Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணா குழுவினர் கொலை அச்சுறுத்தல்- அரசாங்கம் அலட்சியம்: மாவை சேனாதிராசா குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணா குழுவினர் கொலை அச்சுறுத்தல்- அரசாங்கம் அலட்சியம்: மாவை சேனாதிராசா குற்றச்சாட்டு

சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் கருணா குழுவினர் கொலை அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில் அரசாங்கம் அலட்சியமாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (22.04.07) வெளிவந்த கொழும்பு ஆங்கில வார ஏடான நேசனுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றுள்ளோம்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கோரி சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகருக்குக் கடிதமும் அனுப்பியுள்ளோம். இருப்பினும் இந்த விடயத்தை சிறிலங்கா அரசாங்கமானது பாரதூரமானதாகக் கருதவில்லை. மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்ட எமது வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. நாங்கள் என்ன செய்ய முடியும்? இந்த விடயத்தை அனைத்துலக சமூகத்தின் முன்வைக்க நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

சிறிலங்காவின் ஆளும் கூட்டணி அரசாங்கத்தின் உதவியைக் கோரும் எமது முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் பின்னணியில் சிறிலங்கா அரசாங்கம் இருப்பதனை நாம் அறிவோம். நாம் பலமுறை கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கின்றோம். எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று கருணா குழுவினர் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். இந்தக் குழு அரசாங்கத்தின் ஆதரவால் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்துலக மன்னிப்புச் சபையும் கூட சிறிலங்கா அரசாங்கத்துடன் கருணா குழு இயங்கி வருவதை அம்பலப்படுத்தியுள்ளது. ஆகையால் எங்களுக்கு விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தல்களுக்கு சிறிலங்கா அரசாங்கம்தான் பொறுப்பு.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கூடுதல் அளிப்பதாக சிறிலங்கா சபாநாயகர் தெரிவித்தபோதும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாதவரை அவர்கள் கொழும்பில்தான் இருப்பார்கள். கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு இடம்பெயர்ந்தோர் முகாமிலும் கருணா குழுவினர் ஊடுருவியுள்ளனர். அந்த முகாம்களுக்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றால் அவர்கள் கொல்லப்படுவார்கள். கௌசல்யன் மற்றும் சந்திரநேரு படுகொலை செய்யப்பட்ட போதும்கூட நாங்கள் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்டோம். ஆனால் இப்போது மிக முக்கியமான காலகட்டத்தில் எமது மக்களைச் சந்திக்க வேண்டிய நிலைமையில் எங்களால் அப்பகுதிகளுக்குச் செல்ல இயலவில்லை.

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளானது மிகவும் அபாயகரமானதாக உள்ளது. தற்போதைய ஆட்சியில் தமிழ் மக்கள் முற்றாக அச்சத்துடன் உள்ளனர். ஒட்டுமொத்த சிறிலங்காவும் கருத்துச் சுதந்திரத்தை இழந்துவிட்டது. தமிழ் மக்கள் அமைதியாக வாழ முடியாத நிலை உள்ளது. நீதிக்குப் புறம்பான படுகொலைகள், படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் கடந்த 1988-89 ஆம் ஆண்டு காலப்பகுதியை விட அதிகமாகத்தான் தற்போது உள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன. கப்பம் அறவிடுதல் மிகவும் மோசமாக நடைபெறுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தங்களது சுதந்திரத்தை இழந்துவிட்டனர். கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பரில் எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், தேவாலயத்தில் வைத்து மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் 2006 நவம்பர் 10 ஆம் நாள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்த பின்னர் சில மணிநேரங்களில் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார்.

தற்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது இராணுவ நடவடிக்கையையே முன்வைத்துச் செயற்படுகிறது. அதனடிப்படையிலே அரசாங்கத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகளும் உள்ளன. இந்த உண்மையை அனைத்துலக சமூகமும் உணர்ந்துகொள்ளும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளை இலக்கு வைத்துத் தாக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் உண்மையில் பொதுமக்களையே சிறிலங்கா அரசாங்கம் தாக்குகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தினால் வீசப்படுகின்ற ஒவ்வொரு எறிகணையும் அப்பாவி பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தான் தாக்குகின்றது.

தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்ச் சமூகத்தினரை அழிக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாட்டை நாம் அறிவோம். எமது மக்கள் உள்நாட்டில் அகதிகளாக இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு இலட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இந்த ஆண்டோ மட்டக்களப்பில் மட்டுமே 1,53.000 பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

இனப்பிரச்சனைக்குத் தீர்வாக தென்னிலங்கை கருத்தொற்றுமை, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் ஆகியவை தொடர்பில் நாம் திருப்தியடையவில்லை.

இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான உண்மையான எதுவிதத் தலைமையும் இல்லை. தொடக்கத்திலிருந்தே ஒற்றையாட்சி அமைப்பு முறையில்தான் தீர்வு காண்போம் என்று தன்னை அனைத்துலக சமூகத்தின் முன்பாக மகிந்த அடையாளப்படுத்தியுள்ளார். துட்டகைமுனுவுக்குப் பின்னர் தான் மட்டுமே உண்மையான சிங்கள பௌத்த தலைவராகவும் தென்னிலங்கையின் உண்மையான குடிமகன் என்றும் அடையாளப்படுத்துகின்றார்.

ஒரு நாட்டின் அரச தலைவர் என்பவர் ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களுக்கான அரச தலைவராக இருக்க வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அப்பாவி பொதுமக்கள் மீது குண்டு வீசப்படும்போது இராணுவச் செயற்திட்டத்தையே நாம் பார்க்கின்றோம்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் மீறுவதாக அனைத்துலக சமூகமும் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் இது தொடர்பில் அரசாங்கம் எதுவித கரிசனையையும் வெளிப்படுத்தவில்லை.

வெளிப்படையாக இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண திட்டம் வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு நடைமுறையில் இராணுவச் செயற்திட்டத்தை செயற்படுத்துகின்றார் மகிந்த ராஜபக்ச.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்துக்கு வடக்கு - கிழக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுக்கப்பட்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.