Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிறப்புரிமைகள் அரசாங்கத்தினாலும், அரசபடைளாலும் முடக்கப்படுகின்றன : எஸ். கஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிறப்புரிமைகள் அரசாங்கத்தினாலும், அரசபடைளாலும் முடக்கப்படுகின்றன : எஸ். கஜேந்திரன்

- பண்டார வன்னியன் Monday, 16 April 2007 15:58

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மத்தியிலும் அவர்களது உத்தியோக பூர்வ இல்லங்களிலும் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்களென்ற தொனியிலான ஜனாதிபதியின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தமிழ்தேசிய கூட்டமைப்பினரை அவர்களின் செயற்பாடுகளை முடக்க அரசு மேற்கொள்ளும் சதியே இந்தக் குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஹசன்டே லங்கா' என்ற பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியை மேற்கோள் காட்டியுள்ள கஜேந்திரன் எம்.பி. இக் குற்றச்சாட்டை மறுத்து ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கை அரசியல் அமைப்பின் படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களது சிறப்புரிமைகள் மதிக்கப்படுவதில்லை. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் எமது தேர்தல் தொகுதிக்குச் செல்லும் போதும், தேர்தல் தொகுதியிலிருந்து பாராளுமன்ற அமர்வுகளுக்காக கொழும்புக்குச் செல்லும் போதும் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியையும், 11.ஓகஸ்ட் 2006 வரை முகமாலைச் சோதனைச் சாவடியையும் கடந்து பயணம் செய்ய வேண்டும்.

அவ்வாறு பயணம் செய்யும்போது ஒரு சில தடவைகள் தவிர ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் எமது சிறப்புரிமைகள் மதிக்கப்படவில்லை என்பதுடன் முழு அளவில் சிறப்புரிமைகள் மீறப்பட்ட வண்ணமேயுள்ளது. எமது வாகனங்களில் எம்முடன் பயணம் செய்வோர் சோதனைச் சாவடிகளில் வாகனங்களிலிருந்து இறக்கப்பட்டு வாகனம் முழுமையாக சோதனையிடப்படுகிறது.

உடன் பயணிப்போரின் அடையாள அட்டைகள் அனைத்தும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுவதுடன் அனைவரினதும் ஆவணங்கள் முகமாலை, ஓமந்தை இராணுவ சோதனை நிலையங்களிலுள்ள சாவடி ஒன்றில் (பொலிஸ், இராணுவம், இராணுவப் புலனாய்வுத்துறை ஆகிய) மூன்று நபர்களிடம் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்ட பின்னரே தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றோம்.

நாம் கொழும்பிலிருந்து எமது தேர்தல் தொகுதிக்குச் செல்லும் போது எமக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு பயணிகளை விடமோசமாக தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுக் கொண்டிருக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி புலிகளுக்கு உதவுகின்றார்கள் என்றும், தமது அலுவலர்களாக புலி உறுப்பினர்களை நியமித்துள்ளனர் என்றும், தமது உத்தியோக பூர்வ இல்லங்களில் புலி உறுப்பினர்களை தங்க வைத்துள்ளனர் என்றும் கூறுவது உண்மைக்கு புறம்பானது.

மக்களையும் சர்வதேச சமூகத்தினரையும் ஊடகவியலாளர்களையும் தவறாக வழி நடத்தும் விசமப் பிரசாரமாகவே இதைக் கருதுகின்றோம். 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது 1977 இல் மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக எமது கூட்டமைப்பு உறுதியுடன் குரல்கொடுத்து வருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த நடவடிக்கைகளுக்கு எதிரானதாக உள்ளதுடன், தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறான அரசியல் தீர்வு ஒன்றை அனைத்து தரப்பினரினதும் இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்பட்டதாக உலகுக்குக் காட்டி தமிழர் மீது திணிப்பதற்காக அரசினால் நடத்தப்படும் அனைத்துக் கட்சி மகா நாட்டு நாடகத்தின் உள்நோக்கத்தையும் கூட்டமைப்பு அம்பலப்படுத்தி வருகின்றது.

அரசின் தமிழர் விரோதப் போக்கு நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முட்டுக் கட்டையாக உள்ள காரணங்களுக்காக எமது சக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசெப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் அரச ஆதரவுக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான படுகொலைகள் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையையும், பலத்தினையும் சிதறடித்த செயற்பாடுகளை முடக்குவதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் சர்வதேசக் கண்டனங்களை அரசின் மீது ஏற்படுத்தியுள்ளதால் வேறு வழிகளைக் கையாண்டு கூட்டமைப்பின் செயற்பாடுகளை முடக்க அரசு முயல்வதாகவே நாம் கருதுகின்றோம்.

அதன் அங்கமாகவே கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவினரால் தொடர்ச்சியான கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதுடன் பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைகளை நடத்தி சிறைகளில் அடைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கருதுகின்றோம்.

சர்வ வல்லமை கொண்ட ஜனாதிபதியாக இருக்கும் நீங்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர ஏனைய அனைத்தையும் செய்ய முடியுமெனக் கருதுகிறோம். அந்த எண்ணக் கருவின் அடிப்படையில் சட்டங்கள் அனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டமைப்பு பாராளுமன்றத்தினுள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. அவற்றில் எல்லாம் சிவாஜிலிங்கம் முன்னின்று தீவிரமாகச் செயற்பட்டவர். அதற்குப் பழிவாங்கும் வகையில், சிவாஜிலிங்கத்தின் வாகனத்தைக் கடத்திச் சென்று புலிகளுக்குக் கொடுத்தார் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டினடிப்படையில் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டு விசாரணைகளுக்குப் பல தடவை உள்ளாக்கப்பட்டுள்ளார். இச் செயற்பாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நாம் மறுக்கின்றோம். அக்குற்றச்சாட்டினடிப்படையி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.