Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டுப்பற்றாளர் நாவண்ணன் தமிழீழத் தேசியத் தலைவரால் மாமனிதராக மதிப்பளிப்பு

Featured Replies

நாட்டுப்பற்றாளர் நாவண்ணன் அவர்கள் தமிழீழத் தேசியதத் தலைவரால் மாமனிதராக மதிப்பளிக்கப் பட்டுள்ளார். நாவண்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவிலேயே தமிழீழத் தேசியத் தலைவரால் இவர் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

அந்த அறிக்கையின் முழுவடிவம்

சுயநலன்கருதாது நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் எமது தேசசுதந்திரப் போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் அவர்களை நாம்இழந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தமிழினம் பெருமைப்படும்படியாக கலையுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்து இந்தக் கலைமாமணியைப் புரிந்து இந்தக் கலைமாமணியை அவரது முதலாவது நினைவாண்டில் இன்று நாம் பெருமையோடு நினைவுகூருகிறோம்.

இவர் ஒரு சிறந்த கலைப்படைப்பாளி, இவரிடம் கலைகளுக்கே உரித்தான உள்ளம் இருந்தது. வற்றாதகலையுணர்வு இருந்தது. கட்டுக்கடங்காத கற்பனைவளம் இருந்தது. கலைக்கு அணிசெய்கின்ற நிறைந்த அறிவு இருந்தது. தமிழ்மீது அளவுகடந்த பற்றும் பாசமும் இருந்தது. தனது தாய் மண்ணின் விடுதலைக்கு பங்காற்றவேண்டும் என்ற உயரிய குறிக்கோள் இருந்து. சுயமான ஆளுமை இருந்தது. இவை எல்லாம் ஒன்று கலந்த மனிதம் இருந்தது. இந்த அழகான மனிதமாண்பே அனைவரையும் அவரைநோக்கிக் கவர்ந்து கொண்டது.

சுதந்திரப்போராட்டங்களுக்கு உந்துசக்தியாக அமைவது தேசப்பற்று. இந்தத் தேசப்பற்று. இவரிடம் நிறைந்திருந்தது. அவரது ஆழ்மனதில் ஆழமாகவேரோடிநின்றது. அவரை ஆட்கொண்டுநின்றது. விடுதலைவேட்கையாக அவரிடம் வெளிப்பட்டுநின்றது. எமது சுதந்திரஇயக்கம் முன்னெடுத்துவரும் விடுதலைப்போராட்டத்திலே ஒரு இலட்சியப் பிடியை அவரிடம் ஏற்படுத்திவிட்டது. பொதுவாகவே இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டுவிட்டால், துன்பங்கள் தெரிவதில்லை. வலிகள் புரிவதில்லை அவரும் போராட்டவாழ்வின் பெரும் துயர்களையும் சுமைகளையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, முதுமையான வாழ்வின் உடல் உபாதைகளையும் சகித்துக்கொண்டு விடுதலைப்பாதையிலே விடாப்பிடியாகச் செயற்பட்டார்.

அவர் தமிழீழ மண்தந்த ஒருசிறந்த கவிஞர், சிறந்தஓவியர், சிறந்தசிற்பவல்லுனர், சிறந்த நாடக நெறியாள்கையாளர். அவர் கலைகளுக்காகவே வாழ்ந்தார். கலைகள் பற்றியே சதா சிந்தித்தார். புதிய கலைவடிவங்களைக் கண்டறிந்து அவற்றோடு புதியநுட்பங்களைப் புகுத்தி, காலத்திற்கேற்ப, வரலாற்று ஓட்டத்திற்கு ஏற்ப கலைப்படைப்புக்களைச் செய்தார். அவரைப் போலவே அவரது கலைப்படைப்புக்களும் அழகும் ஆழமும் வாய்ந்தவை. அனைவரையும் கவர்ந்திழுக்கும் சக்திவாய்ந்தவை. அத்தோடு அவர் தனது கலைப்படைப்புள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும் ஒடுக்குமுறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் தூண்டிவிட்டார். சிங்கள அரசு எமது தாயகமண்ணிலே நிகழ்த்திய கொடுமைகளையும் கொடூரங்களையும் அதன் ஆழ அகலங்களில் காலவரிசைப்படி பதிவுசெய்தார். போராட்ட வாழ்வில் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் பல்வேறு கோணங்களில் படம்பிடித்தார். தனது கலைப்படைப்பின் உச்சமாக கரும்புலிகளது தோற்றத்தையும் வளர்ச்சியையும் எழுர்ச்சியையும் தனது அழகுத்தமிழிலே கரும்புலிக்காவியமாக வடிவத்து நூலாக வெளியிட்டார். அன்னார் ஆற்றிய பெரும்பணி என்றமே போற்றுதற்குரியது.

கலைஞர் நாவண்ணன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து. அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக “மாமனிதர்“ என்ற அதியுயர் தேசியவிருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும்வாழ்வார்கள் எனத்தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

யாழ் கள உறவு ஒருவர் மாமனிதர் நாவண்ணனுக்காக முன்பு எழுதிய கவிதை...

http://www.yarl.com/forum/index.php?showtopic=10456

ஒரு கவியை கவி கொண்டு பாட........

மனசு வரிகளுக்காய் ..........

வரண்ட வயலாய் ...இன்னும்

சிந்தனைக்கு ஏதும் வராது

சிறு மெளனம்.....கொள்கிறது!

ஐயா........எல்லா கவிஞனும்.........

எழுது கோலுக்கு நிறநீர் மட்டுமே.........

நிரப்புவான்........நீரோ.........

உயிர் உம்மோடு இருந்தவரை.........

கண்ணீர் பாதி செந்நீர் பாதி கொண்டே......

இந்த கைவிடபட்ட இனத்துக்காய்..........

எழுத்தால் போர் செய்து காலமானீர்!

என்ன சொல்லி உம்மை பாட?

நரைத்த தலை தாடி உம்முருவம்........

அதனுள் நரை விழாத விடுதலை உணர்வு.......

இது-இளமை கொண்டவர்கூட ........

எட்டப்பராய் திரியும் காலம்........

முதுமையின் சாயல் முகத்தில் விழுந்தும்.....

கடைசிவரை எம் தேச தாகம் தீர்க்க.......

கவிநீர் தந்த பெருங்கவியே.........

சென்று வாரும்....... இந்த செங்கொடி-தேசம்

என்றும் உம் புகழ் பாடும்!

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.