Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்டா பகுதியில் சீமான் தலைமையில் கஜா நிவாரண பணிகள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்டாவில் சீமான் தலைமையில் கஜா நிவாரண பணிகள்.. அகதிகள் முகாமில் உதவி.. பெரும் வரவேற்பு !

gajastormnaamtamilarseemandidasplendidwo

தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிய அளவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கஜா புயலால் டெல்டா பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. அங்கு அரசு பெரிய அளவில் இன்னும் நிவாரண பணிகளை செய்யவில்லை.இந்த நிலையில் அங்கு நிவாரண பணிகளை சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி செய்து வருகிறது.

மூன்று நாட்கள்

நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மூன்று நாட்கள் இந்த நிவாரண பணிகள் திட்டமிடப்பட்டு இருக்கிறது. நேற்று காலை தொடங்கிய இந்த நிவாரண உதவி வழங்கும் பணிகள் நாளை இரவு வரை நடைபெறும். மூன்று நாட்களில் அனைத்து டெல்டா மாவட்டங்களிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உதவிகளை வழங்க சீமான் திட்டமிட்டுள்ளார்.

அகதிகள் முகாம்

புதுக்கோட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களும் இந்த புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அங்கு பெரிய அளவில் உதவிகள் சென்று சேரவில்லை. அரசு அதிகாரிகள் அந்த பகுதியில் கவனம் செலுத்தவில்லை என்று புகார் வந்துள்ளது.

சீமான் சென்று பார்த்தார்

இந்த நிலையில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை ஈழத்தமிழர் முகாமில் சீமான் ஆய்வு செய்தார். அங்கிருந்த மக்களிடம் நிவாரண பொருட்களை வழங்கினார். அவரிடம் ஈழத்தமிழர்கள் நிவாரண பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று குற்றச்சாட்டு வைத்தனர்.

வேறு எங்கு எல்லாம் சென்றார்

இது மட்டுமில்லாமல் டெல்டாவின் பிறபகுதிகளுக்கும் சென்று அவர் நிவாரண பொருட்களை வழங்கினார். திருவாரூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்றார். இன்னும் தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் செல்ல இருக்கிறார்.

இவரது நிவாரண பணிகளுக்கு மக்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

 

https://tamil.oneindia.com/news/thanjavur/gaja-storm-naam-tamilar-seeman-did-splendid-work-relief-operation/articlecontent-pf337906-334708.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் செம ஐடியா - விளக்கு உதவி  

ntk-cadres-send-kerosene-lights-to-delta

ெ்னை:  காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு விதம் விதமாக பிற மாவட்ட மக்கள் உதவி வருகின்றனர்.இன்னும் இன்னும் என்று நீண்டு கொண்டே போகிறது காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு செய்து வரும் உதவிகள் காரணம், அந்த அளவுக்கு மிகப் பெரிய அளவிலான பாதிப்பை டெல்டா சந்தித்துள்ளது. இது வரலாறு காணாத பாதிப்பு.

அதை விட முக்கியமானது, அத்தனை பேரும் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.எத்தனை பொருட்களை அனுப்பினாலும் அது போதாது என்ற நிலையில்தான் உள்ளது காவிரி டெல்டா.

அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் நிவாரண உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் டெல்டா பகுதி மக்கள்.

முதல் ஆளாய் நாம் தமிழர்

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் களத்தில் இறங்கி படு ஜரூராக பணியாற்றி வருகின்றனர். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இவர்கள் இரவு பகலாக காவிரி டெல்டாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி வருகின்றனர்.

குவியும் பாராட்டுகள்

புயல் பாதித்த பகுதிகளில் யாரும் அழைக்காமலேயே நாம் தமிழர் கட்சியினர்தான் முதலில் களம் இறங்கி பணிகளில் இறங்கியதாக பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் உள்ளன. இதை சமீபத்தில் ஒரு டிவியில் பேசிய ஒருவர் நினைவு கூர்ந்தார். அரசியல் கட்சிகள் யாருமே வரவில்லை. சீமான்தான் வந்தார் என்று அவர் கூறியிருந்தார்.

வித்தியாசமான ஐடியா.

ntk-cadres-send-kerosene-lights-to-delta

இந்த நிலையில் சென்னை ஆவடியில் உள்ள நாம் தமிழர்கட்சியினர் வித்தியாசமான ஒரு யோசனையை கையில் எடுத்து அசத்தியுள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இப்போது மின்சாரம்தான் பெரிய பிரச்சினை.

எப்ப கரண்ட் வரும்னே தெரியாது என்ற நிலையில்தான் உள்ளனர். காரணம் அத்தனை மின் வயர்களும் அறுந்து போய் விட்டன, கம்பங்கள் சாய்ந்து விட்டன. டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்து விட்டன.

மண்ணெண்ணெய் விளக்கு

இந்த நிலையில் ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் பேராரூட்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் மண்ணெண்ணையை மொத்தமாக வாங்கி அதை சிறு சிறு பாட்டில்களில் நிரப்பி, திரி போட்டு விளக்கு போல ரெடி செய்து அனுப்புகின்றனர். இந்த ஐடியாவுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

https://tamil.oneindia.com/news/chennai/ntk-cadres-send-kerosene-lights-delta-region-334945.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.