Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹான்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சி பயணம் இரத்து.

Featured Replies

ஹான்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சி பயணம் இரத்து.

சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சிப் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த பயணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இரத்து செய்யப்பட்ட தகவல் விடுதலைப் புலிகளுக்கு நோர்வேத் தூதரகத்தால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

வன்னிக்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட ஆலோசனையை அடுத்து இந்தப் பயணம் இரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமாதானப் பேச்சுக்களை தொடர வேண்டும் எனில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துதல் என்ற அடிப்படையில் பேசலாம் என விடுதலைப் புலிகள் தெரிவித்து வரும் நிலையில் அதனை அதிகாரப்பூர்வமாக நோர்வேத் தரப்பிடம் விடுதலைப் புலிகள் தெரிவித்தால் நிலைமைகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடலாம் என்ற வகையிலேயே இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்ற ஆலோசனை சிறிலங்கா அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

-Puthinam-

தமிழீழ விமானப்படையின் உதவியோடு போக சொல்லி போட்டினம் போல கிடக்கு. அதுதான் நோர்வேக்காரரும் யோசிச்சுக்கொண்டு நிற்கிறார் போலும்

ஹான்ஸ் பிறட்ஸ்கருக்கு சூடு சுரணையே கிடையாதா ?

சமாதானம் பேச வேண்டும் என்பார்கள், போகவேண்டாம் என்பார்கள், நோர்வேயை வெளியேறச் சொல்லி பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்....

இதையெல்லாம் இவர் எப்படி பொறுத்துக் கொள்கிரார் ?

ஒருவேளை சர்வதேச அழுத்தம் போல் இவர்மீது ஏதாவது உள்நாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுகின்றனவோ. :o

எப்போதும் பேச்சுவார்த்தை நடத்தும் நடு நிலையாளர்கள் பலமான நிலையில் இருக்கவேண்டும்

ஒரு பேச்சு வார்த்தை நடந்து ஒரு முடிவு எடுத்தால் அதனை நடைமுறைப்படுத்த மிகவும் உறுதியாக நடவடிக்கை எடுக்கவும், முடியாவிட்டால் பகிரங்கமாக காரணங்களை உலகிற்கு அறிவித்து விலகிவிட வேண்டும்...

சில நாடுகளின் பின் ஆதரவுடன் உள்னோக்கங்களுடன் ஒரு பகுதியை பலப்படுத்த கால அவகாசம் எடுப்பதற்கு, தாங்கள் தான் எல்லாமே என்று உலகத்திற்கு காட்டுவதற்கு எமக்கு பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பலயீனமானவர்கள் தேவை தானா?

உலகத்திற்கு எமது பொறுமை போதும்... ஒரு பக்கம் பாய்வதற்கு துருப்புகளை குவித்துக்கொண்டு மறுபக்கம் பொய்களை உலகத்திற்கு உரைத்துக்கொண்டு நாடகமாடுவர்களுடன் சிலமொழிகளில் தான் அவர்களுக்கு புரியும் படி பேசினால் அவர்கள் தாங்களாகவே உலகத்திடம் பேச்சு வார்த்தைக்கு ஓடுவார்கள்.....

இது தான் தற்போதைய நடைமுறை.....

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 23-04-2007 14:40 மணி தமிழீழம் [தாயகன்]

நோர்வே - விடுதலைப் புலிகள் சந்திப்பு இரத்து

சிறீலங்காவிற்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சந்திப்பு திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கிளிநொச்சி சென்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையிலான பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த திடீர் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா பேச்சுக் குழுவின் தலைவரும், அமைச்சருமான நிமால் சிறீபால டி சில்வாவை கடந்த வெள்ளிக்கிழமை நோர்வேத் தூதுவர் சந்தித்திருந்தார்

பதிவு

நோர்வே தூதுவரின் வன்னி விஜயத்துக்குத் தடை! இராஜதந்திரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!!

வடக்கில் பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு என்று ஊகம்

கொழும்பு,ஏப்ரல் 24

நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கரின் வன்னி விஜயத்தை அரசாங்கம் தடை செய்துவிட்டது. நேற்றைய அவரது கிளிநொச்சிப் பயணத்தை நிறுத்துமாறு அரசாங்கம் தூதுவருக்கு உத்தரவிட்ட தாக ஏ.எவ்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இலங்கையின் சமாதானப் பேச்சுக் களுக்கு அனுசரணை வகிக்கும் நோர்வே யின் கொழும்புத் தூதுவர் அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் விடுதலைப் புலிகளு டனும் சந்திப்பதும் பேசுவதும் வழமை யான செயற்பாடாகும்.

