Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாஜக அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா.?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா..? அமைச்சர் கனவில் அதிமுக வேட்பாளர்கள்..!

edappadi-palanisamy-crises_1200x630xt.jp

ஒரு வேளை மத்தியில் பாஜக கூட்டணி அரசு அமைந்தால், மந்திரி சபையில் அதிமுக இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
7 கட்டங்களாக நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தல் முடிந்துவிட்டது

. தேர்தல் முடிவு நாளை மறுதினம் வெளியாக உள்ளது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. பாஜகவும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியே பெரும்பான்மையான இடங்களை வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் அதிமுக கூட்டணி சராசரியாக 4 - 9 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்தக் கருத்துக்கணிப்பு என்பது கருத்துத்திணிப்பு என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒரு வேளை அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றால், மந்திரி சபையில் அதிமுக இடம்பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடைசியாக கடந்த 1998-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தபோது, அதில் அதிமுக அங்கம் வகித்தது. அதன்பிறகு ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால், அதில் பங்கேற்கும் வாய்ப்பு அதிமுகவுக்குக் கிடைக்கலாம்.
இன்று டெல்லியில் பாஜக அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் அமைச்சரவையில் அங்கம் வகிப்பது பற்றி அதிமுக விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிக அமைச்சர் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார் என்று தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.

 அதன் அடிப்படையில் அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக முன்வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் தொகுதிகளின் வேட்பாளர்கள் அமைச்சர் கனவில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

https://tamil.asianetnews.com/politics/will-admk-participate-in-cabinet--pru4se

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, people smiling, text

கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, 
தி.மு.க...... பா.ஜ.க.  அமைச்சரவைக்கு போகும் போல இருக்கு.
ஒரே உறையில்...  இரண்டு வாள்,   இருக்க முடியாது என்பதால்...
அ.தி.மு.க.   வெளியில் இருந்து...  "மிக்ஸர்" சாப்பிட வேண்டி வரும்.  :grin:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 5 people, people smiling, text

கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, 
தி.மு.க...... பா.ஜ.க.  அமைச்சரவைக்கு போகும் போல இருக்கு.
ஒரே உறையில்...  இரண்டு வாள்,   இருக்க முடியாது என்பதால்...
அ.தி.மு.க.   வெளியில் இருந்து...  "மிக்ஸர்" சாப்பிட வேண்டி வரும்.  :grin:

வெறும் கையுடன் திரும்பிய தமிழக தலைவர்கள்..! மோடி பார்ட்டியில் கடும் அப்செட்..!

pm-modi.gif

ரெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அமித்ஷா அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தமிழக தலைவர்கள் வெறும் கையோடு திரும்பியுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை கண்டுகொள்ளாத அமித் ஷா மற்றும் மோடி திடீர் என கட்சித் தலைவர்களுக்கு ரெல்லியில் விருந்து வைத்து அசத்தினர்.

இதற்கு காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக விற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்க சிறிதளவே வாய்ப்பு இருக்கிறது என்கிற கருத்து கணிப்பு தான். எனவேதான் வாஜ்பாய் போல கூட்டணி அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அமித் ஷா மற்றும் மோடி வியூகம் வகுத்து வருகின்றனர்.

அதன் ஒரு அம்சமாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து விருந்து வைத்துள்ளனர்.

ரெல்லி அசோகா ஹோட்டலில் நடைபெற்ற இந்த இரவு விருந்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரே, சுக்பிர் பாதல், ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருசேர கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இருந்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஏ.சி. சண்முகம், வின் டிவி தேவநாதன் உள்ளிட்டோரும் விருந்தில் பங்கேற்றனர்.

சிறிய அளவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தமிழகத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் மட்டுமே ஏற்றப்பட்டனர். மற்ற அனைவரும் கீழே இருக்கை அமைக்கப்பட்டு அங்கு அமர வைக்கப்பட்டிருந்தனர்.

துவக்கத்திலேயே பாஜக தலைவர் அமித் ஷா பேசியுள்ளார். அப்போது மீண்டும் பாஜக தலைமையில் அமைய உள்ள அரசு அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் உரிய பங்கு அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக ஒத்துழைப்பு கொடுத்த கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

இதன்பிறகு உத்தவ் தாக்கரே, சுக்பீர் பாதல், நிதீஷ்குமார் ஆகியோருடன் மோடி மற்றும் அமித் ஷா தனித்தனியாக பேசியுள்ளனர். அப்போது கூட்டணி அரசு தொடர்பாகவும் கேபினட் அமைச்சர்கள் பங்கேற்று கொள்வதாகவும் சில வாக்குறுதிகளை கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்படி ஒரு பேச்சு வார்த்தை தமிழகத்திலிருந்து சென்ற எந்த தலைவருடனும் நடைபெறவில்லை.

ஒரு ஓரமாக அமர்ந்து டின்னரையும் முடித்து விட்டு தமிழக தலைவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு உள்ளனர்.

மத்திய அமைச்சர் பதவி ஆசையில் சென்ற அன்புமணி ராமதாஸ், கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் அமித் ஷாவை நெருங்க கூட முடியவில்லை என்கிறார்கள். இதனால் ரெல்லி சென்ற வேகத்தில் வெறும் கையுடன் அனைவரும் திரும்பியுள்ளனர்.

https://tamil.asianetnews.com/politics/lok-sabha-elections-amit-shah-hosts-dinner-in-delhi-prw3tr

டிஸ்கி :

 

hqdefault.jpg

தோழர், தாங்கள் ஒரு தீர்க்கதரிசி என்று இத்தால் அறிந்து கொள்ள முடிகிறது  ..☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.