Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் அரசியல் போட்டி ; பேராபத்தை தடுத்த பேராயர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் அரசியல் போட்டி ; பேராபத்தை தடுத்த பேராயர்

 

- எம்.டி.லூசியஸ்

உலக கிறிஸ்த்தவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு என்பது சந்தோசம் நிறைந்த ஒரு பெருவிழா ஆகும். ஆனால் அன்று ஆலயங்களுக்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களால் கிறிஸ்த்தவர்களே கண்ணீரில் கரைந்து போனார்கள்.

cardinal.jpg

மனித குலம் செய்த பாவங்களுக்காக தன்னை பலியாக்கி சாவையே வெற்றி கொண்ட இறைமகன் யேசுவின் உயிர்த ஞாயிறான கடந்த 21 ஆம் திகதி, இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில்  250 ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். 450 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றார்கள். சுமார் 50 தொடக்கம் 60 வரையிலான உடல்கள் அடையாளம் காணமுடியாத அவலம்.

இந்த தாக்குதல்கள் இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள் கடப்பதற்குள் சம்பவத்துடன் தொடர்புடைய பலர் சிக்கினார்கள். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தமை வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த இடத்தில் இருந்து பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னெடுத்த ஒவ்வொரு நடவடிக்கைளும் இலங்கைக்கு வரவிருந்த பேராபத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினால் அதை யாராலும் மறுக்க இயலாது.

01.png

'கிறிஸ்தவ சமூகம் அமைதி காக்க வேண்டும். எவரும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது. ஒரு சிலர் செய்த தவறுக்காக முஸ்லிம் சமூகத்தை தவறான கண்ணோட்டத்தில் நோக்கி விடக்கூடாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் ஊடகங்கள் ஊடாக விடுத்த முதலாவது அறிவிப்பு இதுவாகும்.

இந்த இடத்திலேயே அவரின் மான்பு போற்றத்தக்கதாக இருந்தது. ஒருவேளை தன் சமூகத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அழிவை எண்ணி சற்று உணர்ச்சி பொங்க போராயர் மல்கம் ரஞ்சித் பேசியிருந்தால் கூட, இன்று இலங்கை இரத்தக் காடாக காட்சியளித்திருக்கும்.

03.png

அரசியல்வாதிகள் செய்ய வேண்டியதை பேராயர் முன்னின்று செய்தது, இன்றுவரை பல இனத்தவரும் அவரின் முன்மாதிரிகையான செயலை பேசுவதை எம்மால் காணக்கூடியதாக உள்ளது.

ஒரு குடும்பத்தில் இருவர் மூவர் என பலியான ஒருவரின் மனிநிலை எவ்வாறு இருக்கும் என சாதாரண ஒரு மனிதனால் அறிந்துகொள்ள முடியும். இந்த இடத்தில் நாட்டு மக்களுக்கு உடனடியாக பேராயர் மல்கம் ரஞ்சித்த ஆண்டகை ஆற்றிய உரை பாதிக்கப்பட்ட  மக்களின் கோப உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதி காக்க வைத்தது.

நாட்டின் தலைவர் ஜனாதிபதி கூட சம்பவம் இடம்பெற்ற வேளை வெளிநாட்டில் இருந்தார். சம்பவ தினத்தன்று கூட ஜனாதிபதியால் நாட்டுக்கு உடனடியாக வந்திருக்கலாம். ஆனால் மறுநாளே நாட்டை வந்தடைந்தார்.

05.png

இதன்போதும் நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக நடவடிக்கைகளை ஜனாதிபதியோ, அல்லது பிரதமரோ முன்னெடுக்கவில்லை. மாறாக ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தும் படலத்தையே செய்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படப் போகின்றது என 3 மாதங்களுக்கு முன்பதாகவும் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இருந்து 10 நாட்களுக்கும் முன்பதாகவும் ஏன்..! சம்பவத்துக்கு முன்னதாக 2 மணித்தியாலங்களுக்கு முன்பதாக கூட புலனாய்வு பிரிவினரால் உரிய தரப்புக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த புலனாய்வு தகவலின் தீவிரத்தை அரசியல் வாதிகள் அறிந்திருக்கவில்லை என கூறினால் சின்ன குழந்தை கூட கைதட்டி சிரிக்கும்.

