Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுகள் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுகள் அறிவிப்பு!

June 10, 2019
 

canada-literary.png?resize=464%2C206

 

கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018 இயல் விருது பெற்றவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த புனைகதைக்கான இயல் விருது நடுகல் நாவலுக்காக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2018 இயல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று கனடாவில் இடம்பெற்றது. இந்த ஆண்டுக்கான இயல் விருது தமிழக எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

அத்துடன் நேற்றைய இயல் விருது விழாவில்  2018 ஆம் ஆண்டு விருது பெரும் படைப்பாளிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில்  சிறந்த புனைகதைக்கான விருதை நடுகல் நாவலுக்காக தீபச்செல்வனுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன் புனைவுக்கான விருது காகம் கொத்திய காயம் என்ற கட்டுரை நூலுக்காக உமாஜிற்கும் சிறந்த கவிதைக்கான விருது சிறிய எண்கள் தூங்கும் அறை என்ற கவிதை நூலுக்காக தமிழகக் கவிஞர் போகன் சங்கருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது மலையாளத்திலிருந்து தமிழுக்கு பீரங்கி பாடல்கள் என்ற நூலை மொழி பெயர்த்த இரா முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலக்கிய சாதனைக்கான விருதுகளை கல்யாணி ராதாகிருஷ்ணன் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ம.நவீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

#கனடா  #இலக்கியத் தோட்டத்தின்  #இயல் விருதுகள் #நடுகல்

 

http://globaltamilnews.net/2019/123979/

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தீபச்செல்வன்,மென் மேலும் வளர வேண்டும்.

நடுகல் நான் இன்னும் வாசிக்கவில்லை...கிருபன் வாசித்து விட்டீர்களா  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நடுகல் நான் இன்னும் வாசிக்கவில்லை...கிருபன் வாசித்து விட்டீர்களா  

கிழக்கு இலண்டனில் நடைபெற்ற நடுகல் நூல் வெளியீட்டு விழாவுக்குப் போயிருந்தேன். ஆனால் அதில் விமர்சன உரையாற்றிய யமுனா ராஜேந்திரன் இது ஒரு நாவலே அல்ல என்று காட்டமாக விமர்சித்தார். வெறும் பிரச்சாரமாக இருக்கும் என்று  நடுகல் நூலை வாங்காமல் வந்துவிட்டேன் ( ஆனால் வேறு ஏழெட்டு நூல்களை வாங்கினேன்). பெளசரிடம் இருக்கும்தானே. ஒன்று வாங்கிப் படித்துவிட்டு சொல்கின்றேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.