Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமரச முயற்சிகளை வற்புறுத்தாமல் விட்டுப் பிடிக்க சர்வதேச சமூகம் முடிவு அரசும் புலிகளும் பட்டுத் தெளிய அனுமதிக்கலாம் எனத் தீர்மானம்.

Featured Replies

சமரச முயற்சிகளை வற்புறுத்தாமல் விட்டுப் பிடிக்க சர்வதேச சமூகம் முடிவு அரசும் புலிகளும் பட்டுத் தெளிய அனுமதிக்கலாம் எனத் தீர்மானம்.

சமாதானத் தீர்வுக்கான அமைதி முயற்சிகளில் அதிக முனைப்புடன் ஈடுபடுமாறு இலங்கை அரசையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் விடாது நச்சரித்து வந்த சர்வதேச சமூகம், அக்கோரிக்கை இரு தரப்புகளினதும் காதுகளில் ஏறாது என்பதைக் கண்டுணர்ந்த நிலையில், மேலும் அந்த வற்புறுத்தலைத் தொடர்வது இல்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

யுத்த முனைப்பில் தீவிரமாக இருக்கும் இரு தரப்புகளையும் மோதவிட்டு, அவை பட்டுத் தெளிந்து, மோதிக் களைத்து வரும் வரை விட்டுப்பிடிப்பது என இராஜதந்திர வட்டாரங்கள் முடிவு செய்திருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது. இராஜதந்திர வட்டாரங்களை மேற் கோள்காட்டி ஏ.எவ்.பி.செய்தி நிறுவ னம் இதனை வெளியிட்டிருக்கின்றது. அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்ட தகவல்கள் வருமாறு:

அரசு, புலிகள் இரு தரப்புமே இராணுவத்தீர்வில் உறுதி கொண்டு செயற்படுவதால் அமைதி முயற்சிகள் மேலும் நாச மடையும் என இந்தப் பிணக்கை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட் டிருக்கும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. இரண்டு தரப்புகளுமே இரத்தக் களரியில் சிக்கி, பேரிழப்புகளைச் சந்தித்து, களைத்த பின்னரே பேச்சுக்குறித்துப் பேச முன்வரக்கூடும் என அமைதி முயற்சிகளுக்கு உதவும் சர்வதேச ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

"அமைதி முயற்சிகள் விவகாரத்திலும் 2002ஆம் ஆண்டின் யுத்தநிறுத்த விடயத்திலும் இரண்டு தரப்புமே சமாதானம் குறித்து உதட்டளவில் பேசுவதோடு சரி.'' என்று அமைதி முயற்சிகளுக்கு அனுசரணை வழங்கும் நோர்வேயின் பிரதிநிதி ஒருவர் கூறுகின்றார்.

"நோர்வேக்காரர்கள் ஆக ஓர் அனுசர ணையாளர்களாகப் பங்குபற்றுவதோடு சரி. அதிலும் கூட இப்போது எந்த அனு சரணைப்பணிக்கும் அவர்கள் அழைக்கப் படுவதில்லை.'' என்று இராஜதந்திரி ஒரு வர் கூறினார்.

"அடுத்துவரும் மாதங்களில் பதிலுக்கு பதில் பழிவாங்கும் வன்முறைகள் மேலும் அதிகரித்துச் செல்வதை நாம் எதிர்பார்க்கலாம். அரசுப்படைகள் புலிகளின் பிரதேசங்களுக்குள் அவர்களைப் பின்தள்ளும் தாக்குதல்களிலும் விடுதலைப்புலிகள் நுட்பமான பெரும் தாக்குதல்களிலும் ஈடு படக்கூடும்'' என்று அந்த ராஜதந்திரி குறிப்பிட்டார்.

"சர்வதேச சமூகம் இப்போது உணர் வது இதைத்தான். விடுதலைப்புலிகளும் அரசுப்படைகளும் ஒருவரை மாறி ஒரு வர் இன்னும் கொஞ்சம் அதிகமாக அடித்துக் கொள்ளட்டும். இப்படியே மோதுப்பட்டு அவர்கள் எப்போது களைத்துப் போகின்றார்களோ அப்போது இரு தரப்பையும் பேச்சு மேசைக்குக் கொண்டுவர தங்களால் உதவ முடியும் என்று சர்வதேச சமூகம் எண்ணுகின்றது'' இப்படி மற் றொரு ராஜதந்திரி குறிப்பிட்டார்.

போர்நிறுத்த உடன்படிக்கையை இன்னும் பேணிப் பராமரித்துவரும் போர் நிறுத் தக் கண்காணிப்புக்குழுவின் கொழும்பு அலுவலகத்தில் விசனம் நிலவுகிறது. எனினும் அவர்கள் உறுதியாகவே இருக்கிறார்கள். போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு வின் பேச்சாளர் தொபினூர் ஒமர்சனின் கருத்துப்படி போர்நிறுத்த உடன்படிக்கை தற்போது கடதாசியில் மட்டுமே இருக்கிறது. எனினும் அது இன்னும் கண்காணிக் கப்பட்டே வருகிறது.

துரதிர்ஷ்ட வசமாக உடன்படிக்கை அண்மைய மாதங்களாக அதிகளவில் மீறப்பட்டு வருகிறது. என்றாலும் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு ஆகக் குறைந்தது களத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆவணப்படுத்தும் ஒரு சுயாதீன அலகாக வாவது தனது பங்களிப்பைச் செய்துவரு கிறது என்றார் அதன் பேச்சாளர். இவ்வாறு ஏ. எப். பி. செய்தியில் தெரி விக்கப்பட்டிருக்கிறது.

-Uthayan-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

பேச்சை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் இல்லை: போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு.

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு புதிதாக எந்த முயற்சிகளும் ஆரம்பிக்கப்படவில்லை என இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.

புதிதாக இங்கு ஒன்றும் இல்லை. கடந்தவாரம் விடுதலைப்புலிகளை நாம் சந்தித்தபோது புதிய அணுகுமுறைகளோ அல்லது புதிய திட்டங்களோ விவாதிக்கப்படவில்லை. அது ஒரு வழமையான சந்திப்பு என போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தொபினூர் ஓமர்சன் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் கண்காணிப்புக்குழுவினர் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளைச் சந்தித்தபோது மீண்டும் பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன என்று செய்திகள் வெளியாகியிருந்தன. அதற்கு அரசும் பேச்சுகளில் ஈடுபட விரும்புவதாக தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.

நாம் கண்காணிப்புக் குழுவினருடன் ஓர் வழமையான சந்திப்பையே மேற்கொண்டிருந்தோம். நோர்வேயோஅல்லது வேறு தரப்பினரோ பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குரிய புதிய முயற்சிகள் தொடர்பாக எம்மை அணுகவில்லை என்று விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

-Uthayan-

இலங்கை இராணுவம் வெற்றிகளைக் குவிக்கும்வரை சர்வதேசம் விட்டுப் பிடிக்கும் கொள்கையைத்தான் கொண்டிருந்தது. சிங்களம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய போதும், தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கத் தயங்குகின்ற போதும் சர்வதேசத்தால் சரியான முறையில் அழுத்தங்களை அரசாங்கத்திற்குக் கொடுக்க முடியவில்லை.

புலிகள் தாக்குதலைத் தொடங்கும்போதும் சர்வதேசம் விட்டுப் பிடிக்கும் கொள்கையைக் கடைப்பிடிப்பார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.