இவர்களின் அசட்டை தனத்தால் பறிபோனது என்னமோ அப்பாவி உயிர்கள். அரசியல்வாதிகளின் தவறை தண்டிக்க முடியாதவர்களாக பாதிக்கப்பட்ட மக்கள் அழுது புலம்பி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றார்கள்.

இதேவளை இந்த கோரச் சம்பவத்தை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிக்கும் கேவலமான நபர்களும் எம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவ்வாறான நபர்களுக்கு யார் இறந்தாலோ அல்லது அல்லல்பட்டால் கூட கவலையில்லை. இவர்களின் அரசியல் இலக்கை அடைய எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

இது ஒருபுறமிருக்க நாட்டில் காணப்படும் அசாதாரண நிலைமையை சாகஜமாக்கி கொண்டு இனங்களுக்கு இடையில் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் குளிர்காய முனையும் சாணக்கியர்களும் சந்தர்பங்களை தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

06.png

இவற்றுக்கு அப்பால் சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும். இனங்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு கலவரம் இடம்பெற்று விடக்ககூடாது என ஒரு தனி மனிதன் பேராட்டமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்கள் முன்பாக ஒவ்வொரு முறை உரையாற்றும் போதும், முஸ்லிம் அப்பாவி மக்களை யாரும் தண்டித்து விடக்கூடாது என்பதை உறுதிப்பட கூறி வந்தார்.

'மேலும் ஆலயங்களுக்குள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட இளைஞர்களுக்கு கூட ஏன் இதனை செய்கின்றோம் என அறிந்திருக்கமாட்டார்கள். அவர்களை யாரோ மூளைச் சலவை செய்திருக்க வேண்டும். எனவே இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என கூறியிந்தார்.

ஆயரின் இவ்வாறான கருத்துகளுக்கு அகில இலங்கை  ஜம்­மி­யத்துல் உல­மாவின் தலைவர் ரிஸ்வி முப்தி கண்ணீர்மல்க  நன்றிகளை தெரிவித்திருந்ததை கூட ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.

இவ்வாறான பின்னணியில் கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் பதிவான சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நீர்­கொ­ழும்பு  கொச்­சிக்­கடை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட போரு­தொட்ட, பல­கத்­துறை பிர­தே­சத்தில் முச்­சக்­கர வண்டி சங்­கங்­களைச் சேர்ந்த  இரண்டு குழுக்­க­ளி­டையே கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற கைக­லப்பை அடுத்து அப்­ப­கு­தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரி­யூட்­டப்­பட்­ட­து.

பின்னர் பள்­ளி­வாசல் உட்­பட 10 இற்கும் மேற்­பட்ட வீடுகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­துடன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்­சக்­க­ர­வண்­டி­களும் அடித்து நாசமாக்கப்பட்டன.

வீடு­க­ளுக்குள் புகுந்த குழு­வினர் வீட்டில் உள்ள பொருட்­களை அடித்து சேதப்­ப­டுத்­தி­ய­துடன் சில வீடு­களில் நகைகள் பணம் மற்றும் பொருட்­களை கொள்­ளை­யிட்டு சென்­றுள்­ள­தா­கவும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் முறை­யி­டு­கின்­றனர்.

இந்த நிலையில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் இரா­ணு­வத்­தினர் சம்­பவ இடத்­திற்கு வர­வ­ழைக்­கப்­பட்­ட­துடன் நிலைமை ஓர­ள­வுக்கு கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து நீர்­கொ­ழும்பு பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட பகு­தியில் ஊர­டங்­குச்­சட்டம் அமுல்ப்­ப­டுத்­தப்­பட்­டது. ஊர­டங்­குச்­சட்டம் அமுல்ப்­ப­டுத்­தப்­பட்­ட­போதும் குழு­வொன்று முஸ்­லிம்­களின் வீடுகள் மற்றும் வாக­னங்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளது.

வாள்கள், பொல்­லு­க­ளுடன் வருகை தந்த இக்­கு­ழு­வினர் தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளனர். ஊர­டங்­குச்­சட்டம் அமுல்ப்­ப­டுத்­தப்­பட்­ட­மை­யினால் பிர­தான வீதிக்கு செல்­லாமல் உள்­வீ­தி­களால் பிர­வே­சித்த குழு­வி­னரே இத்­த­கைய தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர்.

