Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2009 வரை 84,509 ஏக்கரில் இருந்த இராணுவம், 2018 டிசம்பரின் பின் 12000 ஏக்கரில் நிலைகொள்ளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
November 29, 2018
  •  
     

sri-lanka-army-land.jpg?resize=590%2C443
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1300 ஏக்கர் தனியார் காணி இராணுவத்தினர் வசமுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 25,000 ஏக்கர் தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத காணிகளே இவ்வாறு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பிரகாரம், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் விடுவிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் ஆராய்வதற்காக 5 வருட செயற்பாட்டுக்காலத்தைக் கொண்ட வேலைத்திட்டமொன்று பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டது.

 

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இதுவரை 95 வீதமான காணிகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 5 வீதமான காணிகளே விடுவிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. பலாலி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு, மயிலிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மீள்குடியர்த்தப்பட்ட மக்களுக்கே இவ்வாறு காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே பணிப்புரை விடுத்திருந்தார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை 84,509 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமிருந்ததாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 12,000 ஏக்கர் காணியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பார்கள் எனவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய சில காரணங்களுக்காக குறித்த காணி விடுவிக்கப்படாது எனவும் இலங்கை இராணுவம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

http://globaltamilnews.net/2018/105064/

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

army-1-720x449.jpg

வடக்கு- கிழக்கில் படையினரின் இருப்பு தொடரும்: இராணுவம் திட்டவட்டம்

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் 12 ஆயிரம் ஏக்கர் காணியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பார்கள் என இராணுவம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இராணுவம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 25,000 ஏக்கர் தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பலாலி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கேப்பாப்பிளவு, மயிலிட்டி ஆகிய பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கே இக்காணிகள் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பில் 5 வருட செயற்பாடு கொண்ட வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி 95 சதவீதமான காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படடுள்ளது. மீதமுள்ள 5 வீத காணிகள் மாத்திரமே இராணுவத்தினர் வசம் உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் பாதுகாப்பு தரப்பினரிடம் இருக்கும் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்  12000 ஏக்கர் காணிகள், தேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய சில காரணங்களுக்காக விடுவிக்கப்படாது என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://athavannews.com/வடக்கு-கிழக்கு-காணிகளில/

  • கருத்துக்கள உறவுகள்

12 ஆயிரம் என்ன, 12 லட்சத்தையும் பிடித்து வைத்துக்கள்ளுங்கள்.

பிரபாகரன் என்ன நாங்கள் தவமிருந்து வேண்டிப் பிரார்த்தனை செய்தா வந்தார்..! நீங்கள்தானே வரவழைத்தீர்கள்...!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.