Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்பார்ப்புகளுடன் 2019!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்ப்புகளுடன் 2019!!

பதிவேற்றிய காலம்: Jan 6, 2019

பெப்­ர­வரி 4ஆம் திகதிக்கு முன்­பாக முன்­வைக்்கப்­ப­ட­வுள்­ள­தா­கக் கூறப்­ப­டும் அர­ச­மைப்பு வரைவு பற்­றிய பரப்புரை கூட மக்­களை ஏதோ ஒரு விதத்­தில் ஏமாற்­றும் நட­ வ­டிக்­கை­யாக இருக்­குமோ? என்ற சந்­தே­கம் எழுகிறது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்­பி­ன­ ரும், பொது­சன மக்­கள் முன்­னணியும் மேற்­கொண்ட ஆட்சி மாற்­றத்­துக்­கான முயற்­சி­கள், ஐக்­கிய­ தேசி­யக் கட்­சி­யி­னர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர், மக்­கள் விடு­த­லைக் கட்­சி­யி­னர் ஆகிய தரப்­பி­னர் எடுத்த எதிர்­ந­ட­வ­டிக்­கை­க­ள், அவற்­றின் கார­ண­மாக ஏற்­பட்ட முரண்­பா­டு­க­ள், மோதல்­கள் என அனைத்தும் இறு­தி­யில் நீதி­மன்­றத் தீர்ப்­பின் மூலம் முடி­வுக்கு வந்­து, ஐக்­கி­ய­தே­சிய முன்­னணி ஆட்­சிப் பொறுப்பை ஏற்­றுள்ள நிலை­யில் 2019ஆம் ஆண்டு பிறந்துள்­ளது.

ஒவ்­வொரு புது­வ­ரு­டம் பிறக்­கும் போதும் ஆட்­சி­யா­ளர்­கள் புதிய வரு­டத்­தின் பிறப்­பு­டன் நாட்­டைப் புதிய வீச்­சு­டன் முன்­கொண்டு செல்­லப்­போ­வ­தா­க­வும், மக்­க­ளுக்கு வரப்­பி­ர­சா­தங்­களை வழங்­கப்­போ­வ­தா­க­வும் வாக்­கு­றுதி வழங்­கு­வ­தைப் போலவே இந்த வ­ரு­ட­மும் அரச தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரும் தங்­கள் புது­வ­ருட வாழ்த்­துச் செய்­தி­யில் நம்­பிக்­கை­யூட்­டும் கருத்துக்­களை வெளி­யிட்­டுள்­ள­னர்.

அதே­வே­ளை­யில் மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சே­னவை அரச தலை­வ­ராக ஆட்­சிப்­பீ­ட­மேற்­ற­வும் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வைத் தலைமை அமைச்­ச­ரா­க்க­வும் முழு­மை­யான பங்­க­ளிப்பை வழங்­கிய தமிழ்­மக்­கள் இந்த இரண்டு த­ரப்­பி­ன­ரும் முன்னெடுத்த கடந்த மூன்­றரை ஆண்டு ஆட்­சிக் காலப் பகு­தி­யில் எதிர்­பார்ப்­பு­கள் எது­வும் நிறை­ வேற்­றப்­ப­டாத நிலை­யி­லேயே உள்­ள­னர்.

கூட்டமைப்பால் எதையும் சாதிக்க முடியவில்லை
தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யாக இருந்து கொண்டு சகல விட­யங்­க­ளி­லும் அர­சுக்கு ஆத­ரவு வழங்­கி­ய­போ­தும் காணி விடு­விப்பு, அர­சி­யல் கைதி­கள் விடு­தலை, காணா­மல் ஆக்கப்பட்டோர் விவ­கா­ரம் போன்ற விட­யங்­க­ளில் மக்­கள் வீதி­க­ளில் இறங்­கித் தொடர் போராட்­டங்­களை நடத்த வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

