Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக திறப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG20181207110827-720x450.jpg

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக திறப்பு! 

போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில்,  இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக  திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் ரெஜினோல்ட் குரே, பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

IMG20181207110411.jpg

IMG20181207111801.jpg

http://athavannews.com/ஜனாதிபதி-கிளிநொச்சிக்க/

  • கருத்துக்கள உறவுகள்

பதவியிழந்த அமைச்சர்கள் புடைசூழ இரணைமடுவுக்கு வந்த மைத்திரி

 

iranamadu-ms-1-300x200.jpgஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன், புனரமைப்புச் செய்யப்பட்ட கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் வான்கதவு ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால  சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

34 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கும் வசதி கொண்டிருந்த இரணைமடுக் குளம், தற்போது புனரமைக்கப்பட்டு, 36 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட இரணைமடுக் குளத்தில் முதல் முறையாக – நேற்று நள்ளிரவு நீர் 36 அடி உயர கொள்ளளவை எட்டியது.

இந்த நிலையில் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, புனரமைக்கப்பட்ட குளத்தின் வான் கதவு ஒன்றைத் திறந்து வைத்ததுடன், அங்கு நிறுவப்பட்டிருந்த நினைவுக்கல்லையும் திறந்து வைத்தார்.

இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் கொள்ளளவை விட ஒரு அங்குலமே அதிகமாக இருந்ததால், அரை அங்குலத்துக்கே சிறிலங்கா அதிபரால் வான்கதவு ஒன்றுமாத்திரம் திறந்து விடப்பட்டது.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் அண்மையில் பதவிஇழந்த அமைச்சர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவினால் பதவியிழந்த அமைச்சர்களான, சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, சி.பி.ரத்நாயக்க, அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபருடன் பங்கேற்றிருந்தனர்.

iranamadu-ms-1.jpg

iranamadu-ms-2.jpgiranamadu-ms-3.jpghttp://www.puthinappalakai.net/2018/12/07/news/35174

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.