Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச குடும்பத்தை லண்டனில் இருந்து வெளியேற்ற இரகசிய திட்டம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

uk-1.jpg

அரச குடும்பத்தை லண்டனில் இருந்து வெளியேற்ற இரகசிய திட்டம்?

பிரக்ஸிற் தொடர்பான தீர்மானம் தோல்வியடைந்து போராட்டம் வெடித்தால் மகாராணி இரண்டாம் எலிசபேத் மற்றும் அவரது குடும்பத்தினரை லண்டனிலிருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றம் எடுத்த முடிவு குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகளவானவர்கள் வாக்களித்திருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான காலக்கெடுவான 29-3-2019 என்ற திகதி நெருங்கி வருவதால் பிரித்தானிய பிரதமர் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த எதிர்ப்பு, போராட்டமாக உருவெடுக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி ஒரு போராட்டம் வெடித்தால் லண்டனிலுள்ள பக்கிங்காம் அரண்மனையில் வசித்துவரும் மகாராணி இரண்டாம் எலிசபேத் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனிப்போர் காலத்திலும், பிரித்தானியா மீது சோவியத் யூனியன் (ரஷ்யா) அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என அச்சம் வெளியிடப்பட்ட நிலையில், பிரித்தானிய அரசக் குடும்பத்தினர் இதுபோன் அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டு, லண்டன் நகருக்கு வெளியே பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அரச-குடும்பத்தை-லண்டனில்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

the-royal-family.jpg

பிரெக்ஸிற்றினால் கலவரம் உருவானால் மகாராணி இடம் மாற்றப்படுவார்!

பிரெக்ஸிற் விவகாரத்தால் ஏதேனும் கலவரம் உருவானால், பாதுகாப்புக் கருதி எலிஸபெத் மகாராணி இடம் மாற்றப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாதாரண சூழ்நிலைகளின் போது போர்க் காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அவசரகாலத் திட்டங்களை அப்போது மீண்டும் செயல்படுத்த வேண்டிவரலாமென பிரித்தானிய பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகிக்கொள்ளும்போது பிரச்சினை உருவானால் அந்த அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடும்.

இந்நிலையில் லண்டனிலிருந்து அரச குடும்பத்தினரை இடம்மாற்ற, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

பிரெக்ஸிற் விவகாரத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தகுந்த ஆதரவு பெறுவதன் தொடர்பில் அரசாங்கம் தற்போது இன்னல்களை எதிர்நோக்கி வருகிறது.

மார்ச் 29 ஆம் திகதி அதிகாரபூர்வமாக பிரிட்டன், ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும். ஆனால் அதற்குள் உரிய ஆதரவை அரசாங்கம் பெறத்தவறினால், எந்த உடன்பாடுமின்றி பிரெக்ஸிற் முடிவடையக்கூடும்.

அவ்வாறு நேர்ந்தால், அது பலதரப்பட்ட குழப்பங்களுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பிரெக்ஸிற்றினால்-கலவரம்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.