அதே­வே­ளை­யில் தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்­பி­னரோ தமது பலத்தை முன்­வைத்து அர­ச­த­ரப்­பு­டன் மேலும் பேச வேண்­டும். ஆனா் தமக்கான வாய்ப்­புக்­க­ளைப் பயன்­ப­டுத்­தா­மல் அரச தரப்பை நியா­யப்­ப­டுத்­துவ திலேயே அக்கறை காட்டி வந்­த­னர். தாங்­கள் அர­சுக்­குக் கூடு­த­லான அழுத்­தங்­க­ளைக் கொடுத்­தால் அதைப் பாவித்து மகிந்த தரப்­பி­னர் புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ரான முட்­டுக்­கட்­டை­ க­ளை அதிகப்­ப­டுத்தி விடு­வார்­கள் என­வும் கூறினார்கள். எப்­ப­டி­யி­ருப்­பி­னும் கடந்த மூன்­றரை வரு­டங்­கள் காற்­றில் பறந்த வாக்­கு­று­தி­க­ளு­டன் தமிழ்­மக்­க­ளின் காலம் கடத்­தப்­பட்­டு­விட்­டது.

இப்­ப­டி­யான ஒரு நிலை­யில் 2019ஆம் ஆண்டு பிற­க்கும் போதே தமிழ்­மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்­டும் வாக்­கு­றுதிகள் வழங்­கப்­பட்டுள்ளன. அதா­வது எதிர்­வ­ரும் பெப்­ர­வரி 4ஆம் திகதிக்கு முன்­பா­கப் புதிய அர­ச­மைப்­புக்­கான வரைவு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­ப­ டும் எனத் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அதன் பேச்­சா­ள­ரு­மா­கிய எம்.ஏ.சுமந்­தி­ரன் யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

சாத்தியமற்றதைப் பேசும் சுமந்திரன்
1972ஆம் ஆண்டு சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்கா காலத்­தி­லும் 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெய­வர்த்­தனா ஆட்­சிக் காலத்­தி­லு­ம் அர­ச­மைப்­பு­க­ள் முன்­வைக்­கப்­பட்டு ஒன்­றி­ரண்டு மாதங்­க­ளி­லேயே அவை நிறை­வேற்­றப்­பட்­டன. கடந்த மூன்­றரை வரு­ட­கா­லத்­தில் ஐக்­கிய­ தேசி­யக் கட்­சி­யும் ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்­பும் இணைந்து நடத்­திய ஆட்­சி­யில் புதிய அர­ச­மைப்பு மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை வாக்­கு­க­ளால் நிறை­வேற்­றப்­பட்ட வாய்ப்­பு­கள் இருந்­தது.

ஆனால் இழுத்­துப்­ப­றித்து அந்தக் கா­லப்­ப­கு­தி­யில் இறு­தி­வ­ரைவு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. தற்­ச­ம­யம் ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்பு அர­சை­விட்டு வெளி­யே­றி­விட்ட நிலை­யில் மூன்­றில் இரண்டு பொரும்­பான்­மை­யைப் பெற முடி­யாத நிலை­யில் அந்த வ­ரைவு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. ஆனால் இது நாடா­ளு­மன்­றத்­தில் விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டுப் பின்னர் மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை வாக்­கு­க­ளால் நிறை­வேற்­றப்­பட வேண்­டும்.

பின்பு பொது­மக்­கள் கருத்­துக்­க­ணிப்­பி்ன்­மூ­லம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்பே இது அர­சி­யல் யாப்­பாக அங்­கீ­கா­ரம்­பெ­றும். இலங்­கை­யின் தலை­சி­றந்த சட்­டத்­த­ர­ணி­க­ளில் ஒரு­வ­ராகக் கருதப்படும் சுமந்­தி­ரன் இந்த விட­யத்தை அறி­யா­த­வ­ராக இருக்க முடி­யாது. ஆனா­லும் அவர் பெப்­ர­வரி 4ஆம் திகதிக்கு முன்­பாக தமிழ்­மக்­க­ளுக்கு ஏதோ கிடைத்­த­தற்­க­ரிய வரம் ஒன்று கிடைக்­கப்­போ­வ­ தைப்­போன்று ஊட­க­வி­ய­லா­ள­ரி­டம் மட்­டு­மின்றிப் பல இடங்­க­ளி­லும் கருத்்து வெளி­யிட்டு வரு­கின்­றார்.

