Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சிக்கு வந்தால் தமிழ் அகதிகள் உள்ள 'நௌரு' தடுப்பு நிலையம் மூடப்படும்: அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர்.

Featured Replies

ஆட்சிக்கு வந்தால் தமிழ் அகதிகள் உள்ள 'நௌரு' தடுப்பு நிலையம் மூடப்படும்: அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர்.

ஆட்சிக்கு வந்தால் தமிழ் அகதிகள் உள்ள 'நௌரு' தடுப்பு நிலையம் மூடப்படும் என்பதே எமது கட்சியான தொழிற்கட்சியின் நிலைப்பாடாகும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் கெவின் றட் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக வந்துள்ள 83 பேரையும் அகதிகளாக ஏற்க உதவ வேண்டும் எனக்கோரி பிறிஸ்பேர்ன் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அனுப்பிய கடிதத்துக்கு அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெவின் றட் பிறிஸ்பேர்ன் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்திற்கு எழுதிய பதில் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"கிறிஸ்மஸ் தீவில் அரசியல் தஞ்சம் கோரும் 82 இலங்கையர்களும் 'நௌரு' தீவுக்கு அனுப்பப்பட்டு, அங்கே தடுத்து வைக்கப்பட்டு பரிசீலிக்கப்படுவர் என குடிவரவு, குடியுரிமை அமைச்சர் கெவின் அன்ட்ரூ 2007 மார்ச் 15 ஆம் நாள் அறிவித்தார். எஞ்சிய ஒருவர் இப்பொழுது பேர்த் மருத்துவமனையில் உள்ளார்.

அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவிலேயே பரிசீலிக்கப்படல் வேண்டும் என்பதே ஆரம்பத்திலிருந்தே தொழிற்கட்சியின் நிலைப்பாடு ஆகும். அவர்களுக்குப் பாதுகாப்புத் தேவையில்லை எனில் அவர்களை உடனே திருப்பி அனுப்பி வைக்கப்படல் வேண்டும். அவர்கள் அரசியல் நிலையால் அடக்குமுறை அட்டூழியங்களுக்கு ஆளாக்கப்படக்கூடிய அகதிகள் என்பது உண்மையாகவே ஆராய்ந்து அறியப்பட்டால் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படல் வேண்டும்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் கொண்டு சென்றதாலேயே இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்தார்கள். 396 மில்லியன் டொலர் செலவில் கிறிஸ்மஸ் தீவில் நிர்மாணிக்கப்படுகின்ற குடிவரவுப் பரிசீலனை நிலையம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது தவிர கிறிஸ்மஸ் தீவில் ஏற்கனவே இருக்கின்ற வசதிகள் இலங்கையர்களை பரிசீலனை முடியும் வரை வைத்திருக்கத் தாராளமாகப் போதும்.

இப்படியான வசதிகள் இருந்தும் அரசியல் தஞ்சம் கோருபவர்களைத் தடுத்து வைத்துப் பரிசீலிப்பதற்கு நௌருவுக்கு ஜோன் ஹவார்ட் அரசாங்கம் அனுப்புகிறது. 'நௌரு' வில் உள்ள குடிவரவுப் பரிசீலனை நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் 8 பேருக்கு மட்டும் மாதம் 2 மில்லியன் டொலரை அவுஸ்திரேலிய வரி செலுத்துவோர் செலவழிக்கின்றனர். இனிமேல் எவ்வளவு செலவாகும் என்பது அரசாங்கத்துக்குக் கூடத் தெரியாது. பசுபிக் தீர்வு என்று 'நௌரு' மற்றும் 'மானஸ்' ஆகிய தீவுகளில் உள்ள நிலையங்களால் அவுஸ்திரேலியர்களுக்கு 270 மில்லியன் டொலர் ஏற்கனவே செலவாகி உள்ளது.

இலங்கையர்கள் அகதிகளாகக் காணப்பட்டாலும் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டுவரப்பட மாட்டார்கள் என அரசாங்கம் தெரிவித்தது. 'ரம்பா' என்ற கப்பலில் தஞ்சம் கோரி வந்தவர்களை 'நௌரு' மற்றும் 'மானஸ்' ஆகிய தீவுகளுக்கு அனுப்பியது பற்றி 2001 ஒக்ரோபர் 2 ஆம் நாள் ஜோன் ஹவார்ட் பின்வருமாறு கூறியிருந்தார்:

'அந்தத் தஞ்சம் கோரி வந்தவர்களின் விருப்பம் அவுஸ்திரேலியாவுக்குள் வருவதே. அவர்களைக் கடத்தியவர்கள் அவர்களுக்குக் கூறியதும் அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவோம் என்பதே. இக் காரணங்களால் கடைசிவரை அவர்களை இங்கே வர அனுமதிக்க மாட்டேன்.'

