Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'2015 தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்ட சஹ்ரான் ஜனாதிபதியின் வெற்றிக்காக வேலை செய்தார் '

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'2015 தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்ட சஹ்ரான் ஜனாதிபதியின் வெற்றிக்காக வேலை செய்தார் '

 

தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் என்­பவர் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் எனக்கு எதி­ராக செயற்­பட்­ட­துடன்  தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்­காக பாரிய பணியாற்றியவர் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். 

MAHINDA.jpg

சிங்­கள வார இறுதி பத்­தி­ரி­கை­யான லங்­கா­தீ­ப­வுக்கு  அளித்துள்ள செவ்­வி­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். 

அதன் விபரம் வரு­மாறு,

கேள்வி: நாட்டின் தற்­போதைய நிலைமை தொடர்பில் திருப்­தி­ய­டைய முடி­யுமா?

பதில்: கடந்த தினங்­களில் நாட்டில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் யாராலும் நினைத்துப் பார்க்க முடி­யா­தவை. பாது­காப்பு பல­வீ­னங்கள் தென்­பட்­டன. 

கேள்வி: புல­னாய்வு உறுப்­பி­னர்கள் கைது­செய்­யப்­பட்­ட­மையே பாது­காப்பு வீழ்ச்­சிக்கு காரணம் என்­பதை அர­சாங்கம் மறுக்­கி­றதே...?

பதில்: அவர்கள் எத­னையும் ஏற்­றுக்­கொள்­ள­வில்­லையே. புல­னாய்வு அதி­கா­ரிகள் நெருக்­க­டி­க­ளுக்கு முகம்­கொ­டுத்­தனர். சிலர் கைது­செய்­யப்­பட்டு பிணையில் உள்­ளனர். மேலும் சிலர் சிறை­களில் உள்­ளனர். தற்­போது நாடு ஸ்திர­மற்ற நிலையில் இருக்­கி­றது. மக்­களின் மனதில் உள்­ள­வற்றைக் கேட்க வேண்டும்.

கேள்வி: பொலிஸ் மா அதி­பரும் இரா­ணுவத் தள­ப­தியும் பாது­காப்பு சிறப்­பாக உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனரே?

பதில்: 90 வீதம் 80 வீதம் நன்­றாக உள்­ளது என்று கூறிப் பல­னில்லை. பாது­காப்பு 100 வீதம் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

கேள்வி: அப்­ப­டி­யானால் மாண­வர்­களை ஏன் பாட­சா­லைக்கு வரு­மாறு அழைத்­தீர்கள்?

பதில்: இந்த நிலை­மையை நீடிக்க இட­ம­ளிக்க முடி­யாது. பாது­காப்புத்துறை சார்ந்­த­வர்­களும் பிர­த­மரும் நாடு பாது­காப்­புடன் இருப்­ப­தாக கூறினால்  குறிப்­பி­டத்­தக்க அளவில் ஏற்க வேண்டும். அத்­துடன் தொடர்ந்தும் பாட­சா­லை­களை மூடிக்­கொண்­டி­ருக்க முடி­யாது. அத­னால்தான் நாம் பொறுப்­புடன் செயற்­பட்டு இந்த அழைப்பை விடுத்தோம். 

கேள்வி: இது சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் என பிர­தமர் தெரி­வித்­துள்­ளாரே...?

பதில்: இது சர்­வ­தேச மற்றும் உள்­ளக பயங்­க­ர­வாதம். இந்தப் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கையில் வெளிநாட்­ட­வர்கள் ஈடு­ப­ட­வில்லை. உள்­நாட்டில் இருந்­த­வர்­களே இதனைச் செய்­துள்­ளனர். 

கேள்வி: தற்­கொலை குண்­டு­தா­ரி­களைக் கொண்ட அமைப்பு உங்கள் ஆட்சிக் காலத்தில் உரு­வா­கி­யதா?

பதில்: எமது காலத்தில் குறிப்­பிட்­ட­ளவில் உரு­வாகிக்கொண்டு வந்­தது. அப்­போது நாங்கள் அவர்கள் குறித்து தேட ஆரம்­பித்தோம். அவ்­வா­று அவர்­களின் குழுக்­க­ளுக்குள் எமது குழுக்­களை அனுப்பி சில திட்­டங்­களை ஆரம்­பித்தோம்.