நீடிக்கும் முரண்பாடுகள்
இந்த அர­ச­மைப்பு முன்­வ­ரை­வில் உள்ள பெளத்­தத்­துக்கு முதன்மை இடம், ஒரே­நாடு, ஒன்­று­பட்ட நாடு என்­பன தொடர்­பா­கக் கருத்­து­வே­று­பா­டு­க­ளும் சர்ச்­சை­க­ளும் தமிழ்­மக்­க­ளி­டம் உண்டு என்ற போதி­லும் தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்பு அவற்றை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது மட்­டு­மன்றி அவற்றை நியா­ யப்­ப­டுத்­தி­யும் வரு­கி­றது.

அது ஒரு­பு­ற­மி­ருக்க இந்த அர­ச­மைப்பு வரைவு இப்­போது நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­டு­வது தமிழ்­மக்­க­ளின் நலன்­க­ளின் அடிப்­ப­டை­யிலா? அல்­லது தமிழ்­மக்­க ளின் கோரிக்­கை­களை விலி­யு­றுத்­தக் கிடைக்­கும் வாய்ப்­பைத் திசை­தி­ருப்பி மழுங்­க­டிக்­கவா? என்ற கேள்­வி­ யைச் சில அர­சி­யல் அவ­தா னி­கள் எழுப்­பி­யுள்­ள­னர். அவர்­க­ளின் கேள்­வி­யில் அர்த்­த­மில்­லை­ யென்று சொல்­லி­விட முடி­யாது.

இரா­ணு­வத்­தி­னர் வச­முள்ள பொது­மக்­க­ளின் காணி­களை 2018 டிசெம்­பர் மாதத்­து­டன் விடு­விக்­கப்­போ­வ­தா­க அரச தலைவர் அண்மை யில் தெரி­வித்­தி­ருந்­தார். இந்த அறி­விப்பு ஊட­கங்­க­ளி­லும் அரச அதி­கா­ரி­க­ளா­லும் பெரு­ம­ள­வில் பரப்பப்பட்­டது.

அது மட்­டு­மின்றி இரா­ணு­வத் தள­ப­தி், பிராந்தி யக் கட்­ட­டத் தள­ப­தி­க­ளும் அரச அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டல்­க­ளை­யும நடத்தி ஏதோ ஒரு பெரும் மாற்­றத்தை ஏற்­படுத்தி விடப்­போ­வ­தாக ஒரு தோற்­றப் பாட்டை உரு­வாக்­கி­னர். அவர்­கள் ஊட­க சந்­திப்­புக்­க­ளை­யும் அறிக்­கை­களை விடும் காணி விடு­விப்­புத் தொடர்­பாக பரப்புரையை மேற்­கொண்­ட­னர்.

ஆனால், நடப்­பதோ வேறு­வி­த­மா­கவே உள்­ளது. கேப்­பாப்­பு­லவு மக்­கள் தங்­கள் காணி­களை விடு­விக்­கும்­படி கோரி 680 நாள்களைக் கடந்­தும் தொடர்­போ­ராட்­டத்தை நடத்தி வருகின்றனர். அது தொடர்­பாகச் சாத­க­மான பதில் எது­வும் கிடைக்­க­வில்லை. அது­மட்­டு­மின்றி அவர்­க­ளின் காணி­வி­டு­விப்பு அறி­விப்­பின் பின் ஆயி­ரத்து 99 ஏக்­கர் காணி­கள் மட்­டுமே விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன.

ஆனால், இன்­ன­மும் 17ஆயி­ரத்து800 ஏக்­கர் பொது­மக்­க­ளின் காணி­கள் படை­யினர் வசமே உள்­ளன. இதி­லி­ருந்தே அரச தலை­வ­ரின் காணி விடு­விப்பு அறி­வித்­தல் என்­பது எத்­த­கைய கண்­து­டைப்பு என்­ப­தைப் புரிந்­து­ கொள்ள முடி­யும்.

