Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யா விமானத்தில் திடீர் தீ – குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாப உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Moscow-plane-fire-At-least-41-killed-on-Aeroflot-jet.jpg

ரஷ்யா விமானத்தில் திடீர் தீ – குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாப உயிரிழப்பு!

ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற விமான தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து மேர்மான்ஸ்க் நோக்கி பயணித்த எரோபுளொற் ஜேட் (Aeroflot Flight SU1492) விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக திரும்ப தரையிறக்கப்பட்டது.

இதன்போது விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய வேளை திடீரென புகை மூட்டத்துடன் தீ வேகமாக பரவியது.

இதையடுத்து அவசரமாக விமான ஓடுதளத்தில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால வழியினூடான பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

எனினும் குறித்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 78 பேர் பயணம் செய்த நிலையில் அவர்களில் 41 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் தீ விபத்திலிருந்து தப்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Moscow-plane-fire-At-least-41-killed-on-Aeroflot-jet-2.jpg

Moscow-plane-fire-At-least-41-killed-on-Aeroflot-jet-3.jpg

http://athavannews.com/ரஷ்யாவில்-விமானத்தில்-தி/

  • கருத்துக்கள உறவுகள்

எரிந்த ரஷ்ய விமானம்: மின்னல் தாக்கியதால் நிகழ்ந்த விபத்தா?

மலரஞ்சலிபடத்தின் காப்புரிமை Getty Images Image caption விபத்துக்குள்ளாகி எரிந்த விமானம்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை அவசரமாகத் தரையிறங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அந்த விமானத்தில் இருந்த 78 பேரில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் மின்னல் தாக்கியதை அடுத்தே அவசரமாகத் தரையிறங்க முயன்று விபத்தில் சிக்கியதாக உயிர் தப்பிய விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் தற்போது தெரிவிக்கின்றனர்.

 

இந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் தாங்கள் தப்பியது எப்படி என்பதைப் பற்றி கூறும்போது மின்னல் தாக்கியதால் விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், விபத்துக்கான காரணத்தை ஆராயும் அதிகாரிகள் இன்னமும் மின்னல் தாக்கி விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுவது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

 
மலரஞ்சலிபடத்தின் காப்புரிமை Getty Images Image caption இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு மலரஞ்சலி.

நவீன விமானங்கள் மின்னல் தாக்குதல்களைத் தாங்கும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றன. மாஸ்கோவின் ஷெரமெட்யேவோ விமான நிலையத்தில் இருந்து வடக்கு ரஷ்ய நகரமான முர்மான்ஸ்க் நோக்கிப் புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் காரணங்களால் உடனடியாக விமான நிலையத்துக்குத் திரும்பி தரையிறங்கியதாக அந்த விமானத்தை இயக்கிய அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏரோஃபிளாட் அறிவித்தது.

விபத்துக்குள்ளான விமானம் சுகோய் சூப்பர்ஜெட்-100 வகையை சேர்ந்தது.

விமானத் தரவுகளையும், விமானி அறையான காக்பிட்டில் நடக்கும் உரையாடல்களையும் பதிவு செய்யும் கறுப்புப் பெட்டி மீட்டெடுக்கப்பட்டு விசாரணையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விமானம் பறக்கத் தொடங்கிய உடனே மின்னல் தாக்கியதாக உயிர் தப்பிய பயணியான பையோடர் யெகோரோவ் என்பவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

மின்னல் தாக்குவதால் விமானம் வீழுமா?

பல லட்சக்கணக்கான வணிக விமானங்கள் ஒவ்வோர் ஆண்டும் வானத்தில் பறக்கின்றன. இப்படி நடக்கும் விமானப் பயணங்களின்போது மின்னல் வருவது சகஜமானதாகும்.

பாரம்பரியமான விமானங்கள் அலுமினியம் கொண்டு கட்டப்படுகின்றன. இவை வழக்கமாக மின்னல் தாக்குதல்களை தாங்கி நிற்பவை. விமானத்தின் வெளிக்கூடு மின்னல் தாக்கும்போது பாயும் மின்சாரத்தை எல்லா இடத்துக்கும் பரப்பி, அதன் மூலம் விமானத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாக்கக்கூடியவை. இதனால், பயணத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

ஆனால், சில புதிய விமானங்கள் கார்பன் இழை போன்ற லேசான பொருள்களைக் கொண்டு கட்டப்படுகின்றன. இந்தப் பொருள்கள் அவ்வளவாக மின்சாரத்தை கடத்தாதவை. ஒயர் வலை அல்லது இழை கொண்டு இத்தகைய விமானங்களின் மேற்கூட்டைப் பாதுகாக்கவேண்டும்.

விமானம் பறக்கும்போது மின்னல்.படத்தின் காப்புரிமை Getty Images Image caption விமானம் பறக்கும்போது மின்னல்.

இது தவிர, விமானத்தின் எரிபொருள் டேங்க்கின் மின்னணு அமைப்புகள் மற்றும், இணைப்புகள் வெளியில் இருந்து மின் தாக்குதலுக்கு உள்ளாகாத வகையில் உறுதியான முறையில் வலுவாக பாதுகாக்கப்பட்டிருக்கும்.

சில நேரங்களில் மின்னல் தாக்குவதால் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை திசை திருப்ப அல்லது அவசரமாகத் தரையிறக்க வேண்டிய தேவை ஏற்படலாம். ஆனால், இதனால், விமானம் கீழே மோதி விபத்துக்குள்ளாவது மிக அரிது.

எப்படியானாலும், விமானத்தை மின்னல் தாக்கும்போது விமானத்துக்குள் இருப்பவர்களால் இதைப் பார்க்க முடியும். பெருத்த இடியோசையை அவர்கள் கேட்கமுடியும். அல்லது விமானத்தின் உட்புறம் திடீரென கண்ணைக் கூசவைக்கும் ஒளியால் நிரம்பும்.

இதற்கு முன்பு சுகோய் சூப்பர்ஜெட்-100 ரக விமானம் விபத்தில் சிக்கியது 2012ல் இந்தோனீசியாவில்தான். அப்போது விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். மனிதத் தவறினால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-48182806

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.