 இந்த அசம்­பா­வி­தங்­க­ளின்­போது வீடுகள் பல தாக்­கப்­பட்­டன. வீடு­களில் உள்ள பொருட்கள் சேத­மாக்­க­பட்­ட­துடன் சில வீடு­களில் நகைகள், பணம் மற்றும் பொருட்கள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.  இந்த சம்­ப­வத்­தின்­போது வாக­னங்கள் பல தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ள­துடன் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் சிலர் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

 ஊர­டங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட வேளையில்  இனந்­தெ­ரி­யாத குழுக்கள் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­களும் தெரி­விக்­கின்­றனர்.

 சம்­ப­வத்தை அடுத்து முஸ்லிம் மக்கள் பெரும் அச்­சத்­துடன் இருந்­தனர். சிலர்  தமது உற­வி­னர்­க­ளு­டைய வீடு­க­ளுக்கு பாது­காப்பு தேடிச் சென்­றனர்.

சம்­பவம் தொடர்­பாக முப்­ப­டை­யினர் மற்றும் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்­டதை அடுத்து பிர­தே­சத்தில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆயினும் ஊர­டங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட வேளை­யிலும் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்டு தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கர்­தினால் நேரில் விஜயம்

இதே­வேளை, பேராயர்  கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை,  பல­கத்­துறை ஜும்மா பள்­ளி­வாசல்,  தெனி­ய­வத்த பள்­ளி­வாசல், பெரி­ய­முல்லை பெரிய பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்கு  விஜயம் செய்­திருந்தார். இதன்போது பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் சிலர் ஆயரை கட்டித் தழுவிய போது அவர் மீது கொண்டிருந்த மரியாதை காணக் கூடியதாக இருந்தது.

பேராயர் மல்கம் ரஞ்சித் அங்கு உரை­யாற்­றும்­போது ,

நான் இங்கு ஒரு முக்­கிய விட­யத்தை கூற வேண்டும். அதா­வது நாங்கள் ஒரு­போதும் இஸ்லாம் மதத்­தி­ன­ருக்கு எதி­ரா­ன­வர்கள் அல்லர். . இஸ்லாம் மதத்தை நாம் புரிந்து கொள்­கிறோம். நாங்கள் அதனை கற்று ஆராய்ந்­தி­ருக்­கின்றோம். அது யுத்­தத்­திற்­கா­னது அல்ல. 

நீங்கள் அடுத்த 30 தினங்­க­ளுக்கு ரமழான் நோன்பை கடைப்­பி­டிக்க போகின்­றீர்கள் . நாம் இந்த புனி­த­மான இஸ்லாம் மதத்தை பாது­காக்க வேண்டும். நாம் உங்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல என்­பதை கூறி­விட்டு செல்­லவே இங்கு வந்தேன். நான் இதனை ஆரம்­பத்­தி­லி­ருந்து கூறி­வ­ரு­கின்றேன்.

அன்று கொச்­சிக்­கடை மட்­டக்­க­ளப்பு மற்றும் கட்­டு­வப்­பிட்­டிய போன்ற தேவா­ல­யங்­களில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்கள் முஸ்லிம் மக்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­ட­வை­யல்ல. அதனை நான் தெளி­வாக குறிப்­பி­டுன்றேன். இது தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்ட இளைஞர் குழு­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட செய­லாகும். அதற்கு முஸ்லிம் மக்­களை பலி­யாக்­கி­விடக் கூடாது.

எனவே நாம் ஒரு­நாளும் உங்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட மாட்டோம். தயவு செய்து முஸ்லிம் மக்­க­ளுக்­கு எதி­ராக கையைத் தூக்க வேண்டாம் என கத்­தோ­லிக்க மக்­க­ளிடம் இந்த பள்­ளி­வா­சலில் இருந்­த­வாறு நான் கோரிக்கை விடுக்­கின்றேன். அவ்­வாறு எந்த செயற்­பாட்­டையும் முன்­னெ­டுப்­ப­தற்கு எந்த உரி­மையும் கிடை­யாது. அவ்­வாறு செய்தால் அது கத்­தோ­லிக்க மதத்­துக்கு எதி­ரா­ன­தாகும். நாம் இரண்டு தரப்­பி­னரும் சகோ­த­ரர்கள். நாம் அனை­வரும் ஆதாமின் பிள்­ளைகள். எனவே நாம் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும்.

