Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடி பொருள் நிரப்பிய ஒரு லாரி, வேன் கொழும்பில் நுழைந்திருப்பதாக போலீஸ் உஷார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இலங்கைபடத்தின் காப்புரிமை Reuters

முழுவதும் வெடிபொருள் நிரப்பிய ஒரு லாரியும், ஒரு வேனும் இலங்கை தலைநகர் கொழும்புவிற்குள் நுழைந்திருப்பதாக கொழும்பு நகர காவல் நிலையங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பிபிசி செய்தியாளர் அஸம் அமீன் பகிர்ந்துள்ள ட்வீட்.

இத்தகவலை போலீஸ் ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது என்கிறார் கொழும்புவில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் ஒருவர்.

இறந்தவர்கள் உடல்கள் கூட்டாக அடக்கம்

இலங்கை தற்கொலைகுண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில், 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை கூட்டாக அடக்கம் செய்யும் நிகழ்வு தொடங்கியுள்ளது.

நீர்கொழும்பில் உள்ள செபாஸ்தியன் தேவாலயத்தில் இந்த கூட்டு இறுதிச் சடங்கு நிகழ்வு நடைபெற்றது.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பு

இலங்கையில் அவசர நிலை அமலில் இருக்கும் நிலையில் இன்று மதியம் நாடாளுமன்றம் கூடியது.

இலங்கைபடத்தின் காப்புரிமை JEWEL SAMAD

அப்போது பேசிய சபாநாயகர் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

பாதுகாப்பு தரப்பில் இருந்து இந்த தகவல்கள் வந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்லாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு தேவை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

40 பேர் கைது

இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 26 பேர் குற்றப்புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்படுவர். உள்ளூர் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் அமைப்பான தேசிய தவுஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய சிலரை கைது செய்ய பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என பிபிசி செய்தியாளர் அசாம் அமீன் தெரிவிக்கிறார்.

டுவிட்டர் இவரது பதிவு @AzzamAmeen: 40 Persons arrested so far, 26 of them are being questioned by CID. Several investigations underway to arrest more people connected local Islamic extremist group National Thawheed Jamath - Senior Police officerபுகைப்பட காப்புரிமை @AzzamAmeen @AzzamAmeen <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @AzzamAmeen: 40 Persons arrested so far, 26 of them are being questioned by CID. Several investigations underway to arrest more people connected local Islamic extremist group National Thawheed Jamath - Senior Police officer" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/AzzamAmeen/status/1120555469599322112~/tamil/sri-lanka-48019351" width="465" height="250"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @AzzamAmeen</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@AzzamAmeen</span> </span> </figure>

இவர்களில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 6 வரை விலக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 9 பேரும் வெல்லம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரே தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் அறியவில்லை

இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் இலங்கை இராணுவம் அறிந்திருக்கவில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ள போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இராணுவத்தினால் தனித்து செயற்பட முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நபர்களை பரிசோதிக்கின்றமை, கைது செய்கின்றமை மற்றும் வீதி தடைகளை ஏற்படுத்துகின்றமை போன்ற செயற்பாடுகளுக்கான அதிகாரத்தை இராணுவத்திற்கு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வு தகவல்களின் தெளிவின்மை காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ள இராணுவ தளபதி, இராணுவம் தெளிவுட்டப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இராணுவத்திற்கு புலனாய்வு தகவல்கள் பகிரப்பட்டாலும், செயற்படுவதற்கான அதிகாரம் கிடையாது எனவும், அந்த அதிகாரத்தை வேறொரு தரப்பிற்கு வழங்குகின்றமை பிரச்சினைக்குரிய விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வேறு தரப்பினர் மீது விரல் நீட்டுவதை தவிர்த்து, எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய துக்க தினம்

இலங்கையில் இன்று தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, அனைத்து அரசாங்க நிறுவனங்கள், திணைக்களங்களில் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டு துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், அலுவலக நேர ஆரம்பத்தின் போது, 3 நிமிட மௌன அஞ்சலியையும் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-48019351

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.