Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிவகுக்க திட்டமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிவகுக்க திட்டமா?

மற்­று­மொரு கறுப்பு ஜூலை நாட்டில் உரு­வா­கி­யுள்­ளதா என்று பீதி கொள்ளும் அள­வுக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (13.05.2019) குரு­நாகல், கம்­பஹா மற்றும் புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களில் வாழும் முஸ்லிம் குடி­மக்­க­ளுக்­கெ­தி­ராக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட கொடூர வன்­முறைச் சம்­ப­வங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

அப்­பாவி பொது­மக்கள் ஒருவர் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள், பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன, தீ வைக்­கப்­பட்­டுள்­ளன, வர்த்­தக நிலை­யங்கள் நாச­மாக்­கப்­பட்­டுள்­ளன, கொடு­மை­யா­ளி­களின் தாக்­கு­தல்­க­ளுக்கு அஞ்சி வீடு வாசல்­களை விட்­டோடி வயல்­வெ­ளி­களில் அப்­பாவி கிராம மக்கள் அடைக்­கலம் கோரி­யுள்­ளனர்.

படைத்­த­ரப்­பி­னரின் பாது­காப்பு வல­யத்­துக்கு முன்னால் பள்­ளி­வா­சல்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. மோட்டார் வண்­டி­களில் வந்த காடையர் கும்பல் கடை­களை எரித்து பரி­நாசம் செய்­துள்­ளது. வீடு வாசல்கள் மீது காட்­டுத்­தர்பார் நடத்­தி­யுள்­ளது. இத்­த­னையும் அவ­ச­ர­கா­லச்­சட்டம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு நாடு­பூ­ரா­கவும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் பேரால் சுற்­றி­வ­ளைப்­புக்­களும் தேடுதல் வேட்­டை­களும் கைது­களும் ஆயுதப் பொருட்கள் சட்­ட­மு­றை­யற்ற  ஆயுத இருப்­புக்கள், வெடி­பொ­ருட்கள்,  சீரு­டைகள் என பிடி­பட்டுக் கொண்­டி­ருக்கும் நெருப்பு மய­மான பாது­காப்பு சூழ்­நி­லையில் நிக்­க­வ­ரெட்­டி­ய­விலும், குளி­யாப்­பிட்­டி­ய­விலும், மினு­வாங்­கொ­ட­விலும், நாத்­தாண்­டி­ய­விலும், குரு­நா­க­லிலும் மேற்­போந்த சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக செய்­திகள் பதி­வா­கி­யுள்­ளன. 

மீண்டும் அவசரகாலச் சட்டம்

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு, நீர்­கொ­ழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய பிர­தே­சங்­களை குறி­வைத்து தேவா­ல­யங்கள், நட்­சத்­திர ஹோட்டல் ஆகி­ய­வற்றின் மீது பயங்­க­ர­வா­தி­களால் நடத்­தப்­பட்ட தீவி­ர­வாத தாக்­குதல் கார­ண­மாக நாடு கதி­கெட்டு, நிலை குலைந்து போயி­ருந்த நிலையில் நாட்டை பாது­காக்க அர­சாங்கம் தீவி­ர­மான பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளிலும் முன்­னெச்­ச­ரிக்கை வலைப்­ பின்­னல்­களை மேற்­கொண்­ட­தனால் ஏற்­ப­ட­வி­ருந்த கொடும் அனர்த்­தத்தை, அபா­யத்தை தடுக்க முடிந்­தது.

தேசிய பாது­காப்பு, நலன், அமைதி கருதி ஓய்வு பெற்­றி­ருந்த அவ­ச­ர­கால சட்­டத்­துக்கு மீண்டும் வேலை வழங்­கப்­பட்­டது. மக்கள் பெரு­மூச்சு விட முடிந்­தது. ஆனால் அடக்­கப்­பட்­டு­விட்­டது, அழிக்­கப்­பட்­டு­விட்­டது என்று அர­சாங்கம் பெரு­மைப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த விடயம் இன்­னொரு முனையால் இன­வன்­மு­றை­யாக வெடித்து சிதறி நாட்டை சின்னா பின்­னப்­ப­டுத்தும் அள­வுக்கு நிைல­மைகள் மோச­மா­கி­யி­ருப்­பதை மூன்று மாவட்­டங்­களில் நடை­பெற்ற இன­வன்­முறைச் சம்­ப­வங்கள் படம்­பி­டித்துக் காட்­டு­கின்­றன. 