இவ்­வாறே பெப்­ர­வரி 4ஆம் திகதிக்கு முன்­பாக முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கக் கூறப்­ப­டும் அர­ச­மைப்பு வரைவு பற்­றிய பரப்புரை கூட மக்­களை ஏதோ ஒரு விதத்­தில் ஏமாற்­றும் நட­வ­டிக்­கை­யாக இருக்­குமோ? என்ற சந்­தே­கம் எழு­கிறது.

அதே­போன்று குற்­றம் நிரூ­பிக்­கப்­பட முடி­யா­மல் விடு­தலை செய்­யப்­பட்ட அர­சி­யல் கைதி­க­ளின் பட்­டி­யலை முன்­வைத்தே தாங்­கள் அர­சி­யல் கைதி­க­ளைப் படிப்­ப­டி­யாக விடு­வித்து வரு­வ­தா­க­வும் கூறப்­ப­டக் கூடும். மேலும் மன்­னார் புதை­கு­ழி­கள் தோண்­டப்­ப­டும் நட­வ­டிக்­கை­க­ளுக்குக் காணா­மற்­போ­னோர் தொடர்­பான அலு­வ­ல­கம் நீதி வழங்­கப்­போ­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளது. அதன்­மூ­லம் காணா­மற்­போ­னோர் தொடர்­பாக அந்த அலு­வ­ல­கம் அக்கறையுடன் செயற்­பட்டு வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­படலாம்.

நெருக்கடியை தவிர்க்கும் அரசின் உத்தி இது
எதிர்­வ­ரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யின் கூட்­டத்­தொ­டர் இடம்­பெ­ற­வுள்­ளது. 2018ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வழங்­கப்­பட்ட கால அவ­கா­சம் எதிர்­வ­ரும் மார்ச் மாதத்­து­டன் நிறை­வு­பெ­று­கி­றது. இலங்­கை­யால் ஒப்­புக்­கொள்­ளப்­பட்ட பிரச்­சி­னை­கள் எது­வும் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டாத நிலை­யில் இலங்கை அரசு மனித உரி­மை­கள் பேர­வை­யில் நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுக்­க­வேண்டி வர­லாம்.

எனவே அந்த நெருக்­க­டி­க­ளை­கச் சமா­ளிப்­ப­தற்­கான தற்­காப்புக் கவ­சங்­க­ளாக அர­ச­மைப்பு வரைவு, காணி விடு­விப்பு அறி­விப்பு, வழக்­கு­க­ளில் விடு­விக்­கப்­பட்ட அர­சி­யல் கைதி­க­ளில் பட்­டி­யல், காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கத்­தின் செயற்பாடு என்­பன முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன என்றே நம்­ப­வேண்­டி­யுள்­ளது. கடந்த காலத்­தின் இலங்­கை­யின் ஆட்­சி­யா­ளர்­கள் பன்னாட்­டையும் தமி­ழர் தரப்­பை­யும் ஏமாற்ற மேற்­கொண்ட தந்­தி­ரங்­கள் அப்­ப­டி­யான கருத்­தையே ஏற்­ப­டுத்­து­கின்­றன. இந்த முறை அர­ச­மைப்பு வர­வுக்கு தமி­ழர் தரப்பு ஆத­ர­வ­ளிக்­கி­றது என்­பது அர­சுக்­குள்ள மேல­திக வாய்ப்­பா­கும்.

எனவே 2019 தமிழ் மக்­க­ளுக்குச் சில சாத­க­மான நிலை­மை­கள் உரு­வாக்­கப்­ப­டும் என்ற மாயையை ஏற்­ப­டுத்­திய போதும் ஏமாற்­றமே மிஞ்­சும் என்­பதை உணர்ந்து விழிப்­பு­டன் இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.

https://newuthayan.com/story/11/140245.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.