Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகிக்கும் கொழும்பு அரசியல் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேறு வழி இன்றி ரணிலை மீண்டும் பிரதமராகிய மைத்திரி, மகிந்தவின்  வழிகாட்டுதலில் ரணிலுக்கு பல வழிகளில் நிறைவேற்று அதிகாரம் மூலம் ஆப்படிப்பதன் மூலம் வேறு வழி இன்றி தேர்தலுக்கு இணங்க வைக்க முயல்கின்றார். மாகாண ஆளுனர்களை மாத்தியது, அமைச்சு செயலாளர்களை, அமைச்சர்கள் கோரிக்கைக்கு அமையாது, தான் விரும்பியவர்களை மட்டும் நியமித்தது, அமைச்சர்களுக்கு, வேண்டுமென்றே, திணைக்களங்களை மாறி கொடுத்தது போன்ற பல ஆப்புக்கள்

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்க மறுத்ததும், 30 அமைச்சர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதும் ஒரு வகை ஆப்பு தான்.

இதன் முதல் படியாக தான் சார்ந்த ஐக்கிய ஜனநாய முன்னணியினையும் தேசிய அரசில் இருந்து விலக செய்து, தனது சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்துடன் சேர கூடாது என்று தடை போட்டு விட்டார்.  

இவரது சுஜ நல நோக்கமான, மகிந்தவின் ஆதரவுடன், மீண்டும் இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுவதே, இவரது இந்த ஆப்புகளுக்கு காரணம்.

ஆனால் , அவர் நினைத்ததுக்கு  மாறாக சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர், மகிந்தவின் புதிய தாமரைக் கட்சி யுடன் சேரந்து இயங்க விருப்பம் தெரிவிக்க வில்லை. மாறாக தம்மை ரணில் அரசுடன் சேர கட்சி தலைவர் என்ற ரீதியில்  அனுமதிக்குமாறு கோரினர்.  

மறுத்த மைத்திரி, சுதந்திரக்  கட்சி அலுவலகத்துக்கு பூட்டு  போட்டு விட்டு தாய்லாந்து போனார்.

காரணம் என்ன என்று இப்போது தெரிந்து விட்டது.

சந்திரிகா களத்தில் இறங்கி  விட்டார். தனது தந்தை ஆரம்பித்து, தாயாரால், தன்னால் வளர்க்கப் பட்ட சுதந்திரக் கட்சி, மைத்திரியினால், மகிந்தவிடம் அடகு, வைக்கப்பட்டு, அழிக்கப் பட விட முடியாது என அவர் களத்தில் இறங்கி உள்ளார் என்பதே வெளியில் சொல்லப் படும் காரணம்.

ஆனாலும் உண்மையான விடயம் அதுவல்ல.

அவர் பின்னால், 20 தொடக்கம் 30 வரையான சுதந்திரக் கட்சி எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் துணையுடன் 150 பாராளுமன்ற உறுப்பினர்களை திரட்டி, புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றி, ஜனாதிபதி முறையினை ஒழிப்பது, அல்லது மைத்திரியினை (IMPEACHMENT) வீட்டுக்கு அனுப்பி, ரணிலை ஜனாதிபதி ஆக்கி, ஐதேக, சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்தினை அமைப்பது, ஆதரவு தந்த சுதந்திரக் கட்சி எம்பிக்கள் அமைச்சர்கள் ஆவது.

சந்திரிகாவின் இந்த முயல்வுக்கு வெளிநாடுகள் சில ஆதரவினை வழங்குகின்றன எனவும் தெரிய வருகின்றது.

இதன் காரணமாகவே, சம்பந்தர் எதிர்கட்சிதலைவர் பதவி குறித்து, சபாநாயகர் அலட்டிக் கொள்ளவில்லை என தெரிகிறது. ஏனெனில், IMPEACHMENT வெற்றி , தோல்வி என்பது சபாநாயகர் கையில் தான் உள்ளது.

ஆகவே.... கொழும்பு அரசியல் இன்னமும் தகித்துக் கொண்டு தான் உள்ளது.

