Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் எம்.பிக்கள் மட்டக்களப்புக்கு செல்ல பாதுகாப்பு உத்தரவாதம் கோருகின்றனர்

Featured Replies

தமிழ் எம்.பிக்கள் மட்டக்களப்புக்கு செல்ல பாதுகாப்பு உத்தரவாதம் கோருகின்றனர்

ஹெலிக்கொப்டர் வசதி தருமாறு கேட்டு அரசுக்குக் கடிதம்

கொழும்பு,ஏப்ரல் 23

மட்டக்களப்பில் நாளை நடைபெறவிருக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு செல்வதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குமாறு தமிழ்க்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கள் அரசிடம் கோரியுள்ளனர்.

தற்போது கொழும்பில் தங்கி இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்கள் அங்கு செல்வதற்கு ஹெலிக்கொப்டர் வசதி செய்து தருமாறும் கேட்டி ருக்கின்றனர்.

மட்டக்களப்பில் தாங்கள் எதிர்நோக்குகின்ற பாது காப்புப் பிரச்சினையை விளக்கி, கூட்டமைப்பு எம்.பிக் கள் நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்திலேயே இக்கூட் டத்தில் கலந்துகொள்ளச் செல்வதற்கு வசதியாக ஹெலிக் கொப்டர் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கூட்டம் இம் மாதம் 11ஆம் திகதி கொழும்பில் நாடாளுமன்றக்குழு அறையில் இடம்பெறவிருந்தது. பின்பு சில காரணங்களுக்காக அக்கூட்டம் ஒத்திப்போடப்பட்டது.

அக்கூட்டத்தை நாளை மட்டக்களப்பில் நடத்துவதென அரசு இப்போது தீர்மானித்திருக்கின்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.அரிய நேத்திரன், ஜெயானந்தமூர்த்தி, தங்கேஸ் வரி மற்றும் கனகசபை ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நால்வரும் தற்போது கொழும் பில் தங்கி யுள்ளனர்.இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஏற்றவாறு தமது பாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு மட்டக் களப்பு செல்ல ஹெலிக்கொப்டர்வசதி

வழங்கினால் மாத்திரமே அங்கு சென்று கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றும் இல்லையேல் கூட்டத்தைப் பகிஷ்கரிப் பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமையை விளக்கி நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத் திட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு நேற்றுக் காலை "தொகைநகல்' மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதற்கான பதிலை அவர்கள் அரசிடமிருந்து எதிர்பார்த்திருகின்றனர்.

மட்டக்களப்பு படுவான்கரையில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த சமயம் அவர்களைப் பார்க்கச் செல்வதற் காக இதேபோன்றொரு கோரிக்கையை இவர்கள் நால் வரும் அரசிடம் முன்வைத்தனர் என்றும் அக்கோரிக் கையை அரசு அப்போது நிராகரித்து விட்டது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ப. அரியநேத்திரன் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அமீர் அலி, மட்டக்களப்பு அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள அதி காரிகள் ஆகியோர் கலந்துகொள்வர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னவோ, தானாக வலையில் போய் மாட்டுப்படப் போகின்றார்களோ என்ற பயமாக இருக்கின்றது. கொழும்பில் நடத்த இருந்த கூட்டத்தை அரசு, மட்டக்களப்பிற்கு மாற்றியது, இவர்களைப் பாதுகாப்பற்ற சூழலுக்கு கொண்டு சென்று மாட்டுவதற்கே.

எனவே திரு. ஜெயானந்த மூர்த்தி, அரியநேந்திரன், தங்கேஸ்வரி போன்றவர்கள் மிகமிக அவதானமாகச் செல்லுங்கள். எதிரிகளின் குகைக்குள் இருந்து செயற்படுவது ஆபத்தானது. அதை விட ஆபத்து, எதிரிகளோடு, குள்ளநரிகளும் சேர்ந்து இருப்பது தான்.

Edited by ஒற்றன்

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் எல்லாமிழந்து இருக்கும் போது இவையளுக்கு ஹெலி கேக்குதா..............?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.