கேள்வி:  அவர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கப்­பட்­டுள்­ளதா?

பதில்: புல­னாய்­வா­ளர்கள் ஒரு சேவையை வழங்­கு­கின்­றனர். அதனால் அவர்­க­ளுக்கு கொடுப்­ப­னவு வழங்­கப்­பட வேண்டும். இல்­லா­விடின் எந்தத் தக­வலும் கிடைக்­காது.

கேள்வி: ஆனால் மஹிந்த ராஜ­பக்ஷ தனது நன்­மைக்­­காக சில குழுக்­களை வைத்­தி­ருந்­த­தாக சிலர் கூறு­கின்­ற­னரே?

பதில்:  அப்­படி இல்­லா­விடின் எவ்­வாறு உளவுத் தக­வல்­களை பெறு­வது. அதற்கு நாம் எமது ஆட்­களை அங்கு அனுப்ப வேண்டும். இந்­தியா இது தொடர்பில் எமக்கு தகவல் வழங்­கி­யது. அவர்கள் எவ்­வாறு இந்த தக­வல்­களை வழங்­கி­னார்கள். சாத்­திரம் பார்த்து வழங்­க­வில்லை. அவர்­களின் உளவுப் பிரிவு ஊடாக கிடைத்த தக­வல்­களை வழங்­கி­னார்கள். எமது காலத்தில் இந்த அமைப்­புக்கள் என்ன செய்­தது என்­பதை பார்த்துக் கொண்­டி­ருந்தோம்.

கேள்வி: மஹிந்­தவின் காலத்தில் சிறு­பான்­மை­யினர் நெருக்­க­டிக்கு உட்­பட்­டனர். அதன்  விளை­வா­கவே இந்தக் குழுக்கள் உரு­வா­கின. இதனை ஏற்­கி­றீர்­களா?

பதில்: அப்­படி எந்த நெருக்­க­டி­களும் இருக்­க­வில்லை. அனைத்து மக்­களும் சுதந்­தி­ர­மாக இருந்­தனர். இருந்த அழுத்­தத்தை நாமே நீக்­கினோம். 

கேள்வி: அளுத்­கம–தர்­கா­நகர் சம்­ப­வங்கள்...-? 

பதில்: அவை அர­சியல் சம்­ப­வங்கள். அர­சியல் ரீதி­யாக அவை நடத்­தப்­பட்­டன. அதனை என்­ மீது சுமத்தி சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களைப் பெற முயற்­சித்­தனர். இந்த சஹ்ரான் என்­பவர் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் எனக்கு எதி­ராக செயற்­பட்டு தற்­போதைய ஜனா­தி­ப­திக்­காக பாரிய பணியாற்றியவர். எனவே பேரு­வளை–தர்­கா­நகர் சம்­ப­வங்­களை செய்­தவர் யார் என அனை­வ­ருக்கும் தெரியும்.

கேள்வி: யார் அவர்கள்?

பதில்: அது தேவை­யில்லை. எவ்­வாறு யார் திட்­ட­மிட்­டார்கள் என அனை­வ­ருக்கும் தெரியும். 

கேள்வி: அமைச்சர் ரிஷாத்­துக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை சமர்­ப்பிக்­கப்­பட்­டுள்­ளது. அனைத்து பாவங்­க­ளையும் அவர் மீது சுமத்த முயற்­சிக்­கி­றீர்­களா?

பதில்: அந்தப் பயம் எனக்கும் இருக்­கி­றது. அர­சாங்­கத்தின் அனைத்துப் பாவங்­க­ளையும் ரிஷாத்  மீது சுமத்தி தப்­பி­வி­டு­வார்கள் என சிந்­திக்­கிறேன். ஆனால் அவ்­வாறு முடி­யாது. ரிஷாத் இந்த அர­சாங்­கத்தின் ஒரு பங்­கு­தாரர். அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்களை பார்க்­கும்­போது அவை நியா­ய­மா­னவை என்றே தெரி­கி­றது. ஆனால் அவரை விசா­ரிக்­க­வு­மில்லை. கைது செய்­ய­வு­மில்லை. வீட்டுச் சிறை வைத்­தா­வது அவரை விசா­ரிக்க வேண்டும் அல்­லவா? அவர் சந்­தே­க ந­பர்கள் விட­யத்தில்  இரா­ணுவத் தள­ப­திக்கு தொலை­பே­சியில் பேசி­யி­ருக்­கிறார். அதனை நாங்கள் கூற­வில்லை. இரா­ணுவ தள­ப­தியே கூறி­யுள்ளார். 

