Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்தவாரம் தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் 16 அகதி குடும்பங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவாரம் தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் 16 அகதி குடும்பங்கள்

 

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரகத்தின்(யூ.என்.எச்.ஆர்.சி.) அனுசரணையுடன் தமிழகத்தின் மதுரை, திருச்சிராப்பள்ளி, சென்னையில் இருந்து பெப்ரவரி 14 ஆம் திகதி 16 அகதிக்குடும்பங்கள் இலங்கை திரும்பவிருக்கின்றன.

sl.jpg 

நாடுதிரும்பும் இந்த முதல் தொகுதி குடும்பங்களில் 15 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர் என்று புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்திருக்கிறார்.

இலங்கை அகதிகளை திருப்பியழைத்துவருவதற்கான செயன்முறைகளில் கடுமையான விதிமுறைகளை யூ.என்.எச்.ஆர்.சி. பின்பற்றுகிறது. 30 வரடகால உள்நாட்டுப்போரின்போது இடம்பெயர்ந்து இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் பற்றிய அவசியமான சகல ஆவணங்களும் பட்டியல்களும் யூ.என்.எச்.ஆர்.சி.அதிகாரிகளிடம் இருக்கின்றன என்றும் சிவஞானசோதி கூறினார்.

நாடுதிரும்பும் இலங்கை அகதிகள் மத்தியில் தமிழ்நாட்டைச்சேர்ந்த தமிழர்கள் எவரும் இல்லை என்று கூறிய அவர்  தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் யூ.என்.எச்.ஆர்.சி.யின் உதவியுடன் உகந்த சட்டரீதியான வழிமுறைகளின் ஊடாக மாத்திரமே இலங்கை திரும்பமுடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

போரின் விளைவாக இடம்பெயரும்வரை அவர்கள் வாழ்ந்த வவுனியா, மன்னார், மாத்தளை, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலேயே அகதிகள் மீள்குடியமர்த்தப்படுவர். விமானநிலையத்தில் வந்திறங்கும்போது அகதிகளுக்கு 5 ஆயிரம் ரூபா ஆரம்பக்கொடுப்பனவு வழங்கப்படும். 

அகதிகள் தங்கள் சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிய பிறகு 25 ஆயிரம் ரூபா வழங்கபபடும்.அத்துடன் தங்களது காணிகளைத் துப்புரவு செய்வதற்கான அடிப்படை உபகரணங்களுக்காக 3 ஆயிரம் ரூபாவும் வேறு தேவைகளுக்காக 5 ஆயிரம் ரூபாவும் ஒவ்வொரு அகதிக்கும் வழங்கப்படும்.அவர்கள் வீடுகளைப் பெறுவதற்கும் உரித்துடையவர்கள்.வீடுகள் கையளிக்கப்படும்போது இந்த அகதிகளுக்கு  முன்னுரிமை அளிக்கப்படும் என்று சிவஞானசோதி தெதரிவித்தார்.

 தமிழ்நாட்டில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 11,020 பேர் உள்நாட்டுப்போர் 2009 மேயில் முடிவடைந்ததன் பின்னரான காலகட்டத்தில் இதுவரையில் இலங்கை திரும்பியிருக்கிறார்கள்.மேலும் 3,815 அகதிகள் யூ.என்.எச்.ஆர்.சி.யின் அனுசரணையுடன் நாடுதிரும்ப விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குடும்பமொன்றுக்கு 100,000 ரூபா தொடக்கம் 150,000 ரூபா வரை வழங்கப்படுகின்ற வாழ்வாதார ஆதரவுத்திட்டத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கும் அகதிகள் உரித்துடையவர்கள். ஆனால், நாடுதிரும்புகின்ற சகல அகதிகளுக்கும்  வாழ்வாதார ஆதரவு வழங்கப்படமாட்டாது. விண்ணப்பிக்கும்போது தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இலங்கை அகதிகள் சுமார் ஒரு இலட்சம் பேரில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களே தமிழகத்தில்  நலன்புரி நிலையங்களில் இருக்கிறார்கள்.எஞ்சியவர்கள் தங்களது நண்பர்கள், உறவினர்களுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை திரும்புவதில் நாட்டம் காட்டவில்லை.இந்திய வாழ்க்கைமுறைக்கு தங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டார்கள் என்று சிவஞானசோதி மேலும் சொன்னார்.

 

http://www.virakesari.lk/article/49342

 

திரும்பி வருவது வரவேற்கத் தக்கது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.