Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பும்ரா, விஜய் சங்கர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பும்ரா, விஜய் சங்கர்

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-அவுஸ்திரேலியாவுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூரில் இன்று இலங்கை நேரப்படி 1:30 க்கு ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்த, இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா டக்கவுட் முறையிலும், தவான் 21 ஓட்டத்துடனும் ஆட்மிழந்து வெளியேற,  தொடர்ந்து களமிறங்கிய ராயுடுவும் 18 ஓட்டத்துடன் வெளியேறினர். அடுத்து விஜய சங்கர் 46, ஜாதவ் 11 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க. தோனி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

india1.jpg

தொடர்ந்து அணிக்காக நிலைத்தாடிய வீராட் கோலி  ஒரு நாள் போட்டியில் தனது 40 வது சதம் அடித்தார்.

virat.jpg

ஒரு நாள் போட்டியில் 40 ஆவது சதம் அடித்த வீராட் கோலி 107 ஓட்டத்துடனும் ஜடேஜா 18 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வர இந்திய அணி 45 ஆவது ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந் நிலையில் ஜடேஜா 21 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க 48 ஆவது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி 120 பந்தில் 10 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 116 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அத்துடன் அதே ஓவரின் 5 ஆவது பந்தில் குல்தீப் யாதவ் ஆட்டமிழக்க இந்திய அணி 48.1 ஓவரில் 250 ரன்னைத் தொட்டது. எனினும் அடுத்த பந்தில் பும்ரா போல்ட் முறையில் ஆட்டமிழக்க இந்திய அணி இறுதியாக 48.2 அனைத்து விக்கெட்டுக்களையும பறிகொடுத்து 250 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களையும், சாம்பா 2 விக்கெட்டுக்களையும், கோல்ட்டர் நைல், நெதன் லியோன் மற்றும் மெக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

aus.jpg

இதையடுத்து 251 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய பின்ஞ் மற்றும் உஷ்மன் கவாஜா சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுக்க அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி முதல் 10 ஓவரில் 60 ஓட்டங்களை பெற்றது.

finch.jpg

பின்ஞ் 26 ஓட்டத்துடனும் கவாஜா 28 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிவர 14.3 ஆவது ஓவரில் பின்ஞ் 37 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் அவுஸ்திரேலிய அணியின் முதலாவது விக்கெட் 83 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

பின்ஞ்சின் ஆட்டமிழப்பையடுத்து 15.3 ஆவது ஓவரில் உஷ்மன் கவாஜாவும் 38 ஓட்டத்துடன் வெளியேற, அடுத்து வந்த ஷோன் மார்ஸ் 16 ஓட்டத்துடனும், மெக்ஸ்வேல் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் அவுஸ்திரேலிய அணி 28.3 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.

5 ஆவது விக்கெட்டுக்காக பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் மற்றும் மார்கஸ் ஸ்டோனெஸ் ஜோடி சேர்ந்தாட அவுஸ்திரேலிய அணி 33.2 ஓவரில் 150 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து 37.3 ஆவது ஓவரில் ஹேண்ட்ஸ்கோப் 48 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

இவரின் ஆட்டமிழப்பையடுத்து அலெக்ஸ் கரி ஆடுகளம் புகுந்தாட அவுஸ்திரேலிய அணி 42.3 ஆவது ஓவரில் 200 ஓட்டங்களை பெற 218 ஆவது ஓட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் 5 ஆவது விக்கெட்டுக்கும் வீழ்த்தப்பட்டது.

அதன்படி அலெக்ஸ் கரி 44 ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் 22 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் ஓவரில் போல்ட் முறையில் ஆட்டமிழக்க, கோல்ட்டர் நைல் ஆடுகளம் நுழைய, அடுத்த ஓவரில் பும்ரா அவரை போல்ட் முறையில் 4 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க செய்தது மாத்திரம் அல்லாமல், பும்ரா அடுத்து வந்த பேட் கம்மின்ஸையும் டக்கவுட் முறையில் வெளியேற்றினார்.

இதனால் வெற்றிக் காற்று இந்திய அணிப் பக்கம் வீச ஆரம்பித்ததுடன் அவுஸ்திரேலிய அணி 223 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுக்களையும் இழந்தது. 

ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு 2 விக்கெட்டுக்கள் மீதமிருக்க 3 ஓவர்களுக்கு 20 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது. 

ஆடுகளத்தில் டோனிஸ் 47 ஓட்டத்துடனும் நெதன் லியோன் ஒரு ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வர 48 ஆவது ஓவருக்கா பும்ரா பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு ஒரு ஓட்டத்தை மாத்திரம் வழங்கினார்.

49 ஆவது ஓவருக்காக மொஹமட் ஷமி பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள டோனிஸ் அரைசதம் விளாசினார். 

இறுதியாக அவுஸ்திரேலிய அணிக்கு ஒரு ஓவருக்கு 11 ஓட்டங்கள் என்ற நிலை உருவானது.

இந் நிலையில் இறுதி ஓவருக்காக விஜய் சங்கர் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு இந்திய அணிக்கு சவாலாக ஆடுகளத்திலிருந்த டோனிஸை 50 ஆவது ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க செய்து வெளியேற்றினார். இதையடுத்து 10 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சாம்பாவையும் 2 ஓட்டத்துடன் மூன்றாவது பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்தார் விஜய் சங்கர்.

இறுதியாக அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 8 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி கொண்ட 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 

http://www.virakesari.lk/article/51239

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.