Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை அழித்தாலே யுத்தத்தில் வெற்றி பெறமுடியுமென செயற்படுகிறது அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அழித்தாலே யுத்தத்தில் வெற்றி பெறமுடியுமென செயற்படுகிறது அரசாங்கம்

[10 - April - 2007]

* சொந்த மக்களையே கொல்லும் நிர்வாகம் என்று சாடுகிறார் ரணில்

- பி.ரவிவர்மன், அருளானந்தம் அருண் -

சொந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு தர முடியாமல் சொந்த மக்களையே கொல்வதற்கு வழி செய்யும் அரசு மகிந்த ராஜபக்ஷவின் அரசு என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடினார்.

தமிழர்களை அழித்தாலே யுத்தத்தில் வெற்றி பெற முடியும் என்றும் தமிழர்கள் அனைவரும் புலிகள் என்னும் ஒரு கருத்தை முன்னிறுத்தி அதற்கமைவாகவே மகிந்த அரசு செயற்படுகின்றது என்றும் குற்றம்சாட்டிய அவர், தமிழ் மக்களைக் கடத்துவதன் மூலம் புலிகளை இல்லாதொழிக்க முடியும் என யாரும் நினைத்தால் அது மிகவும் தவறான கருதுகோளாகவே இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆட்கடத்தல்கள், காணாமல்போதல் மற்றும் சட்டவிரோத கொலைகள் ஆகியவற்றிற்கு எதிராக செயற்படும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான மக்கள் கண்காணிப்புக் குழு, அண்மைக் காலமாக கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் காணாமல் போனவர்களின் சொந்தபந்தங்களை திரட்டி கொழும்பில் நேற்று நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு கதிரேசன் வீதியிலுள்ள வீரமைலன் மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில், அண்மைக் காலமாக காணாமல்போனவர்களின் சொந்தபந்தங்கள் ஆயிரக் கணக்கில் திரண்டிருந்தனர்.

தமது சகோதரர்களையும் பிள்ளைகளையும் கணவர்மார்களையும் மீட்டுத் தாருங்கள் என எதிர்க் கட்சித் தலைவரை சூழ்ந்து கொண்டு கதறிக் கதறி அழுத இந்த மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;

தமது சொந்தங்களையும் பந்தங்களையும் அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் இந்த மக்கள் மத்தியில் நான் உரையாற்றும் சந்தர்ப்பமே இன்று எனக்கு கிட்டியுள்ளது.

ஏன், இந்த மக்கள் கடத்தப்பட்டார்கள்? இவர்கள் தமிழர் என்பதால், இவர்கள் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்பதால் கடத்தப்பட்டார்கள் எனக் கூறப்படுகின்றது. சிலர் புலிகளுக்கு பணம் கொடுத்தார்கள் எனக் கூறப்படுகின்றது. புலிகள் பலரை பயமுறுத்தி பணம் பெற்றிருக்கலாம். ஆனால், அதுவல்ல பிரச்சினை. தமிழர்களை கடத்துவதன் மூலம் புலிகளை அழித்தொழிக்க முடியும் என எவராவது கருதுவார்களேயானால் மிகத் தவறான கருதுகோளாகும். புலிகளுக்கு 150 கோடிக்கு மேல் பணம் கொடுத்தவர் இந்த நாட்டின் துட்டகைமுனு. அந்த காசின் மூலம் புலிகள் விமானங்களை கொள்வனவு செய்துள்ளனர். புலிகள் மனித உரிமைகளை மதிப்பதாக நான் கூறவில்லை. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதை மதிக்க வேண்டும்.

ஆனால், இன்று இந்த அரசாங்கம் தனது சொந்த மக்களுக்கு பாதுகாப்புத் தர முடியாத, தனது நாட்டு மக்களையே கொலை செய்யும் அரசாங்கமாக உள்ளது.

இன்று தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் கடத்தப்படுகின்றார்கள். எமது கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் எமது நாட்டின் பெருமையை சர்வதேச அரங்கில் உயர்த்திக் கொண்டிருக்கும்போது இந்த அரசாங்கமோ இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கின்றது.

முத்தையா முரளிதரன் இன்று கொழும்பில் இருந்திருந்தால் அவரும் கடத்தப்பட்டிருப்பார். பின்னர் சில வேளைகளில் 1 கோடியளவு பணம் பெறப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருக்கலாம்.

சனத் ஜயசூரியவைக்கூட இவர்கள் கடத்தியிருப்பார்கள். ஆனால், அவரையோ விடுவித்திருக்கமாட்டார்கள். காரணம் மக்கள் அவரை ருகுணுவின் குமாரன் எனப் போற்றுவதால், இந்த நாட்டில் ஒரு ருகுணு குமாரன் மட்டுமே இருக்க முடியும் எனக் கூறி அவரை விட்டிருக்கமாட்டார்கள்.

ஜனாதிபதி யார் கடத்துவது என்று கேட்கிறார். இன்று ராஜபக்ஷவின் அரசானது ஊழல், மோசடி மற்றும் ராஜபக்ஷ குழுவினருக்கான போசணைக்காவே நடத்தப்படுகின்றது.

எமக்கிடையில் அதிகாரப் பகிர்வு, பரவலாக்கம், ஒற்றையாட்சி, சமஷ்டி முதற்கொண்டு திறந்த பொருளாதாரக் கொள்கை வரை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக அனைவருக்கும் ஒரே கொள்கையே இருக்க வேண்டும். கடத்தல்கள், காணாமல்போதல் தொடர்பாக மக்கள் இன்று வீதிக்கு இறங்கி போராடுகின்றனர். கடத்தப்பட்டவர்கள் பலர் பொலநறுவைக்கு அருகாமையில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக

ஆகா அணில் விக்கிரமாதித்தன் என்னமா படம் காட்டுறான்!

ஐக்கிய தேசிய கட்சி மட்டும் என்ன தமிழருக்கு சுதந்திரம் கொடுப்பதே சிறீ லங்காவில் அமைதி தோன்றுவதற்கு வழி என்று நினைத்தா செயற்படுகின்றது?

அவ்வாறாயின், ஆகக்குறைந்தது அவரசகாலச் சட்டங்கள், பயங்கரவாதச் சட்டங்கள் பாராளுமன்றத்திற்கு வரும்போது அவற்றை எதிர்த்தாவது வாக்களித்து இருக்கலாமே?

அடிப்படையில் பேரினவாதத்தில் இருந்துகொண்டு என்னமா நாகடம் ஆடுறான் பாவி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.