Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலகோட்டில் மதரஸா கட்டிடங்கள் இன்னும் முழுமையாக இருக்கிறது: சாட்டிலைட் படங்கள் ஆதாரங்களுடன் ராய்ட்டர்ஸ் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலகோட்டில் மதரஸா கட்டிடங்கள் இன்னும் முழுமையாக இருக்கிறது: சாட்டிலைட் படங்கள் ஆதாரங்களுடன் ராய்ட்டர்ஸ் செய்தி

Published :  06 Mar 2019  15:57 IST
Updated :  06 Mar 2019  16:03 IST

ராய்டர்ஸ்

புதுடெல்லி / சிங்கப்பூர்
 
06INTHDEEINDIA-KASHMIRPAKISTAN-AIRSTRIKE

கைபர்-பதுன்க்வா மாகாணத்தில் பாலகோட்டில் மதரஸா ஒன்றின் சாட்டிலைட் படத்தின் நறுக்கப்பட்ட படம். | ராய்ட்டர்ஸ்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உயர் தொழில்நுட்ப சாட்டிலைட் படங்களை ஆய்வு செய்த போது ஜெய்ஷ்-எ-முகமது அமைப்பு நடத்தி வரும் சமயப்பள்ளிக் கட்டிடம்  வடகிழக்குப் பாகிஸ்தானில் இன்னும் முழுமையாக அப்படியே உள்ளது.

இந்தியா தரப்பில் பாலகோட் தாக்குதல் பற்றி கூறிய போது ஜெய்ஷ் இஸ்லாமிய குழுவின் பயிற்சி முகாமை அழித்ததாகத் தெரிவித்திருந்தது. மேலும் பல தீவிரவாதிகள் பலி என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் தனியார் சாட்டிலைட் ஆபரேட்டர் பிளானெட் லேப்ஸ் இந்தப் படங்களை எடுத்துள்ளது. அதாவது மார்ச் 4ம் தேதியன்று, இந்தியத் தாக்குதலுக்கு 6 நாட்களுக்குப் பிறகும் அந்த இடத்தில் 6 கட்டிடங்கள் அங்கு முழுமையாக இருப்பதைக் காட்டுகிறது.

இதுவரை இதுபோன்ற உயர் தொழில்நுட்ப சாட்டிலைட் இமேஜ்கள் பொதுவெளிக்குக் கிட்டியதில்லை. இந்தப் படங்களில் மத்திய அரசு தாக்கியதாகக் கூறப்படும் அதே கட்டிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன.

ஏப்ரல் 2018-ல் எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்களில் காட்டப்பட்ட அதே நிலைகள் அப்படியே இந்தப் படங்களிலும் இருக்கின்றன. கட்டிடங்களின் மேற்கூரையில் கூட கண்ணுக்குத் தெரியும் ஓட்டைகள் எதுவும் இல்லை. சுவற்றில் பிளவுகள் இல்லை. மதரசா அருகே உள்ள மரங்கள் சாய்ந்ததாகக் கூட அறிகுறி இல்லை என்கிறது ராய்ட்டர்ஸ் ஆய்வு.  சுருக்கமாக வான் வழித்தாக்குதல் நடந்ததற்கான தடயங்கள் இந்த நிலைகளின் மீது இல்லை என்கிறது இந்தப் புகைப்படங்கள்.

இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் மின்னஞ்சல் மூலம் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் எதுவும் வரவில்லை.

இது தொடர்பாக கிழக்கு ஆசிய ஆயுதப் பெருக்கத் தடை திட்ட அமைப்பின் இயக்குநர் ஜெஃப்ரி லூயிஸ் கூறும்போது, ‘இப்போது வெளியாகியுள்ள ஹை-ரிசல்யூஷன் சாட்டிலைட் படங்கள் காட்டுவதின் படி வெடிகுண்டினால் சேதம் எதுவும் ஏற்பட்டதற்கான தடயங்கள் இல்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “தாக்குதல் வெற்றிகரமாக இருந்திருந்தால்,  பயன்படுத்திய வெடிகுண்டுகள் பற்றி நமக்கு தெரிவிக்கப்பட்ட தகவல்கள் மட்டத்தில் கட்டிடங்கள் சேதமடைந்திருக்க வேண்டும், ஆனால் இங்கு எதுவும் அப்படித் தெரியவில்லை” என்றார்.

மூலம்: தி இந்து (ஆங்கிலம்)

https://tamil.thehindu.com/india/article26446010.ece

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இன்னும் அடம்பிடிக்குது சர்ஜிக்கல் ஸ்ரைக் 2 வெற்றி!!!
250 மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனராம்.
இருட்டுக்க குண்டை சரியா போடமுடியல போல?

