Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தூதராலய சாரதி வாகனத்துடன் கடத்தப்பட்டுள்ளார்!

Featured Replies

செவ்வாய் 10-04-2007 13:02 மணி தமிழீழம் [மோகன்]

இந்திய தூதராலய சாரதி வாகனத்துடன் கடத்தப்பட்டுள்ளார்

நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இந்திய தூதராலயத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு தூதுவர் ஒருவரை ஏற்றுக் கொண்டு வருவதற்கு சென்றபோது இரு தாக்குதலாளிகளால் அவ்வாகனத்தின் சாரதி எஸ்.விஸ்வநாதன் தாக்கப்பட்டு வாகனத்துடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சீதுவ காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவர்களது வாகனம் இரவு 11 மணியளவில் கொழும்பை விட்டு புறப்பட்டதாகவும் பேலியகொட தனுகாம பாலத்தலடியில் மற்றொரு மகழுர்தினால் துரத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

மகழுர்தில் துரத்தியவர்கள் வாகனத்தின் சாரதியை தமது மகழுர்தியில் இழுத்து போட்டதாகவும் பின் இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சொந்தமான வாகனம் மற்றைய தாக்குதலாளியால் ஓட்டிச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி மூலம்: பதிவு, நன்றி!

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இந்திய தூதரக வாகனம் கடத்தப்பட்டது- கொடூர சித்திரவதைக்குப் பின்னர் ஓட்டுநர் விடுவிப்பு

[செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2007, 15:09 ஈழம்] [செ.விசுவநாதன்]

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இந்தியத் தூதரகத்தின் வாகனம் நேற்று கடத்தப்பட்டது.

கொழும்பு அனைத்துலக வானூர்தி நிலையத்திலிருந்து தூதரக அதிகாரியை அழைத்துக் கொண்டு நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்த போது சீதுவ காவல்நிலைய பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தின் தென்கிழக்கில் இச்சம்பவம் நடந்தது.

வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி எஸ்.விஸ்வநாதன் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு விடுவிக்கப்பட்டார். கடத்தல்காரர்கள் தாக்கியதில் விஸ்வநாதனின் இரு பற்கள் உடைந்தன.

வாகன சாரதி விஸ்வநாதனை இன்று காலை 6 மணியளவில் தூதரக அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு இந்திய பிரதித் தூதுவர் ஏ.மாணிக்கத்தின் வாகனமும் அபேபுஸ்ஸ ஓய்வு இல்லத்தில் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டது. அந்த வாகனம் இன்னமும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.