** சுஜ ஆக்கம்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள குறிப்பு நான் எழுதிய பின்னே, இந்த வீடியோ வந்தது. நான் இதை வைத்து சொல்லவில்லை எனது சொந்த அபிப்பிராயமே எழுதினேன்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/5/2019 at 2:35 PM, Nathamuni said:

வேறு வழி இன்றி ரணிலை மீண்டும் பிரதமராகிய மைத்திரி, மகிந்தவின்  வழிகாட்டுதலில் ரணிலுக்கு பல வழிகளில் நிறைவேற்று அதிகாரம் மூலம் ஆப்படிப்பதன் மூலம் வேறு வழி இன்றி தேர்தலுக்கு இணங்க வைக்க முயல்கின்றார். மாகாண ஆளுனர்களை மாத்தியது, அமைச்சு செயலாளர்களை, அமைச்சர்கள் கோரிக்கைக்கு அமையாது, தான் விரும்பியவர்களை மட்டும் நியமித்தது, அமைச்சர்களுக்கு, வேண்டுமென்றே, திணைக்களங்களை மாறி கொடுத்தது போன்ற பல ஆப்புக்கள்

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்க மறுத்ததும், 30 அமைச்சர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதும் ஒரு வகை ஆப்பு தான்.

இதன் முதல் படியாக தான் சார்ந்த ஐக்கிய ஜனநாய முன்னணியினையும் தேசிய அரசில் இருந்து விலக செய்து, தனது சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்துடன் சேர கூடாது என்று தடை போட்டு விட்டார்.  

இவரது சுஜ நல நோக்கமான, மகிந்தவின் ஆதரவுடன், மீண்டும் இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுவதே, இவரது இந்த ஆப்புகளுக்கு காரணம்.

ஆனால் , அவர் நினைத்ததுக்கு  மாறாக சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர், மகிந்தவின் புதிய தாமரைக் கட்சி யுடன் சேரந்து இயங்க விருப்பம் தெரிவிக்க வில்லை. மாறாக தம்மை ரணில் அரசுடன் சேர கட்சி தலைவர் என்ற ரீதியில்  அனுமதிக்குமாறு கோரினர்.  

மறுத்த மைத்திரி, சுதந்திரக்  கட்சி அலுவலகத்துக்கு பூட்டு  போட்டு விட்டு தாய்லாந்து போனார்.

காரணம் என்ன என்று இப்போது தெரிந்து விட்டது.

சந்திரிகா களத்தில் இறங்கி  விட்டார். தனது தந்தை ஆரம்பித்து, தாயாரால், தன்னால் வளர்க்கப் பட்ட சுதந்திரக் கட்சி, மைத்திரியினால், மகிந்தவிடம் அடகு, வைக்கப்பட்டு, அழிக்கப் பட விட முடியாது என அவர் களத்தில் இறங்கி உள்ளார் என்பதே வெளியில் சொல்லப் படும் காரணம்.

ஆனாலும் உண்மையான விடயம் அதுவல்ல.

அவர் பின்னால், 20 தொடக்கம் 30 வரையான சுதந்திரக் கட்சி எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் துணையுடன் 150 பாராளுமன்ற உறுப்பினர்களை திரட்டி, புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றி, ஜனாதிபதி முறையினை ஒழிப்பது, அல்லது மைத்திரியினை (IMPEACHMENT) வீட்டுக்கு அனுப்பி, ரணிலை ஜனாதிபதி ஆக்கி, ஐதேக, சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்தினை அமைப்பது, ஆதரவு தந்த சுதந்திரக் கட்சி எம்பிக்கள் அமைச்சர்கள் ஆவது.

சந்திரிகாவின் இந்த முயல்வுக்கு வெளிநாடுகள் சில ஆதரவினை வழங்குகின்றன எனவும் தெரிய வருகின்றது.

இதன் காரணமாகவே, சம்பந்தர் எதிர்கட்சிதலைவர் பதவி குறித்து, சபாநாயகர் அலட்டிக் கொள்ளவில்லை என தெரிகிறது. ஏனெனில், IMPEACHMENT வெற்றி , தோல்வி என்பது சபாநாயகர் கையில் தான் உள்ளது.

ஆகவே.... கொழும்பு அரசியல் இன்னமும் தகித்துக் கொண்டு தான் உள்ளது.

** சுஜ ஆக்கம்.

உங்கள் சுய ஆய்வுக்கட்டுரைக்கு நன்றி. மேலும் தொடருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.