இரண்டாம் கட்ட இன­வன்­மு­றை­யொன்­றுக்கு தூப­மிட்ட சம்­ப­வ­மாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (12.05.2019) சிலா­பத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் மாறி­யி­ருக்­கி­றது. முகப்­புத்­த­கத்தில் இடப்­பட்ட பதி­வொன்­றினை தவ­றாக அர்த்­தப்­ப­டுத்தி இரு தனி நபர்­க­ளுக்­கி­டையே ஏற்­பட்ட வாக்கு வாதம் சிலா­பம் பிரதேசத்தில் பதற்ற நிலையை கொண்­டு­வந்­த­துடன் ஊர­டங்கு சட்­டத்தை பிறப்­பிக்கும் நிலையை உரு­வாக்கி விட்­டி­ருந்­தது. இதன் தொடர்ச்­சி­யான இனக்­கொ­டூர தாக்­குதல் சம்­ப­வங்­க­ளா­கவே குளி­யாப்­பிட்டி, நிக்­க­வ­ரெட்­டிய, நாத்­தாண்­டிய போன்ற 30 இற்கு மேற்­பட்ட முஸ்லிம் கிரா­மங்கள் தாக்­கப்­பட்டு மக்கள் நிர்க்­கதி ஆக்­கப்­பட்ட நிலை உரு­வா­கி­யது. 

வடமேல் மாகா­ணத்­துக்கு உட்­பட்ட பல்­வேறு முஸ்லிம் கிரா­மங்கள் மீது வன்­முறைக் கும்­பல்கள் மேற்­கொண்ட தாக்­கு­தல்­களில் சுமார் 15 பள்ளி வாசல்கள் தாக்­கப்­பட்­ட­துடன் 27 வர்த்­தக நிலை­யங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. 12 கடைகள் தீக்­கிரையாக்கப்பட்டன. இதே போன்றே ஹெட்­டி­பொல, கொட்­டாம்­பிட்­டிய, பண்­டார கொஸ்­வத்த, மடிகே, அனுக்­கன, எஹட்­டு­முல்ல, தோர­கொட்­டுவ, கினி­யம, பூவல்ல அச­னா­கொட்­டுவ, கல்­ஹி­னியா கட்­டுவ ஆகிய கிரா­மங்கள் அதிக சேதத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ளன. 

இதே­வேளை கொட்­டா­ர­முல்ல பிர­தே­சத்தில் இன­வா­தி­களின் தாக்­கு­த­லுக்கு (திங்கள் இரவு 13.05.2019) உள்­ளாகி 45 வய­து­டைய நான்கு பிள்­ளை­களின் தந்­தை­யான முஹமட் சலீம் பௌஸல் அமீர் வாள்ெ­வட்­டுக்கு இரை­யா­கி­யுள்ளார். இது ஒரு புறம் இருக்க மினு­வாங்­கொடை நகரில் கொழும்பு வீதியில் உள்ள சுமார் 10, முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் என மூன்று மாவட்­டங்­க­ளி­லும் நூற்றுக்கணக்­கான முஸ்லிம் வீடுகள், பள்­ளி­வா­சல்கள் வர்த்­தக நிலை­யங்கள் குறி­வைத்து தாக்­கப்­பட்ட நிலையில் முஸ்லிம் சமூ­கத்­த­வர்கள் கதி­க­லங்கி காணப்­ப­டு­கி­றார்கள்.

