Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2007 ஏப்ரல் 20, நாளேடுகளில் உள்ள கொலைகள்

Featured Replies

சாய்ந்தமருதில் நேற்றிரவு துவக்கு சூடு இரு இளைஞர்கள் பலி; மூவர் படுகாயம்

சாய்ந்தமருது, அல்- ஜலால் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு 8.30 மணியளவில் கமநல மத்திய நிலையத்துக்கு முன்பாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு கூடி நின்று பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது ஆட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது, இருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரின் நிலைமை ஆபத்தாக இருந்ததை அடுத்து அவர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எஸ். ரிஷான் (வயது- 19), யூ.எல். ரணீவ் (வயது- 24) எனவும் காயமடைந்தவர்கள் ஜே. அஷ்மிர் (வயது- 20), ஏ.பி. தவூபீக் (வயது- 22), எம். அமானுல்லா (வயது- 21) எனவும் தெரிவிக்கப்பட்டது.

கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சர் ஜமால்தீன் தலைமையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பூவரசன் தீவில் ஒருவர் சுட்டுக் கொலை

கிண்ணியா பூவரசன் தீவு எனும் இடத்தில் புதன் கிழமை இரவு குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

7 பிள்ளைகளின் தந்தையான கே.அப்துல் ஹஸன் (54 வயது) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த தினத்தன்று இரவு 8.30 மணியளவில் இவரின் வீட்டுக்கு சென்ற இரு துப்பாக்கிதாரிகள் அவரை வீட்டுக்கு வெளியே அழைத்து சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் இரவு வேளையில், இவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத சிலர் இவரை வெளியில் அழைத்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூச்சலிடவே அவர்கள் சென்றுவிட்டதாகவும் இந் நிலையிலேயே இக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.

கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவிலுடையில் வந்தோரின் துவக்குச் சூட்டில் காயமடைந்த இளைஞன் ஆஸ்பத்திரியில்

* பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடு

உடப்புப் பொலிஸ் பிரிவிலுள்ள ஆராய்ச்சிக்கட்டு பகுதிக்கு சிவில் உடையில் ஆயுதங்களுடன் வந்த காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய வைரமுத்து மகேந்திரன் (25 வயது) என்ற வாலிபர் ஆபத்தான நிலையில் சிலாபம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றுக் காலை வெள்ளை வானில் வந்த பொலிஸாரின் இந்த நடவடிக்கை குறித்து கொழும்பு மாவட்ட மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடம் ஆராய்ச்சிக்காட்டு, மலையக மக்கள் முன்னணி பிரதேச சபை உறுப்பினர் சிவபாலன் புகார் செய்துள்ளார்.

மீன் விற்பனை வியாபாரத்தை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தவரையே சிவிலுடையில் வந்த பொலிஸார் சுட்டதாகவும் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யச் சென்ற முத்துராசா என்பவரை பிரஸ்தாப வானில் தொடர்ந்து சென்றோர் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கி காவலில் வைத்துள்ளதாகவும் வேறு பொதுமக்கள் பொலிஸ் நிலையத்துக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் காவல் துறையினரே பதற்ற நிலையையும் தமிழர்கள் மீதான தாக்குதல்களையும் திட்டமிட்டு மேற்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா- சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் பெனாண்டோ, வடமேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லெவங்கம ஆகியோரிடம் புகார் செய்துள்ளதோடு, இச்சம்பவம் குறித்து உடன் நியாயமான விசாரணை நடத்துமாறு கேட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் சனநடமாட்டம் குறைந்துள்ளதாகவும் இப்படியான செயல்களால் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் சிவபாலன் கவலை தெரிவித்துள்ளார்.

தொகுப்பு, தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.