நாம் அனை­வரும் ஒரு கட­வு­ளையே வணங்­கு­கின்றோம். எனவே நாம் ஒரு­வ­ரை­யொ­ருவர் எதிர்த்து செயற்­படக் கூடாது. இலங்­கையில் முஸ்லிம் கிறிஸ்­தவ மக்கள் ஒன்­றி­ணைந்து வாழ வேண்டும். பல தசாப்­தங்கள் மக்கள் அவ்­வாறே வாழ்ந்­துள்­ளனர். நீர்­கொ­ழும்­பிலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்­த­வர்கள் ஒன்­றா­கவே வர­லாற்றில் வாழ்ந்­துள்­ளனர். அந்த நிலைமை மீண்டும் ஏற்­ப­ட­வேண்டும். எனவே கிறிஸ்­தவ சகோ­த­ரர்கள் முஸ்லிம் சகோ­த­ரர்­க­ளுக்கு தொல்லை கொடுக்க கூடாது.

நடை­பெற்ற அசம்­பா­வி­தத்­துக்கு முஸ்­லிம்கள் பொறுப்­பாக முடி­யாது. அதனால் அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கு இடை­யூ­றாக இருக்க கூடாது. அமை­தி­யா­கவும் சமா­தா­ன­மா­கவும் அனை­வரும் வாழ வேண்டும்.

இந்தப் பகு­தியில் ஒரு முஸ்லிம் பள்­ளி­வா­சலில் கண்­ணா­டிகள் உடைக்­கப்­பட்­டுள்­ளன. அவ்­வா­றான செயற்­பா­டு­களை நாம் ஒரு­போதும் செய்ய கூடாது. கத்­தோ­லிக்­கர்கள் அவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது நல்­ல­தல்ல. அப்­படி செய்தால் நாம் எமது சம­யத்­திற்கு எதி­ராக செயற்­ப­டு­வதை போன்­ற­தாகும். முஸ்லிம் மக்­க­ளுக்கும் நாம் மதிப்­ப­ளிக்க வேண்டும்.

அவர்­க­ளு­ட­னான சகோ­த­ரத்­து­வத்தை நாம் பாது­காக்க வேண்டும். இந்த கோரிக்­கையை விடுப்­ப­தற்கே நான் இந்த பள்­ளி­வா­ச­லுக்கு வருகைத் தந்தேன். தயவு செய்து முஸ்லிம் மக்­களும் கிறிஸ்­தவ மக்­களும் சகோ­த­ரத்­து­ட­வத்­துடன் வாழ வேண்டும். குறை­பா­டுகள் இருக்­கலாம். மனி­தர்கள் மத்­தியில் குறை­பா­டுகள் ஏற்­ப­டலாம். அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் பொறுமை காத்து சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ வேண்டும். உங்களது முப்பாட்டன்மார் வாழ்ந்ததை போன்று நீங்களும் வாழ வேண்டும். யாருக்கு எதிராகவும் கைகளை தூக்கிவிட வேண்டாம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொறுமையாக செயற்பட வேண்டும்.

நடந்த சம்பவங்களுக்காக எனது கவலையை தெரிவித்துக் கொள்கின்றேன். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடந்துவிடக் கூடாது. உங்கள் அனைவருக்கும் அமைதி சமாதானம் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என்றார்.

இந்த உரையின் மூலம் அனைத்து இன சமூகத்தின் மதிப்பையும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பெற்றுள்ளார்.

குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் பதிவாகியிருந்த சம்பவம் பாரிய போராபத்தை ஏற்படுத்தியிருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

 பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் செயற்பாட்டால் இவ்வாறான பேராபத்துக்கள் நாட்டில் தவிர்க்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடுகளை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

இதுவே சமூகத்தில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் பதிவாகமல் இருப்பதற்கு அரசியல் தலைவர்கள் முன்னதாக நடவடிக்கை எடுத்திருந்தால் போற்றத்தக்கது. ஆனால் சம்பவங்கள் பதிவான பின்னர் நஸ்ட ஈடுகளை வழங்க முன்னிற்பது காலத்தின் தேவை கிடையாது.

 

http://www.virakesari.lk/article/55685

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.