Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்துக்கெதிரான 3ஆவது டெஸ்ட் நாளை: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்கெதிரான 3ஆவது டெஸ்ட் நாளை: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?

Editorial / 2018 நவம்பர் 22 வியாழக்கிழமை, பி.ப. 11:40 Comments - 0

image_cfe508040f.jpgimage_ffe297304a.jpg

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலிரண்டு போட்டிகளிலும் வென்றுள்ள இங்கிலாந்து ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு மூன்றாவது டெஸ்ட் ஆரம்பிக்கின்றது.

இந்நிலையில், குறித்த போட்டியில் எந்தமுடிவு பெறப்பட்டாலும் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் மூன்றாமிடத்திலிருக்கும் இங்கிலாந்து இரண்டாமிடத்துக்கு முன்னேறும் என்பதோடு, ஆறாமிடத்திலிருக்கும் இலங்கை ஏழாமிடத்துக்கு கீழிறங்குமென்றபோதும் தமது நம்பிக்கையை வளர்த்தெடுக்கொள்வதற்கும் அழுத்தங்களைக் குறைப்பதற்கும் குறித்த போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

எனினும் இலங்கையணிக்கு வருத்தமளிக்கும் செய்தியாக, காயத்திலிருந்து குணமடைந்து வரும் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் இப்போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இங்கிலாந்தின் இறுதி இனிங்ஸில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அகில தனஞ்சய தனது பந்துவீச்சுப்பாணியை சோதனைக்குட்படுத்துவதன் காரணமாக இப்போட்டியைத் தவறவிடுகின்றார்.

அந்தவகையில், இருவரினதும் இழப்பு இலங்கையணியில் உணரப்படுகின்றபோதும் சந்திமாலுக்குப் பதிலாக தனுஷ்க குணதிலகவும் அகிலவுக்குப் பதிலாக நிஷான் பிரீஸும் இலங்கைக் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில், சந்திமாலுக்குப் பதிலாக கடந்த டெஸ்டுக்கான இலங்கைக் குழாமில் சேர்க்கப்பட்டிருந்த சரித் அசலங்க குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்திமாலுக்குப் பதிலாக கடந்த போட்டியில் விளையாடிய றொஷேன் சில்வாவுடன் சிரேஷ்ட வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ், திமுத் கருணாரத்ன ஆகியோரிலேயே இலங்கையின் துடுப்பாட்டம் தங்கியுள்ளது. இதுதவிர, கெளஷால் சில்வாவை அணியில் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படும் தனுஷ்க குணதிலகவும் துடுப்பாட்டத்தில் மேலும் பலம் சேர்க்கலாம்.

பந்துவீச்சுப் பக்கம் அகிலவுக்குப் பதிலாக லக்‌ஷான் சந்தகானும் களத்தடுப்பில் கடந்த போட்டியில் சொதப்பியிருந்த மாலிந்த புஷ்பகுமாரவுக்குப் பதிலாக நிஷான் பீரிஸும் அணியில் இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மறுபக்கமாக, கடந்த போட்டியில் விளையாடிய அணியிலிருந்து இரண்டு மாற்றங்களை இங்கிலாந்து மேற்கொண்டுள்ளது. சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்னொரு சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் ப்ரோட்டால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளார். இதுதவிர, காயமடைந்துள்ள சாம் கர்ரனுக்குப் பதிலாக மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக ஜொனி பெயார்ஸ்டோ களமிறங்கவுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இங்கிலாந்துக்கெதிரான-3ஆவது-டெஸ்ட்-நாளை-ஆறுதல்-வெற்றி-பெறுமா-இலங்கை/44-225648

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை டெஸ்ட்: முதல் இன்னிங்ஸிற்காக இங்கிலாந்து 336 ஓட்டங்கள் குவிப்பு!

625.0.560.380.280.600.660.800.668.160.90-3-720x450.jpg

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 336 ஓட்டங்களை குவித்துள்ளது.

இதற்கமைய தற்போது இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு- எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, போட்டியின் இரண்டாவது நாளான இன்று வரை, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி 336 ஓட்டங்களை குவித்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஜோனி பேர்ஸ்டொவ் 110 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் சந்தகான் 5 விக்கெட்டுகளையும், தில்ருவான் பெரேரா 3 விக்கெட்டுகளையும், மலிந்த புஷபகுமார 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

http://athavannews.com/இலங்கை-டெஸ்ட்-முதல்-இன்ன/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாக்குப் பிடித்து ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 327 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களை பெற்றுள்ளது.

eng2.jpg

கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்டி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 7 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்னிங்ஸுக்காக 312 ஓட்டங்களை குவித்த வேளை முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து இரண்டாம் நாளான நேற்று 92.5 ஓவர்களை எதிர்கொண்டு 336 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக ஜோனி பேயர்ஸ்டோ 110 ஓட்டத்தையும், பென் ஸ்டோக்ஸ் 57 ஓட்டத்தையும்,  அணித் தலைவர் ஜோ ரூட் 46 ஓட்டத்தையும், மொய்ன் அலி 33 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர். 

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் லக்ஷான் சந்தகன் 5 விக்கெட்டுக்களையும், தில்றூவான் பெரேரா 3 விக்கெட்டுக்களையும், மலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை 65.5 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. 

அதன்படி திமுத் கருணாரத்ன 83 ஓட்டத்தையும், தனஞ்ய டிசில்வா 73 ஓட்டத்தையும், அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷித் 5 விக்கெட்டுக்களையும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ஜெக் லெச் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து நேற்றைய நாளிலேயே 96 ஓட்ட முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது 3 ஓட்டங்களுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர ஆரம்பித்த இங்கிலாந்து அணி 69.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 327 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

அணி சார்பாக ஜோஸ் பட்லர் 64 ஓட்டத்தையும், பென் ஸ்டோக்ஸ் 42 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்றுவான் பெரேரா 5 விக்கெட்டுக்களையும், மலிந்த புஸ்பகுமார 3 விக்கெட்டுக்கனையும், லக்ஷான் சந்தகன் 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர். 

sril1.jpg

327 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவின்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் 17 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களை பெற்றுள்ளது.

eng.jpg

sril2.jpg

ஆடுகளத்தில் குசல் மெண்டீஸ் 15 ஓட்டத்துடனும், லக்ஷான் சந்தகன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். 

 

http://www.virakesari.lk/article/45161

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.