மஹிந்தவின் அறிவிப்பு

இதே போன்­ற­தொரு  கோரத் தாண்­டவம் ஏனைய, மாகா­ணங்கள் மற்றும் மாவட்­டங்­க­ளி­லுள்ள முஸ்லிம் கிரா­மங்கள் மீதும், முஸ்லிம் குடி­யி­ருப்­புகள் மீதும், வர்த்­தக மற்றும் பள்­ளி­வா­சல்கள் மீதும் தொடர்ந்து நடத்­தப்­ப­ட­லா­மென்ற பயத்­தாலும் பீதி­யாலும் முஸ்லிம் மக்கள் நடுங்கி ஒடுங்கிப் போன நிலையே காணப்­ப­டு­கி­றது. 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மீண்­டு­மொரு 1983ஜுலை கல­வ­ரத்தை நாட்டில் உரு­வாக்­க­வேண்டாம். கறுப்பு ஜுலை­யொன்றின் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம் மக்­களை நிர்க்­க­திக்கு ஆளாக்க வேண்­டா­மென கோரி­யி­ருக்­கிறார். அவ­ரு­டைய வார்த்­தைகள் முஸ்லிம் குடி­மக்­க­ளுக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்­தை­க­ளாக இருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் அவ­ரு­டைய ஆட்­சிக்­கா­லத்தில் கிறிஸ் மனிதன் தொடக்கம் பள்­ளி­வாசல் பரி­நா­சங்கள் வரை இரை மீட்­டிப்­பார்க்க வேண்­டிய பல கோப்­புக்கள் இருக்­கின்­றன.

ஏதுமே ஆடு நனை­கின்­ற­தென்று ஓநாய் அழுத கதை­யாக இருக்கக் கூடாது. இந்த நாட்டில் பாரம்­ப­ரி­ய­மா­கவும் பூர்­வீ­க­மா­கவும் வாழ்ந்து வரும் ஒரு இனத்தைப் பார்த்து இந்த நாடு பௌத்த தேசம், சிங்­கள நாடு என ஏற்­றுக்­கொள்ள தயா­ரில்­லை­யாயின் அவ்­வா­றா­ன­வர்கள் நாட்­டை­விட்டு வெளி­யே­று­வதே சாலச்­சி­றந்­தது எனக் கூறும் அரசியல் வாதிகளும் தேரர்­களும் பயங்­க­ர­வா­தத்­துக்கு மூல­கர்த்­தாக்­க­ளாக விளங்­கி­ய­வர்­களை அடை­யா­ளங்­கண்டு அவர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கா­விட்டால் சிங்­கள மக்கள் கிளர்ந்­தெ­ழுந்து சட்­டத்தை கையில் எடுப்பர். இரத்த ஆறு பெருக்­கெ­டுத்து ஓடும் என இன­வாத சிகர உச்­சியில் நின்று கொண்டு குரல் கொடுப்­பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்­சு­கிற விட­ய­மாகும். 

குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும், பயங்­க­ர­வாதம் அழிக்­கப்­பட வேண்டும், இதற்கு மாற்று கருத்து இருக்க முடி­யாது.பொலி­ஸாரும் பாது­காப்பு படை­யி­னரும் அந்த கைங்­க­ரி­யத்தை, பணியை உச்ச அளவில் செய்து வரு­வ­த­னால்தான் ஏற்­படக் கூடிய எல்லா ஆபத்துக்களும் அனர்த்­தங்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. தடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வி­வ­கா­ரத்தில் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள், புத்தி ஜீவிகள், குடி­மக்கள் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு பலத்த ஆத­ரவை நல்கி வரு­கின்­றார்கள். இதனால் பல தட­யங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.  பகி­ரங்­க­மா­கவே குற்­ற­வா­ளி­களை காட்­டிக்­கொ­டுத்து நாட்டின் அமை­திக்­காக ஒத்­து­ழைப்பு வழங்­கு­கி­றார்கள். இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் அப்­பாவி முஸ்லிம் மக்கள் மீது அனர்த்த தீப்­பந்­தங்­களை கொழுத்தி எறி­வது மானிட தர்­மத்­துக்கு அப்­பாற்­பட்ட செய­லாகும்.

