Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் கணிப்பு தடம் மாறிச் செல்கிறதா?

Featured Replies

சர்வதேசத்தின் கணிப்பு தடம் மாறிச் செல்கிறதா?

`

இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்றன. இதனால்தான் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலை உருவாக வழிவகுத்தது இலங்கை அரசுதான்.

இப்படி அரசு மீது குற்றம் சுமத்தியிருக்கின்றது பிரதான எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சி.

நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாட்டு இராஜதந்திரிகள் வரம்பு மீறித் தலையிடுகிறார்கள் எனத் துள்ளிக் குதித்துச் சீறுகின்றது அரசு. ஆனால் அவ்வாறு அவர்கள் தலையிடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியமைக்கு அடிப்படையே அரசின் குளறுபடிப் போக்கும் செயற்பாடும்தான்.

இலங்கையில் அரசின் பின்புல நடவடிக்கைகளாக அரங்கேறும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் "கண்கொத்திப் பாம்பாக' அவதானிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள இச்சமயத்தில், இவ்விவகாரங்களைக் கையாள்வதில் எவ்வளவு சிரத்தையும், நுட்பமும், கவனிப்பும் காட்டப்பட வேண்டும் என்பது இந்த அரசுத் தலைமைக்கும் இன்னும் புரியாமல் இருப்பது வியப்புத்தான்.

தனது செயற்பாட்டுப்போக்கால் சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் தாம் தொலைத்து வருகின்றோம் என்ற உண்மை அரசுத் தலைமைக்கு விளங்கவே இல்லைப் போலும்.

கடந்த ஆண்டில் கொழும்பில் இராணுவத் தலைமையகத்துக்குள் வைத்து இலங்கை இராணுவத் தளபதி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அருந்தப்பில் அவர் பிழைத்தார். எனினும் பல படையினர் உயிரிழந்தனர்.

இராணுவ முகாமுக்குள் இராணுவ இலக்கு ஒன்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அது. என்றாலும் அச்சம்பவம் இடம்பெற்ற கையோடு உலக நாடுகள் பலவும் கொதித்து எழுந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பின. அத்தாக்குதலை நடத்தியவர்கள் புலிகளே என்பது நிரூபணமாக முன்னரே, புலிகளை அதற்குப் பொறுப்பாக்கி உலகம் அவர்கள் மீது பாய்ந்தது.

அப்படியிருந்த சர்வதேச நிலைமையை, இன்று, மஹிந்த அரசு எவ்வளவு தலைகீழாக மாற்றியிருக்கின்றது என்பது ஆச்சரியத்துக்குரியது.

இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அமைதி முயற்சிகளில் இரண்டு தரப்பும் சம அந்தஸ்து உடையவையாக சமநிலையில் கருதப்படவேண்டும். ஆனால் புதிதாகப் பதவியேற்ற மஹிந்த அரசு, அந்த சம அந்தஸ்துத் தகுதி நிலையைப் புலிகளுக்கு வழங்க மறுத்து வருகின்றது. பயங்கரவாத அமைப்பான புலிகளை சட்டரீதியான இறைமையுள்ள இலங்கை அரசுடன் சம அந்தஸ்தில் கருத முடியாது என அது வாதிடுகின்றது.

பல சர்வதேச நாடுகளும் இதுவரை அந்நிலைப்பாட்டைத்தான் கைக்கொண்டு வந்தன. அரசு (ண்tச்tஞு ஞூச்ஞிtணிணூ), அரசு அல்லாத அமைப்பு (ணணிண ண்tச்tஞு ஞூச்ஞிtணிணூ) என்ற வேறுபாட்டு நிலையிலேயே இலங்கை அரசையும் புலிகளையும் அவை கையாண்டு வந்தன; கையாண்டு வருகின்றன.

ஆனால் அவற்றின் நிலைப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை இப்போது அவதானிக்க முடிகின்றது.

புலிகள் தமது வான் புலித் தாக்குதலை நடத்தி உலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்தபோது சர்வதேச சமூகம் நடந்து கொண்ட விதம் இங்கு கவனிக்கத்தக்கது.

அரசு அல்லாத ஒரு தனித் தரப்பிடம் சட்ட ரீதியான அரசு ஒன்றின் ஆணையோ, இறைமையோ செல்லுபடியற்ற ஓரிடத்தில் விமானத்தளம் இருப்பதும், பறந்து சென்று வான்வழிக் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தி அந்த வான்படை வலிமை தன்னிடம் இருப்பதை அந்தத் தரப்பு நிரூபித்திருப்பதும் புதிய விடயங்கள்.

