CID-s-IP-Nishantha-Silva-cancelled-158630.html

இந்த தூக்கி அடிப்பு உத்தரவில் கை ஒப்பம் வைத்த போலீஸ் மா அதிபர், அன்றைய தினம் காலை, மகிந்தவுக்கு பிறந்தநாள் ஆசி வேண்டி நடந்த மத நிகழ்வில் கலந்து கொண்டு, இந்த வழக்கின் முக்கிய சூத்திரதாரியான கோத்தபாய பின்னால், மறைவாக இருந்ததை, படம் பிடித்து போட்டு விட்டார்கள்.

அதாவது இந்த கோரிக்கை மகிந்த சகோதரர்களினால் வைக்கப் பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

image_1542618828-e44379c65c.jpg

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.