  • கருத்துக்கள உறவுகள்

இங்க மோடின்னு ஒரு மானஸ்தான் இருந்தாரு .. அவரை தேடுறன்..  😎

QuarrelsomeClearBackswimmer-max-1mb.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இந்தியா இன்னும் அடம்பிடிக்குது சர்ஜிக்கல் ஸ்ரைக் 2 வெற்றி!!!
250 மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனராம்.
இருட்டுக்க குண்டை சரியா போடமுடியல போல? 

torch-icon-png-5.jpg

தோழர் , அவசரபட வேண்டாம் சேற்றிலைட்டில் டோர்ச் லைட் பொருத்தும் வேலை நடக்கிறது .. 😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்ஷ் இ முகமது தளங்கள் அழிக்கப்பட்டதாக பகிரப்பட்ட போலி புகைப்படங்கள் #BBCFactCheck

உண்மை பரிசோதிக்கும் குழுபிபிசி
மேப்படத்தின் காப்புரிமைGOOGLE/ZOOM EARTH

இந்திய விமானப்படை சமீபத்தில் பாகிஸ்தானின் பாலகோட் மீது நடத்திய தாக்குதலை அடுத்து, அங்கு ஏற்பட்ட சேதங்கள் என்று குறிப்பிடப்பட்டு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிவிட்ட ட்வீட் வைரலானது.

பகிரப்பட்ட காணொளியில், விமானப்படை தாக்குதலுக்கு உள்ளான பகுதி, தாக்குதலுக்கு முன்னும், அதற்கு பின்னும் எப்படி இருந்தது என்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மேலும், இது பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூ டியூபில் இவை ஆயிரக்கணக்கில் பார்க்கப்பட்டு பகிரப்பட்டது.

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலை தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமதின் பயிற்சி தளங்களை மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இந்தியாவின் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

ஆனால், அதற்கான ஆதாரம் என்று பகிரப்பட்டு வரும் கானொளி, சில தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தப்படங்களின் உண்மைத்தன்மை என்ன?

அந்தக் காணொளியில் வரும் முதல் புகைப்படத்தில் இருப்பது, தாக்குதலுக்கு முந்தைய காட்சி என்று கூறப்படுகிறது. அது 2019 பிப்ரவரி 23ஆம் தேதியன்று எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேப்படத்தின் காப்புரிமைTWITTER

இரண்டாவது புகைப்படம் 2019 பிப்ரவரி 26ஆம் தேதியன்று எடுத்ததாக சொல்லப்படுகிறது. விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படும் அதில், இந்திய விமானங்கள் ஏற்படுத்திய சேதத்தை காண்பிக்கிறது.

மேப்படத்தின் காப்புரிமைBING MAPS/ZOOM EARTH

எனினும், புகைப்படங்களின் உண்மைத்தன்மையை கண்டறியும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் நாம் பார்த்தபோது, இரண்டாவது புகைப்படம், பல ஆண்டுகளுக்கு முன்னரே இணையத்தில் இருந்தது நமக்கு தெரிய வந்தது.

மைக்ரோசாஃப்ட் பிங் மேப்ஸ் சேவையால் இயங்கும் செயற்கைக்கோள் படத்தளமான "Zoom Earth" என்ற தளத்தில் இருந்து அந்த இரண்டாவது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதையும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

அதன் நிறுவனரான பால் நீவ் பிபிசியிடம் கூறுகையில், விமான தாக்குதலுக்கும், அந்தப் புகைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

"ஆம். இந்த புகைப்படம் கட்டடங்கள் மீது குண்டு வீசப்பட்டதற்கான ஆதாரங்களாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. இப்படங்கள் பல ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். அதில் கட்டடம் கட்டப்பட்டு வருவதுதான் காண்பிக்கப்பட்டுள்ளது" என்று மேலும் அவர் தெரிவித்தார்.

நாசா பதிவேற்றும் புகைப்படங்கள் தினமும் மேம்படுத்தப்படும். ஆனால், பிங் மேப்ஸ் புகைப்படங்கள் தினமும் மேம்படுத்தப்படுவதில்லை. அவை பல ஆண்டுகள் பழமையானது.

ட்விட்டரில் பகிரப்படும் கூற்றுகளை பால் நீவ் பொதுவெளியில் மறுத்துள்ளார்.

ட்விட்டர்படத்தின் காப்புரிமைTWITTER

இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள அவர், தங்களின் வலைதளத்தில் செயற்கைக்கோள் படங்களை மேம்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர்படத்தின் காப்புரிமைTWITTER

Zoom Earthல் ஒரு குறிப்பிட்ட தேதி இடைவெளியில் செயற்கைக்கோள் படங்களை நம்மால் தேட முடியும். அப்படி நாம் தேடியபோது, அந்தப் புகைப்படம் 2015 - 2019க்குள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது (https://zoom.earth/#34.433061,73.324516,18z,sat)

முதல் புகைப்படத்தை பொறுத்தவரை இன்னும் அது கூகுள் மேப்பில் இருக்கிறது. ஆனால், அது எவ்வளவு தூரம் உண்மை என்பது குறித்து கேள்வி நிலவுகிறது. 

https://www.google.com/maps/place/34%C2%B025'59.0%22N+73%C2%B019'28.3%22E/@34.4325734,73.3240248,474m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d34.433055!4d73

https://www.bbc.com/tamil/india-47479648

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.