Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆலயங்களில் மிருக பலியிடல் ; மனு மீதான தீர்ப்பு 10 ஆம் திகதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயங்களில் மிருக பலியிடல் ; மனு மீதான தீர்ப்பு 10 ஆம் திகதி

 

இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

miragupali.jpg

யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

மனுவின் எதிர்மனுதாரர்களாக சட்ட மா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்தது. இந்து ஆலயங்களில் மிருக பலியிடலை முற்றாகத் தடை செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத் தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு வரும் ஜூலை 10ஆம் திகதி வழங்கப்படும் எனத் திகதியிடப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாண ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை இறைச்சிக்கடைச்  சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்றன. அவ்வாறு அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும்” எனக் கோரி சைவ மகா சபையினர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை சட்டத்தரணி வி.மணிவண்ணன் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடைவிதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஒன்றரை வருடங்கள் விசாரணையிலிருந்த இந்த வழக்குக்கு 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி இறுதிக் கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார்.

“இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்கள்  பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடை உத்தரவை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் அதன் மீது  உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரை கைதுசெய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்படுகிறது” என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்  கட்டளையிட்டார்.

இந்தத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்தும் வேள்வியின் பண்பாட்டுத் தேவையை வலியுறுத்தியும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

 

http://www.virakesari.lk/article/55206

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மதமும்....அதன் வழிபாட்டு முறைகளும்.....காலத்துடன்....சேர்ந்து பயணிக்க வேண்டும்....!

சைவ மதம் ...இதனைச் செய்து வருவதால் தான்.....மூவாயிரும் ஆண்டுகள் கடந்தும் .....அது வாழ்கின்றது!

இஸ்லாமிய மதமும்....அடிப்படை வாதத்தில் தொடர்ந்து பயணித்தால்....அழிவைத் தவிர்க்க முடியாது!

20 minutes ago, புங்கையூரன் said:

ஒரு மதமும்....அதன் வழிபாட்டு முறைகளும்.....காலத்துடன்....சேர்ந்து பயணிக்க வேண்டும்....!

சைவ மதம் ...இதனைச் செய்து வருவதால் தான்.....மூவாயிரும் ஆண்டுகள் கடந்தும் .....அது வாழ்கின்றது!

நிச்சயமாக புங்கையூரான். பழையன கழிந்து, புதியன புகுதலுக்கு மதங்களும் விதிவிலக்கு அல்ல. கடைப்பிடிக்கும் மக்களுக்கு நன்மை தரும் வகையான, மற்றோர்க்குத் தீங்கில்லாத மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியவையே. அப்படி இல்லாதவிடத்து பாரம்பரிய முறைகளைப் பேணுவது தான் சிறந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிருகபலி தடை செய்யப்பட்டதை எதிர்த்து வழக்குப்போடுவதுபோல முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் புர்கா தடை செய்யப்பட்டதையும் எதிர்த்து வழக்குப்போட ஒரு சிலர் இருப்பார்கள்.

உயர் நீதிமன்றம் இப்படியான வழக்குகளை தள்ளுபடி செய்து பழைய பாரம்பரியங்களைப் பேணுகின்றோம் என்று சாட்டுச் சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்லபாடத்தைக் கொடுக்கவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.