Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு அகதிகளுக்கு உதவவிடாமல் புனர்வாழ்வுக் கழகத்துக்கு நெருக்கடி!

Featured Replies

கிழக்கு அகதிகளுக்கு உதவவிடாமல் புனர்வாழ்வுக் கழகத்துக்கு நெருக்கடி!

நிலைமையை விளக்கி அந்த அமைப்பு அறிக்கை

கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பெருமளவு துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும், அந்த அகதிகளுக்கு உதவவிடாமல் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்துக்கு அரசு பாரிய நெருக்கடிகளைக் கொடுத்துவருகின்றது என்று அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியிருக்கிறது. இதுதொடர்பாக நிலை மைகளை விளக்கி அந்த அமைப்பு வெளி யிட்ட அறிக்கை வருமாறு:

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன் னைய சேவைகளான, போர்கள் மற்றும் ஆழிப்பேரலை அனர்த்த இடப்பெயர்வுக் காலப் பணிகளுடன் ஒப்பிடும்போது கிழக்கில் இடம்பெயர்ந்து வாழும் 150,000 மக்களைப் பராமரிப்பது ஒரு பெரிய சவா லாக இருக்கமாட்டாது.

சிறிலங்கா அரசினால் எமது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதுடன், எழுதப்படாத பொருளாதாரத் தடைகள், ஏனைய கட்டுப்பாடுகள் என்பன எமது அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ளன. துணை இராணுவக் குழுக்களின் உதவியு டன் அரசு, எமது செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தியுள்ளது. எனவே, கிழக் கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை எம் மால் வழங்க முடியவில்லை.

தற்போது எமது அலுவலகங்கள் இருந்த இடங்களில் அரசாங்க படையினரும், துணை இராணுவக் குழுவினரும் நிலைகொண்டுள்ளனர். திருகோணமலை, வாகரைப் பகுதி களில் உள்ள எமது அலுவலகங்கள் துணை இராணுவக் குழுவினாரால் கையகப்படுத் தப்பட்டுள்ளதுடன், தற்போது சிறிலங்கா காவல்துறையினர் நிலை கொண்டுள்ளனர். இந்த அலுவலகங்களில் பணிபுரிந்த எமது பணியாளர்கள் கொலை அச்சுறுத் தல் விடுக்கப்பட்டு விரட்டப்பட்டுள்ளனர்.

அரசின் துன்புறுத்தல்களுக்கு மத்தியி லும் கொழும்பில் உள்ள எமது அலுவல கம் இயங்கி வருகின்றது. முடக்கப்பட்ட எமது வங்கிக் கணக்குகளை மீண்டும் பெறு வதற்கு நாம் நீதிமன்றம் ஊடாக நட வடிக்கை எடுத்து வருகிறோம். சிறிலங்கா அரசினதும், அரசின் நீதிமன்றங்களினதும் பெருமளவான தாமதங்களுக்கு மத்தியி லும் எமது நாட்கள் தற்போது நீதிமன்றில் செலவளிக்கப்படுகின்றன.

எமது கழகம் அனைத்துலக மற்றும் உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து கிழக்கில் துன்பப்படும் மக்களுக்கு சேவை யாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றது.

எனவே, கிழக்கில் இடம்பெயர்ந்து துன்பப்படும் மக்களுக்கு உதவ விரும்பும் மக்கள் எமது உள்ளுர் மற்றும் அனைத்து லக த.பு.க அலுவலகங்களின் ஊடாக உதவிகளை மேற்கொள்ளும்படி நாம் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த காரியாலயங்கள் உலகம் எங்கும் பரந்துள்ளன. www.troonline.org என் னும் இணையத்தளத்தின் ஊடாக எமது தொடர்பாடல் முகவரிகளை நீங்கள் பெற் றுக்கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.