ஆனாலும் 2002 இலிருந்து 2006 வரையான காலத்தில் தஞ்சம் கோரி வந்து 'நௌரு' மற்றும் 'மானஸ்' ஆகிய தீவுகளுக்கு அனுப்பியிருந்த 1,062 பேரில் பெரும்பான்மையினர் அவுஸ்திரேலியாவிலேயே மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர் என்பதே உண்மை. 615 பேர் அவுஸ்திரேலியாவிலும், 401 பேர் நியூசிலாந்திலும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். சுவீடன், நோர்வே, டென்மார்க், கனடா அனைத்திலும் எல்லாமாக 50 பேருக்கும் குறைவானோரே மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

'நௌரு' வை குடிவரவுத் தடுப்பு நிலையமாக உபயோகிக்கும் ஹவார்ட் அரசாங்கத்தின் செயல் பண விரயமானது மட்டுமல்ல. மனிதாபிமானம் அற்றதும் கூட. அவுஸ்திரேலியச் சட்டங்கள் 'நௌரு'வில் செல்லுபடியாகாதவை. எனவே 'நௌரு'வில் தடுத்து வைக்கப் பட்டோரின் நிலையை மேம்படுத்த என 2005 இல் நிறைவேற்றப்பட்ட சட்ட நடவடிக்கைகள் எவற்றையும் அங்கே அமுலாக்க முடியாது. சிறார்களை தடுத்து வைத்தலும், கால வரையறை அற்ற தடுத்து வைத்தலும், மீண்டும் தொடரும்.

அரசாங்கத்தின் வெட்டிப் பேச்சுக்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டோரில் கூடுதலானோர் அவுஸ்திரேலியாவுக்கே திருப்பிக் கொண்டுவரப் படுவர் என்பது கடந்த கால அனுபவம். இக்காலத்தில் பிரதமரின் கௌரவத்தைப் பாதுகாக்க என்றே தனிமனிதர் தேவையற்ற அல்லல்களுக்கு உள்ளாகின்றனர்.

ஒழுங்கான குடிவரவுத் திட்டத்தில் தொழிற் கட்சி நம்பிக்கை கொண்டது. எவ்வித மனிதக் கடத்தலையும் தொழிற் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தோர் இன்னுமொரு இடத்திற்கு மாறுவதற்கு எதிரான கடும் நடவடிக்கைகளையும் தொழிற் கட்சி ஆதரிக்கிறது. அதேவேளை, அவுஸ்திரேலியா தன் அனைத்துலகக் கடமைகளை மதித்து நடக்க வேண்டும், மக்களை மனிதாபிமானத்துடன் நடத்தவும் வேண்டும்.

இந்த ஹவார்ட் அரசாங்கத்தின் கொள்கையை விடவும் அவுஸ்திரேலியா சிறந்தது என்பது என் நம்பிக்கை. தொழிற் கட்சி ஆட்சிக்கு வந்தால் 'நௌரு' மற்றும் 'மானஸ்' ஆகிய தீவுகளில் உள்ள தடுப்பு நிலையங்களை உடனே மூடி, பசுபிக் தீர்வை முடிவுக்குக் கொண்டுவரும்."

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

-Puthinam-

அவுஸ்திரேலியாவில் வாழும் யாழ் கள உறவுகள் இச்செய்தியைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை இங்கு வைத்தால் நன்றாக இருக்கும், குறிப்பாக அவுஸ்திரேலியா அரசியலில் ஈழத் தமிழர்களின், தமிழீழத்தின் செல்வாக்கு பற்றிய உங்களை கருத்துகளை இட்டால் நன்றாக இருக்கும்..

செய்தியின் உள் அர்த்தத்தை சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை...

அவுஸ்திரேலியா அரசாங்கத்தில் செல்வாக்கு தமிழர்களிடம் இருந்தாலும் அது சிதறி கிணற்றில் விழுந்த தேங்காய் போலவே இருகின்றது.ஆனால் எல்லா அரசியல்வாதிமாரும் இப்படித்தான் எலக்ஸன் வருகுது அதுக்குத்தான் இவ்வளவு பாடுபடுகிரார் எதிர்கட்சி தலைவர்.ஆனால் ஜோன் ஹவார்ட் போல கடும்போக்குவாதி இல்லை என்பது நிதர்சனம்.இதனால்தான் இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரம் அவ்வளவு எடுபடாதுக்கான காரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.