இந்த தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் 83 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை ஞாப­கப்­ப­டுத்­து­வது போன்ற ஒரு பிரமை உரு­வாகிக் கொள்­கி­றது. இலங்கை வர­லாற்றில் மிக மோச­மான துன்­பியல் பதி­வா­கவும் கொடூர சம்­ப­வ­மா­கவும் 83 ஜூலை கல­வரம் இன்­று­வரை பேசப்­ப­டு­கி­றது.

1983 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி திரு­நெல்­வேலி சந்­தியில் வைத்து இரா­ணுவ வாகனம் மீது விடு­தலைப் புலி இயக்­கத்­தினால் வைக்­கப்­பட்ட நிலக்­கண்ணி வெடியில் அகப்­பட்டு 13, இரா­ணுவ வீரர்கள் பலி­யா­கினர்.

குறித்த சம்­பவம் நடை­பெற்ற மறுநாள் பழி­வாங்கும் நட­வ­டிக்­கை­யாக யாழில், வீட்­டிலும், வீதி­யிலும், தெரு­விலும், திண்­ணை­யிலும் நின்ற 41 அப்­பாவி பொது­மக்கள் படைத்­த­ரப்­பினால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார்கள். ஜூலை 24 ஆம் திகதி இது இனக்­க­ல­வ­ர­மாக வெடித்­தது.

கொழும்பு பொரளைச் சந்­தியில் கருக்­கொண்ட இந்த இனக்­க­ல­வரம் ஆடிக்­க­ல­வ­ர­மாக உரு­வாகி தமிழ் மக்­களின் உயிர்கள், உட­மைகள் என்­ப­வற்றை பாரிய அளவில் அழித்­தொ­ழித்­தது. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த வெலிக்­கடை சிறைக் கைதிகள் 53 பேர் சிறைக்குள் வைத்து கொல்­லப்­பட்­டனர்.

நாடு தழு­விய இந்த இனக்­க­ல­வ­ரத்தால் ஆயிரக் கணக்­கான தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­டனர். வீடு வாசல்கள் எரி­யூட்­டப்­பட்­டன. சொத்­துக்கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன. வர்த்­தக நிலை­யங்கள் சூறை­யா­டப்­பட்­டன. அதை­விட மோச­மான கொடும் இன சங்­கா­ர­மாக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருக்கும் நிலை­யையே இன்­றைய சம்­ப­வங்கள் ஞாப­கப்­ப­டுத்­து­கின்­றன.

ஜனாதிபதியின் சீன விஜயம்

நாடு அல்­லோ­ல­கல்­லோ­லப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் சம­யத்தில் அதை பொருட்­ப­டுத்­தா­மலும் மறு­புறம் கண்டும் காணா­மலும் இடம்­பெறும் சம்­ப­வங்­களும் நிகழ்வும் இடம்­பெ­று­கின்­றன என்­ப­தற்கு உதா­ர­ண­மாக பல­வி­ட­யங்­களை பொது­மக்­களும் புத்தி ஜீவி­களும் சுட்­டிக்­காட்­டு­வது கவலை தரு­கின்ற விட­ய­மாக இருக்­கின்­றது. 

இலங்கை ஜனா­தி­ப­தியின் சீன விஜ­யமும் இலங்கை – சீனா பாது­காப்பு ஒப்­பந்தம், மூன்று இஸ்­லா­மிய அமைப்­புக்­களை தடை செய்து இலங்கை அரசு வெளி­யிட்­டி­ருக்கும் வர்த்­த­மானி அறி­வித்தல் அமைச்சர் ரிஷாத் பதி­யூ­தீ­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வரு­வ­தற்­கான முஸ்­தீ­புகள், மல்­வத்து பீட துணை மகா­நா­யக்கர் மற்றும் கோட்டை தேரரின் கடும் போக்கு வாதக் கண்­ட­னங்கள் என்­பன ஒரு­புறம் உள்­நாட்டு பதற்­றத்தை கூட்டி நிற்கும் நிலையில் புலிகள் இயக்­கத்தை இந்­தி­யாவில் மேலும் 5 ஆண்­டு­க­ளுக்கு தடை செய்யும் நீடிப்பு என்­ப­ன­வற்­றை­யெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்­கிற போது நாடு இன்றோ நாளையோ சுமுக நிலைக்கு திரும்பப் போவ­தில்­லை­யென்ற பயச்­சிந்­த­னை­யையே பற்றி எரிய வைக்­கப்­பார்க்­கி­றது.

ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற எதிர்­பா­ராத தாக்­குதல் சம்­ப­வத்தின் போது நாட்டின் தலை­வ­ரா­கிய ஜனா­தி­ப­தி­ய­வர்கள் நாட்டில் இருக்­க­வில்லை. சம்­பவம் இடம் பெற்ற செய்­தியை கேள்­விப்­பட்ட போதும் அவர் கரி­ச­னை­யோடு பறந்­தோடி வர­வில்­லை­யென்ற விமர்­ச­னங்­களும், விச­னங்­களும் பலரால் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அப்­ப­டி­யா­ன­தொரு நிலைதான் இப்­பொ­ழுதும் விமர்­ச­ன­மாக, பொது­மக்­க­ளாலும் சில தேசிய வாதி­க­ளாலும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

13 ஆம் திகதி (13.05.2019) நாட்டின் சில  இடங்­களில் பயங்­க­ர­வாதம் கட்­ட­விழ்த்­து­வி­டப்­ப­ட­லா­மென எச்­ச­ரிக்கை விடப்­பட்­டி­ருந்த போதிலும் அதனைப் பொருட்­ப­டுத்­தா­மலும் கவ­னத்தில் கொள்­ளா­மலும் ஜனா­தி­பதி சீன­நாட்டு விஜ­யத்தை மேற்­கொண்­டது தேசிய தலைவர் ஒரு­வ­ருக்­கு­ரிய பொறுப்­பாண்­மை­யாக இருக்­க­மு­டி­யாது என சிலரால் மறை­மு­க­மாக சுட்டிக் காட்­டப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி பயண­மான சில­மணி நேரத்­துக்­குள்­ளேயே மேற்­கு­றிப்­பிட்ட இடங்­களில் பாரிய அனர்த்­தங்­களும் அழி­வு­களும் இடம் பெற்­றுள்­ள­தாக சுட்டிக் காட்­டப்­ப­டு­கி­றது.

ஆனால் ஜனா­தி­ப­தியின் விஜயம் ஒரு பொறுப்பு வாய்ந்த தேசிய நலன் கரு­திய விஜ­ய­மா­கவே அமைந்­துள்­ளது. இந்த விஜ­யத்தின் போது தேசிய பாது­காப்பு மற்றும் அபி­வி­ருத்தி தொடர்­பான இரு முக்­கிய உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளன. இதன் பிர­காரம் சீன ஜனா­தி­பதி சீ ஜின்பிங் இலங்கை ஜனா­தி­ப­திக்கு ஒரு வாக்­கு­று­தியை நல்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இலங்­கை­யி­லி­ருந்து பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்க அனைத்து உத­வி­க­ளையும் வழங்­கு­வ­தற்கு சீனா தயார் என வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வாக்­கு­றுதி தொடர்பில் இரு விட­யங்கள் ஞாப­கத்­துக்கு கொண்டு வரப்­ப­டு­கி­றது. இது­வரை காலமும், சமூக, பொரு­ளா­தார, கலா­சார ரீதி­யான செல்­வாக்­கு­களை இலங்­கையில் செலுத்தி வந்த சீனா குறித்த பாது­காப்பு ஒப்­பந்­தத்தின் மூலம் இரா­ணு­வ­ரீ­தி­யான  ஆதிக்­கத்தை பெறும் வல்­ல­மை­யையும் அனு­ம­தி­யையும் பெற்­றுள்­ளது என்­ப­தாகும்.