சர்வதேச நாடுகள் பல, விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து அறிவித்து, அதற்குத் தடை விதித்துள்ள பின்னணியில், அரசுக் கட்டமைப்பு அந்தஸ்து இல்லாத அந்த அமைப்பு உலகில் அத்தகைய அந்தஸ்தில் வான்படை வலிமை உள்ள ஒரே இயக்கம் எனத் தன்னை நிரூபித்திருக்கின்ற சூழலில்

உலக நாடுகள் பலவும் துள்ளிக்குதித்து, புலிகளுக்கு எதிராகக் கண்டனக் கணைகளை எழுப்பும் என்றே இலங்கை அரசு உட்படப் பல தரப்புகளும் எதிர்பார்த்தன.

புலிகளின் அதிரடி வான் தாக்குதல் ஏற்படுத்திய வியப்பையும் அதிர்ச்சியையும் போல, இது விடயத்தில் சர்வதேச சமூகம் வெளிப்படுத்திய அசாதாரண அமைதியும், மௌனமும் கூட பல தரப்பினரையும் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தத் தவறவில்லை.

பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் இந்தியா, ஜப்பான் ஆகியவை உட்பட எந்த நாடுமே வான்படைப்பலத்தை புலிகள் கொண்டிருப்பதையோ, அதை செயலில் அவர்கள் நிரூபித்திருப்பதையோ இன்றுவரை கண்டிக்கவேயில்லை.

இலங்கை அரசுத் தரப்பிடம் வான் படை இருப்பதுபோல புலிகளிடமும் வான் படை உள்ளது என்ற கருத்துடன் வாயை மூடிக்கொண்டு விட்டதா சர்வதேச சமூகம்? அல்லது இது விடயத்தில் அரசுத்தரப்பு, அரசு அல்லாத தரப்பு என்ற வேறுபாட்டை இலங்கை அரசுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் காண்பதற்கு சர்வதேச சமூகம் விரும்பவில்லையா?

இராணுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதல் முயற்சி தொடக்கம் பல தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து கண்டித்து வந்த சர்வதேச சமூகம் புலிகளின் வான் வழித் தாக்குதலை மட்டும் அசாதாரண அமைதியுடன் பார்த்து நிற்கின்றது.

சர்வதேச சமூகத்தின் இலங்கை தொடர்பான அணுகுமுறையில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய மாற்றம் இது.

எது, எப்படியென்றாலும் இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்தின் இந்த அமானுஷ்ய அமைதி மௌனம் தமிழர் தரப்புக்குக் கிடைத்த வெற்றி. தென்னிலங்கை அரசுக்குக் கிடைத்த பெரும் சறுக்கல்.

தமிழர் தரப்பின் செயற்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி என்பதிலும் பார்க்க

மனித உரிமைகளைப் பேணுதல், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல், நீதிப்படி செயற்படுதல், சர்வதேசங்களைக் கையாளுதல் போன்ற விவகாரங்களில் தென்னிலங்கை அரசு இழைத்த தவறுகளுக்குக் கிடைத்த தோல்வி இது என்று கூறுவதே பொருத்தமானது.

தனக்கேற்பட்டுள்ள இந்தச் சறுக்கலை கொழும்பு புரிந்துகொண்டு தனது போக்கைத் திருத்திக்கொள்ள அது முன்வராதவரை மேலும் பல சறுக்கல்களை அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்ப்பதில் தவறிருக்க முடியாது.

உதயன் ஆசிரியர் தலையங்கம்

இத சன்டே டைம்ச்க்கு அனுப்பனும்.

  • தொடங்கியவர்

இத சன்டே டைம்ச்க்கு அனுப்பனும்.

தல கீழ போடணும் எண்டு விருப்பம்னா சொல்லுங்க இங்கையே போடலாம் எதுக்கு ஆட்டுபால் கிட்ட எல்லாம் அனுப்பனும் :unsure:

இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்றன. இதனால்தான் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலை உருவாக வழிவகுத்தது இலங்கை அரசுதான்.

இப்படி அரசு மீது குற்றம் சுமத்தியிருக்கின்றது பிரதான எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சி.

நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாட்டு இராஜதந்திரிகள் வரம்பு மீறித் தலையிடுகிறார்கள் எனத் துள்ளிக் குதித்துச் சீறுகின்றது அரசு. ஆனால் அவ்வாறு அவர்கள் தலையிடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியமைக்கு அடிப்படையே அரசின் குளறுபடிப் போக்கும் செயற்பாடும்தான்.

இவர்களுக்கு இப்பத்தான் வாழ்க்கையில உருப்படியா ஒண்டு புரிஞ்சிருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.