Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் புலிகள் மீது தாக்குதல் நடாத்தப்படும் - ரட்ணசிறி விக்கிரமநாயக்க

Featured Replies

வடக்கில் புலிகள் மீது தாக்குதல் நடாத்தப்படும் - ரட்ணசிறி விக்கிரமநாயக்க

ஹெரணவில் நேற்று இடம்பெற்ற புதுவருட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வடக்கில் உள்ள விடுதலைப்புலிகளின் தளங்கள் மீது இன்னும் சில தினங்களில் தாக்குதல் நடாத்தப்படும் என சிறீலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிழக்கிலும் மீட்கப்படாத பகுதிகளும் விரைவில் மீட்க்கப்படும் எனவும் வடக்கை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த வருடத்திற்குள் நாட்டின் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாட்டை அபிவிருத்தி பாதைக்கு முன்நகர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரியவருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/

வடக்கில் தாக்குதல் நடத்தபடும் அதில் அடிவாங்கி உயிரை விடப்போகும் இராணுவ உடலங்களை தென்னிலங்கை மண் அட்டகாசத்துடன் தனக்குள் அடக்கி கொள்ளும் இதுதான் இனி நடக்கபோகும் செய்தி

அடுத்த சில தினங்களுக்குள்

வடக்கில் பெரும் தாக்குதல்!

பிரதமர்ரட்ணசிறிசொல்கிறார்

கொழும்பு,ஏப். 23

வடக்கில் எதிர்வரும் சில தினங்களில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது பெரும் தாக்குதல் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.

நேற்று ஹொறனையில் நடைபெற்ற புதுவருட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

""கிழக்கில் எஞ்சியுள்ள புலிகளின் முகாம்கள் மீது அரச படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் பயங்கரவாதத்தை ஒழிப்பது மாத்திரம் அல்ல பாரிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட வருடம்'' என்றும் அங்கு ரட்ணசிறி தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

பயங்கரவாதத்துக்கு எதிராக அரசு முறையான யுத்தம் ஒன்றை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் மூலமாக வடக்கில் இரு பிரதேசங்களுக்கு மாத்திரம் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மக்களைப் பயமுறுத்தவதன் மூலமாக தனியாட்சி ஒன்றை உருவாக்கும் புலிகளின் முயற்சி அழிக்கப்பட்டுவிட்டது.

படையினரின் இராணுவ நடவடிக்கை காரணமாக பயங்கரவாதிகள் பாரிய பின்னடைவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிங்களவர்கள் சிலர் பணத்துக்காக புலிகளிடம் நாட்டைக் காட்டிக்கொடுப்பது தேசத்துரோக செயலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.