Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மக்களை கடத்துவதால் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த முடியாது': ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'மக்களை கடத்துவதால் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த முடியாது': ரணில்

[செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2007, 20:09 ஈழம்] [அ.அருணாசலம்]

"தமிழ் மக்களை காணாமல் போகச் செய்வதன் மூலமோ அல்லது கடத்துவதன் மூலமோ தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த முடியாது. மக்களை கடத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தலாம் என அரசாங்கம் நினைத்தால் அது அவர்களின் தவறாகவே இருக்கும்" என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் காணாமல் போதல், கொல்லப்படுவோர் தொடர்பான பொது மக்கள் கண்காணிப்புக் குழுவினால் நேற்று திங்கட்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

"இந்த பிரச்சினைகளால் தமிழ்ச் சமூகத்தின் வர்த்தகர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை, சிங்கள, முஸ்லிம் வர்த்தகர்களும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர். யார் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டாலும், யார் மனித உரிமைகளை பாதுகாத்தாலும், யார் அமைதியான சமுதாயத்தை உருவாக்கினாலும் ஐக்கிய தேசியக் கட்சி அவர்களுடன் இணைந்து கொள்ளும்.

சிறிலங்காவின் துடுப்பாட்ட அணி நாட்டுக்கு நற்பெயரை ஈட்டித்தரும், ஆனால் அரசாங்கம், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமல் போதல் போன்ற செயற்பாடுகளின் மூலம் அனைத்துலகத்தில் நாட்டின் பெயருக்கு களங்கத்தை உண்டு பண்ணிவிட்டது. இந்த பிரச்சனைகளில் ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. இது தொடர்பாக பத்திரிகை ஆசிரியர்களிடம் நான் கேள்வி கேட்ட உள்ளேன்.

தென் இந்தியாவில் உள்ள ஒரு இராணுவ முகாமில் ராடார்களை பொருத்தியிருந்ததாக ஒரு சிங்கள நாளேடு தவறான தகவலையும் வழங்கியிருந்தது. மனித உரிமைகளை காக்கும் நோக்கத்துடனே சுதந்திரக் கட்சியுடன் நாம் புரிந்துணர்வு ஓப்பந்தம் ஒன்றை செய்திருந்தோம். ஆனால் அந்த சந்தர்ப்பமும் இழக்கப்பட்டு விட்டது. எனது கட்சியில் உள்ள சிலருக்கு அமைச்சர் பதவிகள் தேவைப்பட்ட போதும் நான் மனித உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என விரும்பினேன்" என்றார் அவர்.

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதில் தம்மால் முடிந்த உதவிகளை தாம் செய்வதாக ரணில் அங்கு குழுமியிருந்த மக்களுக்கு உறுதி மொழிகளும் வழங்கினார். இந்த கூட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பெருமளவில் கூடியிருந்ததுடன், சுயாதீனமான அனைத்துலக மனித உரிமை செயற்குழு அமைக்கப்பட வேண்டும் என்ன மனுவும் ரணிலிடம் கையளிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பெண் ஒருவர், "எனது கணவரை மீட்டுத் தாருங்கள், அவர் காணாமல் போனதில் இருந்து நான் எனது 5 பிள்ளைகளுடன் உதவியற்று வாழ்கிறேன்" என உருக்கமாக கேட்டுக் கொண்டார்.

இதனிடையே "நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் காணாமல் போதல் போன்ற விடயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் தலையிட வேண்டும்" எனவும், "அப்படியான சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவு அளிக்கும்" எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

"நாட்டில் 900-க்கும் மேற்பட்ட மக்கள் காணமல் போவதற்கு அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவும், அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களுமே காரணம்" என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த பரந்த அளவிலான மக்கள் காணாமல் போவதற்கு அரச அதிகாரிகளும், கருணா குழுவினருமே காரணம். இதனை தடுப்பதற்கு மேலும் தாமதிக்காது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் செயற்குழு உடனடியாக சிறிலங்காவில் அமைக்கப்பட வேண்டும் என இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கொழும்பில் காணாமல் போதல், கொல்லப்படுவோர் தொடர்பான பொது மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புதினம்

"தமிழ் மக்களை காணாமல் போகச் செய்வதன் மூலமோ அல்லது கடத்துவதன் மூலமோ தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த முடியாது. மக்களை கடத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தலாம் என அரசாங்கம் நினைத்தால் அது அவர்களின் தவறாகவே இருக்கும்!" என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.....

அணில் விக்கிரமாதித்தனுக்கு அனுபவம் பேசுகின்றது! மனுசன் நாயாக் கஸ்டப்படுறான், அந்த முதல்வன் தமிழ் சினிமா படத்தில வந்தமாதிரி எங்கள் அணில் விக்கிரமாதித்தனை ஒருநாளைக்காவது முதல்வனாக, சிறீ லங்கா ஜனாதிபதி பதவியில இருக்க விடுங்கப்பா! பிளீஸ்!

இல்லாவிட்டால் ஜனாதிபதி பகல் கனவுடனேயே, ஒரு காலத்தில அணில் விக்கிரமாதித்தன் இறந்து போனால், பிறகு அவனது ஆத்மா சாந்தி அடையாமல், சிறீ லங்கா அரசியலை சுற்றிச் சுற்றி வலம் வந்து பேயாட்டம் ஆடவைக்கும்! :rolleyes::unsure::)

பிறகு எல்லாரும் திரும்பவும் கஸ்டப்படவேணும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.