கேள்வி: அர­சுக்கு எதி­ராக ஜே.வி.பி. நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை சமர்ப்­பித்­துள்­ளதே?

பதில்: அவர்கள் தொடர்ந்து அர­சாங்­கத்­து­ட­னேயே இருந்­தனர். 

கேள்வி: நீங்கள் முன்­வைத்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு சுதந்­திரக் கட்­சியின் மைத்­திரி தரப்பு என்ன செய்யும்.....?

பதில்: அவர்கள் எம்­முடன் இணைந்து வாக்­க­ளிப்­பார்கள் என எதிர்­பார்க்­கிறோம். 

கேள்வி: ஆனால் ஜனா­தி­பதி அரசின் தலைவர்.....? 

பதில்: எனினும் அவர் நேர­டி­யான ஒரு முடிவை எடுப்பார் என நம்­பு­கிறோம்.

கேள்வி: நேர­டி­யான முடிவு என்றால்...?

பதில்: ஆத­ர­வாக வாக்­க­ளிப்பார் அல்­லது நடு­நி­லைமை வகிப்பார்.

கேள்வி: பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் அவ­சி­ய­மில்லை என்று அமைச்சர் சஜித் கூறி­யி­ருக்­கிறார் அல்­லவா....?

பதில்: ஆம், நானும் அதனைக் கண்டேன். 

கேள்வி: அப்­ப­டி­யாயின் உங்கள் போராட்­டத்தை சஜித் கையில் எடுத்­துள்­ளாரா...?

பதில்: எமது போராட்­டத்­துக்கு ஆளும் தரப்பில் ஆத­ரவு கிடைப்­பது நல்­லது. எனினும் அவர் இதனை சமர்ப்­பிக்க ஆத­ரவு  வழங்­கினார். எனினும் அது தவ­றா­னது என தற்­போது அவர் புரிந்­து­கொண்­டுள்­ளமை நல்­லது. ஆனால் இவர் அமைச்­ச­ர­வையில் உடன்­ப­டு­கிறார். வெ ளியில் எதிர்க்­கிறார்.

கேள்வி: சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டிக்க இந்தச் சட்டம் தேவை என பிர­தமர் கூறி­யுள்­ளாரே...?

பதில்: அவ்­வா­று தேவை­யில்லை. அப்­படி தேவை­யாயின் தற்­போ­தைய சட்­டத்தில் திருத்தம் செய்­யலாம். 

கேள்வி: திருத்தம் கொண்­டு­வந்தால் ஆத­ரவு வழங்­கு­வீர்களா....-?

பதில்: நிச்­ச­ய­மாக ஆத­ரவு வழங்­குவோம்.

கேள்வி: இந்தப் பிரச்­சி­னைக்கு மத்­தியில் தேர்­தல்கள் பிற்­போ­டப்­ப­டுமா....?

பதில்: மாகாண சபைத் தேர்தல் ஏற்­க­னவே தாம­த­ம­ா­கி­விட்­டது. இந்த அர­சாங்கம் தேர்தல்களுக்கு பயந்துவிட்டது. ஆனால் தேர்தல்களை தாமதிக்க முடியாது. 

கேள்வி: அப்படியானால் ஜனாதிபதி தேர்தல்....-?

பதில்: ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடைபெற வேண்டும். அதனை தாமதிக்க முடியாது. 

கேள்வி: நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு....-?

பதில்: ஜனாதிபதி தேர்தலை தாமதிப்பார் என நான் எண்ணவில்லை. அவர் ஒரு தரம் பதவி வகிப்பதாகவே கூறியிருந்தார். 

கேள்வி: மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

பதில்: அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எமது வேட்பாளர் யாராயினும் வெற்றி பெறுவார். 

கேள்வி: கோத்தபாயவின் பெயரை ஏன் கூறாமல் தவிர்க்கிறீர்கள்?

பதில்: யார் வேட்பாளர் என்பதை கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை. 

 

நன்றி: லங்காதீப

 

http://www.virakesari.lk/article/56821

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.