ஏலவே புலிப் பயங்­க­ர­வா­த­மென்று மாயை உரு­வாக்கி இரா­ணு­வத்­த­ள­பா­டங்­க­ளையும் உத­வி­க­ளையும் பெற்று தமிழ் மக்­க­ளா­கிய சிறு­பான்­மை­யி­னரின் உரிமைப் போராட்­டத்தை அடக்கி ஒடுக்­கிய இலங்கை அர­சாங்கம், மறு­பு­ற­மாக, சீன பாது­காப்பு ஒப்­பந்­தத்தை செய்­வ­த­னூ­டாக இஸ்­லா­மியப் பயங்­க­ர­வா­தத்தை இல்­லாது ஒழிக்கும் ஒரு சர்­வ­தேச இரா­ணுவ ஒப்­பந்­தத்தை செய்­துள்­ளது என்­ற உண்மை புலப்­ப­டு­கி­றது.

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு ஜமாதே மில்­லத்தே இப்­ராஹிம் மற்றும் விலயாத் அஸ்­செய்லானி ஆகிய மூன்று அமைப்­புக்­களும் அர­சாங்­கத்தால் தடை செய்­யப்­பட்டு வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. பொது­மக்கள் பாது­காப்பு கட்­ட­ளைச்­சட்டம் மற்றும் அவ­ச­ர­கால ஒழுங்­கு­விதி என்­ப­வற்றின் கீழ் மேற்­படி மூன்று அமைப்­புக்­களும் தடை­செய்­யப்­பட்­டுள்­ளன.

இவ்­வ­மைப்­புக்­களை உட­ன­டி­யாக தடை­செய்ய வேண்­டு­மென்ற கோரிக்கை பல­த­ரப்­பி­ன­ராலும் முன்­வைக்­கப்­பட்ட ஆலோ­ச­னைக்கு அமை­யவே, இவை தடை செய்­யப்­பட்­டுள்­ளன. கடந்த ஏப்ரல் 21 ஆம் திக­திய, அதன் பின் நிகழ்ந்த பல்­வேறு சம்­ப­வங்­களின் பின்னணியில் இவ்வமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்புண்டு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தடைவிதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தேவை

வட – கிழக்கில் இனப்போர் ஒன்று ஆரம்பித்து இளைஞர், யுவதிகள் அப்போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1978 ஆம் ஆண்டு மே மாதம் புலிகள் தடைச்சட்டத்தையும் 1979, ஜூலையில் கொண்டுவந்த பயங்கரவாத தடைச்சட்டமும், வட–கிழக்கை உலுக்கிப் போட்டநிலையில் தான் இதுவொரு இனவாத ஒடுக்கு முறையென்று கங்கணம் கட்டிக் கொண்டு வடக்கில் பல இயக்கங்கள் உருவாக வழி வகுத்தன. 1983 ஆம் ஆண்டின் ஜூலை கலவரம் பெருந்தொகையான இளைஞர், யுவதிகளை விடுதலை இயக்கங்களோடு இணையவும் ஆயுதம் தூக்கவும் வழியமைத்துக் கொடுத்தது. இந்த இளைஞர், யுவதிகளின் வெகுண்டெழு நிலையைக் கண்ட இந்தியா தனது கோள அரசியலை தக்கவைக்க இயக்கங்களை வளர்த்துவிட்டதுடன் பயிற்சிகளை வழங்கியும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. அவ்வாறு மீண்டும் ஒரு சூழ்நிலையை உருவாக்கும் கைங்கரியமாகவே சீனாவின் பறந்தடிப்பு உதவிகளும் ரசியா போன்ற வல்லரசுகளின் ஆதிக்கமும் இந்தியாவின் கழுகுப்பார்வையும் இலங்கையை, ஒரு சமநிலை குறைந்த நாடாக்க, முயற்சிக்கின்றனவா என்ற சந்தேகங்களை எழவைக்கிறது.

நாட்டின் இனவாதங்களையும், வன்முறைக் கலாசாரங்களையும் தூண்டி விடுவதன் மூலம் உருவாகிய, உருவாக்கக் கூடிய பயங்கரவாதத்தை அடக்கிவிடவும் முடியாது அஸ்தமிக்க செய்யவும் முடியாது. அந்நிய சக்திகளுக்கு இடங்கொடுக்காத ஆதிபத்திய பலத்துடன் ஒற்றுமையையும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதே தேசபிதாக்களின் இன்றைய கடமையாகும்.

(திரு­மலை நவம்)

 

http://www.virakesari.lk/article/56222

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.