Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போனோரை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் விளம்பரத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடு

Featured Replies

காணாமல்போனோரை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் விளம்பரத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடு

தமிழ் மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் "புனித போர்" என்ற போர்வையில் முன்னெடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய சோசலிச கட்சியின் பொதுச் செயலாளரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான ஷ்ரீதுங்க ஜயசூரிய காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட்டோரை பயங்கரவாதிகளாக சித்திரித்து "டெய்லி நியூஸ்" ஆங்கில பத்திரிகையில் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய சோசலிச கட்சியின் சோசலிச மே தின ஊர்வலம் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

அரசாங்கம் இவ்விளம்பரத்தின் மூலம் காணாமல்போன மற்றும் கடத்தப்பட்ட அப்பாவிகளை பயங்கரவாத மற்றும் சட்ட விரோத குற்றச்செயல்களோடு தொடர்புபட்டவர்களாக காட்டுவதுடன் அவர்களுக்கு ஏதோ நடந்துவிட்டது என்பதையும் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஆங்கில பத்திரிகையில் சிங்கள மொழியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இவ்விளம்பரத்தை யார் பிரசுரித்தார்கள் என்று அவ்விளம்பரத்தில் எவ்வித அடிக்குறிப்பும் இல்லை என்பதால் இது அரசாங்கத்தின் செயற்பாடு என்றே நம்ப வேண்டியுள்ளது.

காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட்டோருடைய குடும்பங்களின் துயரத்தை உணராமல் இப்படியொரு விளம்பரத்தை பிரசுரித்துள்ளமை மிகவும் கேவலமான அரச பயங்கரவாத நடவடிக்கையின் வெளிப்பாடாகும்.

ஐக்கிய சோசலிச கட்சியின் மே தின சோசலிச ஊர்வலம் யுத்தத்துக்கு இடமளியோம், சுரண்டலுக்கு இடமளியோம், முதலாளித்துவத்துக்கு இடமளியோம் என்ற தொனிப்பொருள்களில் இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தின் மேற்குறிப்பிடப்பட்ட விளம்பர பிரசுரத்தை கண்டித்தும், காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட்டோரின் அவல நிலையை தேசிய மயப்படுத்துவதும் எமது மே தின நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.

உலகமயமாக்கலுக்கு எதிராகவும் காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட்டோரின் புகைப்படங்களை தாங்கியவாறு செல்ல தீர்மானித்துள்ளோம்.

அவ்வூர்வலத்தில் காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட்டோரின் புகைப்படங்களுடன் குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் கட்டாயமாக கலந்துகொள்ள வேண்டும்.

ஊருகொடவத்தை ரயில் களஞ்சியசாலைக்கு அருகாமையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும் ஊர்வலத்தை தொடர்ந்து கிராண்ட்பாஸ் பலா மரத்தடி சந்தியில் பொதுக்கூட்டமும் இடம்பெறும்.

டெய்லி மிரர் பத்திரிகை ஆசிரியருக்கு பாதுகாப்பமைச்சு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவால் விடுக்கப்பட்ட கொலை மிரட்டலும் டெய்லி மிரர் பத்திரிகையாளர் எஸ்.செல்வநாயகம் மீதான கடத்தல் முயற்சியும் ஊடகத்துறை மீதான நேரடித் தாக்குதலாக மட்டுமன்றி இந்நாட்டில் ஜனநாயகமோ, மனித உரிமைகளோ இல்லையென்பதை வெளிப்படுத்தி நிற்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.