Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் கடன் கடிவாளத்தில் பாகிஸ்தான், இலங்கை; உலகை சூறையாடும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் சீனா: அமெரிக்க அதிகாரி குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் கடன் கடிவாளத்தில் பாகிஸ்தான், இலங்கை; உலகை சூறையாடும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் சீனா: அமெரிக்க அதிகாரி குற்றச்சாட்டு

Published :  17 Mar 2019  10:51 IST
Updated :  17 Mar 2019  10:51 IST
வாஷிங்டன்
 
7bf398d5P2097216mrjpg
 
துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்குக் கடன் வழங்குவதன்மூலம் சீனா பிற நாடுகளை சூறையாடும் பொருளாதார உத்திகளைக் கையாள்கிறது என அமெரிக்க அதிகாரி ஜோசப் டன்ஃபோர்டு என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சீனா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது One Belt, One Road என்ற திட்டம். இதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள தனது வர்த்தக சந்தைகளை இணைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக தனது நட்புறவு நாடுகளில் பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அமெரிக்க அரசின் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவர் ஜோசப் டன்ஃபோர்டு சீனா குறித்து பல்வேறு தகவல்களை அமெரிக்க ராணுவத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவர் கூறியதாவது, பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் அரபிக் கடலில் குவடார் துறைமுகத்தை சீனா அமைத்து வருகிறது. சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போடப்பட்டுள்ள பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பாகிஸ்தான் சுமார் 10 பில்லியன் டாலர் சீனாவுக்கு கடனாளியாக மாறியிருக்கிறது.

ஏற்கெனவே இலங்கை சீனாவுக்கு தர வேண்டிய கடனுக்காக அதன் ஆழ்கடல் துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு கொடுத்துள்ளது. மேலும், 70 சதவீத பங்கும் சீனாவின் கைகளில் உள்ளது. இதேபோல் மாலத்தீவு சீனாவுக்கு 1.5 பில்லியன் டாலர் கடனாளியாக உள்ளது. கட்டுமான திட்டங்களுக்காக இந்தக் கடன் தரப்பட வேண்டும். இது அந்நாட்டின் 30 சதவீத ஜிடிபி ஆகும். சீனா தனது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்த இதுபோன்ற பொருளாதார உத்திகளைக் கையாண்டுவருகிறது. உட்கட்டமைப்பு, துறைமுகம் உள்ளிட்ட திட்டங்களைக் கடனில் செயல்படுத்திக்கொடுத்து அந்நாடுகளின் மீது தனது ஆதிக்கத்தை அதிகப்படுத்துகிறது சீனா. இது உலகை சூறையாடும் பொருளாதார நடவடிக்கை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நட்பு நாடுகளிடம் சீனா செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் எந்தவித சர்வதேச விதிமுறைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படவில்லை. அனைத்திலும் மீறல்களும் முறைகேடுகளுமே உள்ளன என்றார்.

சில உதாரணங்கள், ஆப்பிரிக்க கண்டத்தின் djibouti நாடு 2017-ல் அதன் ஜிடிபியில் 80 சதவீத அளவுக்கு சீனாவுக்கு கடனாளியாக உள்ளது. இதனால், சீனாவின் முதல் சர்வதேச ராணுவ தளவாடமாக அந்நாடு மாறியுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் சீனாவுக்குத் தரவேண்டிய 6.5 பில்லியன் டாலர் கடனுக்குப் பதிலாக அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 முதல் 90 சதவீதத்தை சீனாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. அர்ஜென்டினா சீனாவுக்கு தன்னுடைய நிலத்தை 50 ஆண்டுகளுக்கு வரி இல்லாத குத்தகையாக விட்டுள்ளது. அந்த இடத்தில்தான் சீனா தனது ராணுவ தளத்தை அமைத்துள்ளது. இந்த ராணுவ தளத்தை கண்காணிக்க அர்ஜென்டினாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் சீனா, கடல் வழியிலும், தரை வழியிலும் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சீனாவின் இந்த தந்திரமான பொருளாதார போக்கு விரைவில் கவனத்துக்கு உட்படுத்தப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் அமெரிக்க இராணுவத்தின் மீது அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று டன்ஃபோர்டு எச்சரித்துள்ளார்.

https://tamil.thehindu.com/business/article26557439.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.