Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி 46 பேருக்கு வட. மாகாணத்திற்கு நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SC-declares-MD-PTV%E2%80%99s-appointment-illegal-Has-it-exposed-the-PML-N-640x336-720x450.jpg

அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி 46 பேருக்கு வட. மாகாணத்திற்கு நியமனம்

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி பெரும்பான்மையினத்தை சேர்ந்த 46 பேருக்கு வட. மாகாணத்திற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஆறு வாரகாலமாக அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் எரிபொருள் மின் சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட சியம்பலாப்பிட்டியவே இந்த நியமனங்களை வழங்கியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நியமனங்களை இரத்து செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அபிவிருத்தி செயலணியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்தி வடக்கு மாகாணத்தில் இலங்கை மின்சார சபையில் காணப்பட்ட வெற்றிடங்களிற்கு தெற்கு இளைஞர்களை நியமனம் செய்துள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக க.பொ.த உயர்தர கல்வி தகுதி உடையவர்களுக்கு வழங்க கூடிய வெற்றிடங்களை, க.பொ.த. சாதாரண தர கல்வி தகுதியுடையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றிடங்களிற்கு எமது மாகாண இளைஞர்களை நியமனம் செய்யுமாறு நாம் நீண்டகாலமாக கோரி வந்த நிலையில், அந்த வெற்றிடங்களிற்கு இவ்வாறு இரகசியமான முறையில் எந்த விண்ணப்பமும் கோராமல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட அனைவருமே கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறிந்துள்ளோம். குறித்த நியமனங்களை இரத்து செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அபிவிருத்தி செயலணியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/அரசியல்-குழப்ப-நிலையை-பய/

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு வெற்றிடங்களிற்கு சிங்களவர் நியமனம்: மஹிந்தவின் பிரதமர் காலத்தில் நடந்த ‘திருவிளையாடல்’!

December 18, 2018
 

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையையடுத்து, உருவாக்கப்பட்ட மஹிந்த  ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவைக் காலத்தில் வடக்கில் சிங்களவர்கள் 46 பேருக்கு அவசரகதியில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்த விடயத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒக்ரோபர் 26 குழப்பத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அமைச்சரவையொன்றை உருவாக்கினார் ஜனாதிபதி. அதில் மின்சக்தி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நியமிக்கப்பட்டார். அரசியல் குழப்பநிலை நிலவுதால், புதிதாக யாருக்கும் நியமனம் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி விசேட சுற்றுநிருபம் ஒன்றையும் வழங்கியிருந்தார். ஆனால், அதையும் மீறி கேகாலை மாவட்டத்தை சேர்ந்த 46 பேருக்கு வடக்கு மின்சாரசபையில் புதிதாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்களிற்காக விண்ணப்பங்களும் கோரப்பட்டிருக்கவில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மின்சாரசபையின் வடபிராந்திய அலுவலகங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 46 பேரையும் நீக்கிவிட்டு, வடக்கை சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் நியமிக்கப்பட வேண்டுமென்றும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

 

 

http://www.pagetamil.com/28635/

16 hours ago, கிருபன் said:

மின்சாரசபையின் வடபிராந்திய அலுவலகங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 46 பேரையும் நீக்கிவிட்டு, வடக்கை சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் நியமிக்கப்பட வேண்டுமென்றும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

இதெற்கெல்லாம் வழக்கு போட்டு வாதாட உங்களுக்கு நேரம் கிடைக்காதே!

வாதாடினால் சிங்கள-பௌத்த அரசின் நீதித்துறையின் சுயரூபம் வெளிப்பட்டுவிடும் என்ற கவலையும், தனக்கு வீசப்படும் எலும்புத் துண்டுகள் பிறகு கிடைக்காது என்ற கவலையும் சுமந்திரனுக்கு இருப்பதால் வழக்கு போடமாட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.