Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டுவெடிப்புகளில் பலியானோர் தொகை 290 ஆக உயர்ந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுவெடிப்புகளில் பலியானோர் தொகை 290 ஆக உயர்ந்தது

 

blast-victims-6-300x198.jpgசிறிலங்காவில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் தேவாலயங்களிலும், ஆடம்பர விடுதிகளிலும், நடத்தப்பட்ட  இந்த தாக்குதல்களில் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

கொழும்பில் 1000 இராணுவத்தினர்

இந்த தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1000 இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

24 கைது

நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டு  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்

குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பேர் தம்புள்ளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தியத்தலாவ பகுதியில் விமானப்படையினரால், தந்தையும இரண்டு மகன்களும், ரி-56 துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு திரும்பிய மைத்திரி அவசர ஆலோசனை

சிங்கப்பூருக்குச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பினார்.

இதையடுத்து, நாட்டின் நிலைமைகள் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்  காலை 9 மணியளவில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அவசரமாக கூட்டப்படும் நாடாளுமன்றம்

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பிற்பகல் 2 மணியளவில்  கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாளை காலை சிறிலங்கா நாடாளுமன்றததின் அவசர கூட்டத்துக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இதில் ஆராயப்படவுள்ளது.

blast-victims-1.jpgblast-victims-2.jpgblast-victims-3.jpgblast-victims-4.jpgblast-victims-5.jpgblast-victims-6.jpgblast-victims-7.jpgblast-victims-8.jpgblast-victims-1.jpeghttp://www.puthinappalakai.net/2019/04/22/news/37561

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு -UPDATE

நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, தெஹிவளை மற்றும் கொழும்பின் பிரபல நட்சத்திர விடுதிகளும் இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஹோட்டல்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு கொழும்பு கட்டுநாயக்க விமானநிலைய நுழைவாயில் வீதியில், குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்பு தொடர்பான சந்தேகத்தின்பேரில் இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 10 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

http://athavannews.com/குண்டுத்தாக்குதலில்-உயி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.