Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் வலையில் படைகளா..??

Featured Replies

புலிகள் வலையில் படைகளா..??

படைகள் வலையில் புலிகளா...??

விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கட்டு நாயக்கா விமான தள தாக்குதலின் பின்

அமைதியாகவிருந்த இலங்கை இராணுவ களம் மீண்டும் களைகட்ட ஆரம்பித்துள்ளது.

அண்மையில் நடந்த இராணுவ கட்டமைப்பில் ஏற்ப்படுத்தப் பட்ட

மாற்றத்தின் பின் தற்போது இலங்கையில் மீண்டும் ஒரு போர் பீதி ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரசுகளாலும் அந்த மக்களாலும் மிகவும் நேசிக்கப்படுபவரும்

தமிழின அழிப்பின் கத நாயகனுமானவரும் மணலாற்றில்

பல நூறு போராளிகளை காவு எடுத்தவருமான ஜெனகே பெராராவே

இந்த மாற்றத்திற்காண அடிப்படை கரணமாக அமைகிறார்.

அண்மையில் பல படை தளங்களிற்கு சென்று அந்த கள நிலமைகளை அவதானித்து

பல உத்தரவுகளையும் போரியல் தந்திரங்களையும் தெரிவித்து சென்றிருக்கிறார்.

இவ்வாணையை அண்மையில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பெரும் பாண்மை இனத்தவர்கள்

போரையே விரும்புவதாக பகிரங்கமாக தெரிவித்திருந்தமை மகிந்தாவிற்கு ஒரு ஊந்துதலையும்

மறு கட்டத்தில் ஒரு போரை தொடுப்பதற்காண காலவாகாசத்தையும் கொடுத்துள்ளது.

அதற்கமைவாக வட முனையில் தனது தாக்குதலை பாரியளவில் தொடுப்பதற்காக

பல்லாயிரம் படைகள் முன்னரங்க நிலைகளில் குவிக்குபட்டிருக்கிறார்கள்.

இதில் சில புதிய படைணிகளும் உள்ளடங்குகின்றன.

இதை முன் கூட்டியே தமது உளவு தகவல் ஊடாக அறிந்த புலியணிகளும் தமது

படையணிகளையும் ஒழுங்கு படுத்தி காத்திருக்கிறார்கள்.

படையின் தம் மீது வலிந்து தாக்குதலை தொடுத்தாள் தாம் அதற்காண

பதிலடியை கொடுப்போமென புலிகளின் தளபதிகள் அறிவித்துள்ளனர்.

இந்த கள முணை பல அழிவுகளை படையினருக்கு கொடுக்குமென புலப்படுகிறது

பாரிய படைகளை ஒரு திசையில் குவித்து வைத்திருக்கும் படை நிலைகள் மீது

ஏக காலத்தில் புலிகளின் பீரங்கி அணிகள் தாக்குதலை தொடுத்தாள் படைகள்

பேரழிவை சந்திக்கும்.

அவ்வாறான ஒரு தாக்குதலை தொடுத்தாள் மீண்டும் இராணுவ சம நிலையில் புலிகளின் கை

ஓங்கி விடும் அவ்வாறு நடந்தால் அது அரச படைகளிற்கு அது பாரிய சவலாகவும்

அவ மானத்தையும் தோற்றுவிக்கும்

அவ்வாறு ஒரு தாக்குதல் புலிகளால் தொடுக்கப் பட்டால் பின்னடை கண்ட

தமது படைய இழப்புக்களை தோல்விகளை மறைக்க அல்லது தமது பலத்தை

நிலை நாட்ட மீண்டுமொரு பொருது களத்தை திறக்க வேண்டும்.

அது எங்கே எந்த முனை என்பது தெரிவு செய்தே படையினர் இந்த போருக்கு திட்டமிட்டுள்ளதாக

அறிய முடிகிறது. அவையாவன மட்டகளப்பு. மணலாறு. மன்னர். இங்கே ஒரு உடைப்பை எடுத்து

அந்த சமநிலையை மேம்படுத்த படைகள் முனையும். ஆனால் இது எந்தளவிற்கு வெற்றியை

தீர்மாணிக்கும் என்பது புதிராத புதிராகவே உள்ளது.

உலக நாடுகளின் அழுத்தத்தில் சிக்கியிருக்கும் அரசு ஒரு அவசர நாடகத்தை அரங்கேற்ற

முனைந்து தொற்று போனது. அனுசரணையர்களை அழைத்து தாம் பேச்சுக்கு தயாரெனவும் புலிகளே

வர மறுக்கிறார்களெனவும் பறைசாற்ற எடுத்த முயற்சி படு தோல்வியில் முடிந்துள்ளது.

படையினரின் படை குவிப்பை அறிந்த புலிகள்

உடனடியாக விரந்து அனுசரனையாளர்களுக்கு தெரிவித்ததையடுத்து

தற்போது பின் போடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இங்கே அரசின் இரட்டை வேட முக மூடி கிழிந்து போனது.

சிங்கள மக்களின் நம்பிக்கை நட்சத்திரமானவரும் பலகால அனுபவத்தை பெற்றவருமான

ஜெனகேபெராவை களமிறக்கி இழந்த ஆணையிறவை மீட்க்க படையின் முற்படுகிறார்கள் .

ஆனால் அதற்கு புலிகளின் தாக்குதல் எவ்வாறு இருக்கும்...???

அவ்வாறன ஒரு நில ஆக்கிரமிப்புக்கு புலிகள் சேனை விடுமா...???

இதுவரை புலிகள் காத்த அமைதியும் சமரச உடன் பாடும் இந்த படை நகர்வினால் கழிந்து

இலங்கை தேசம் முளு அளவிலான யுத்தகளமாக மாறுமா...???

இலங்கை தேசமே இரத்தித்தில் உறையுமா...??

இல்லை வரலாறு காணத பல அதிர்வுகளை இலங்கை படைகளும்

அதன் நிலகளும் உணருமா..?? என்பது அடுத்து வரும் கள நிலவரங்கள் தெளிவு படுத்தும்.

கிளாலியிலிருந்து புநகரி நோக்கியும். முகமாலையிலிருந்து பளையை நோக்கியும் பெருமெடுப்பிலாக

பாரிய படை நகர்வை நடத்தவே படைகள் முனைந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன்.

எழுது மட்டுவாள். உசன். சாவகச்சேரி. தனங்கிளப்பு பகுதியல் பின்தள

பீரங்கி நிலைகள் புதிதாக அமைத்து வருவதாகவும் இரவு பகலாக பாரிய படைகள நகாத்தல்கள் தொடந்து

நகர்ந்து வருவதாகவும் புதிய படையணிகள் நிலை கொண்டுள்ளனர்.

அதற்கேற்றவாறு புலிகளின் படையணிகளும் தயர் நிலையில் உள்ளனர்

இந்த கள நிலை படைகளிற்கு பாரிய அழிவை கொடுக்குமொரு கலமாக அமையும் என புலிகளின்

மேல் நிலை தளபதிகள் கூறியுள்ளனர்.

ஜெனகேபெராராவிற்கு புலிகள் கொடுக்க போகும் பரிசு என்னவாக இருக்கும் என்பதும்

இந்த போரியல் களம் எடுத்துரைக்கும். தற்போது புலிகள் விரித்த வலையில் படைகளா..?? இல்லை

படைகள் விரித்த வலையில் புலிகளா...??

vanni mainthan -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.