ஆனால், அவர் நேற்றுத் திங்கட்கிழமை வன்னிக்குச் செல்வதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. பாதுகாப்புக் காரணங்கள் கருதி அவரது பயணத்தை ரத்துச் செய்யு மாறு உத்தரவிட்டது.

""அரசாங்கத்திடம் இருந்து நேற்று (ஞாயிறு) மாலை எங்களுக்குத் தொலை பேசி அழைப்புக் கிடைத்தது. பாதுகாப் புக் காரணம் கருதி கிளிநொச்சிக்குச் செல் வது புத்திசாலித்தனமானதல்ல. ஆகையால் பயணத்தை ரத்துச் செய்யுங்கள்'' என்று அப் போது தெரிவிக்கப்பட்டது என்றார் நோர் வேத் தூதரகப் பேச்சாளர் எரிக் நம்பேர்க்.

பாதுகாப்புக்கு அக்கறையான விடயம் எது என்பதை அரச அதிகாரிகள் எமக்குத் தெரிவிக்கவும் இல்லை. தூதுவரின் விஜ யத்துக்கான புதிய திகதி எதுவும் எங்களுக்கு தரப்படவுமில்லை என்றும் பேச்சாளர் நப்பேர்க் சொன்னார்.

"அரசாங்கத்துடன் நாம் எவ்வாறு தொடர்புகளை வைத்திருக்கிறோமோ, அது போலவே விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை வைத்திருக்கின்றோம். ஐந்து அல்லது ஆறு கிழமைகளுக்கு ஒரு முறையாயினும் கிளிநொச்சி சென்று நிலைமைகளை ஆராய்வது எங்கள் வழமை யான செயற்பாடு' என்றும் பேச்சாளர் நம்பேர்க் மேலும் தெரிவித்தார்.

ராஜதந்திர வட்டாரங்கள் பெரும் அதிர்ச்சி

நோர்வே நாட்டுத் தூதுவரின் வன்னி விஜ யத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால் வடக்கில் புலிகளுக்கு எதிராக அரசாங்கப் படைகள் தாக்குதல்களை உடனடியாக ஆரம்பிக்கலாம் என்ற சந்தேகம் ராஜதந்திர வட்டாரங்கள் உட்படப் பல தரப்புகளில் எழுந்துள்ளது.

வன்னிப் பிரதேசத்தின் மீது கடந்த சில நாள்களாக நடத்தப்பட்ட வான் தாக்குதல் கள் அந்த ஊகத்தை மேலும் வலுப்படுத்து கின்றன என்றும் அக்கறையுள்ள தரப்பு கள் கூறுகின்றன.

நோர்வேத் தூதுவரின் வன்னி விஜயத் துக்குத் தடை விதிக்கப்பட்டது ரத்துச் செய்யப்பட்டது தங்களுக்கு அதிர்ச்சி யைத் தந்துள்ளதாகவும், இது குறித்துத் தாங்கள் தத்தமது நாட்டு அரசுகளை உஷார்ப்படுத்திட உள்ளதாக வும் மேற் குலக ராஜதந்திரிகள் பலரும் ஏ.எவ்.பி செய்தி நிறுவனத்துக்கு கருத்துத் தெரிவித்தனர்.

இலங்கை அதிகாரிகளுடனான உறவு களை பாதிப்புறச் செய்வதற்கு விரும்ப வில்லை என்றும் அதனால் தாங்கள் இனங்காட்ட விரும்பவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அரசு அதிகாரிகள் வெறுமனே அச்சு றுத்தல்களை விடவில்லை. இப்போது உடனடியாக இல்லாவிடினும் விரைவில் வடக்கின் மீது அரசு படைகள் பாரிய தாக்குதலை மேற்கொள்ளலாம் என்று ராஜதந்திரிகள் மத்தியில் கருத்து ஒற்றுமை நிலவுவதை அறியமுடிகிறது.

"வடக்கில் இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டால் அதனை எதிர்த்து முறி யடிக்கத் எமது முழுப்பலத்தையும் காட்டு வோம்'' என்று கடந்த 20 வருட காலத்தில் 200இற்கும் மேற்பட்ட தற்கொலைத் தாக்கு தல்களை நடத்திய விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நோர்வேத் தூதுவரின் கிளிநொச்சி விஜயம் ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக ஞாயிறு இரவு தமக்கு தூதரக அதிகாரி களால் தெரியப்படுத்தப்பட்டதாக விடு தலைப் புலிகள் தரப்பில் கூறப்பட்டது.

உடதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.