Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருள்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள்

Featured Replies

பொருள்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள்

யாழ். நகரப் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களில் நேற்று பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு அத்தியாவசியப் பொருள் களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

வடக்கில் அடுத்துவரும் தினங் களில் யுத்த நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படலாம் என்று செய்தி கள் வெளியாகியதை அடுத்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற் படலாம் என்ற ஊகத்தில் மக்கள் அத்தியவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக் கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக அத்தியாவசி யப் பொருள்களின் விலைகள் திடீ ரென அதிகரித்தன. அத்தியவசியப் பொருள்கள் முடிவடைந்து விட்ட தாக சில வியாபார நிலையங்களில் தெரிவிக்கப்பட்டது. (அ8)

நூல் வெளியீட்டு விழா

திருமறைக் கலாமன்றத்தைச் சேர்ந்த யோ. யோண்சன் ராஜ்குமார் எழுதிய "கொல் ஈனுங் கொற்றம்' எனும் கூத்துருவ நாடக நூல் வெளி யீட்டு விழா நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு128, டேவிற் வீதியில் அமைந்துள்ள கலைக் கோட் டத்தில் இடம்பெற உள்ளது.

திருமறைக் கலாமன்ற மூத்த கலைஞர் கலாபூஷணம் ஜீ.பீ. பேர் மினஸ் தலைமையில் நடைபெற வுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந் தினராக யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரி யர் எஸ். சிவலிங்கராஜா கலந்து கொள்ளவுள்ளார்.

நூல் மதிப்பீட்டுரையை யாழ். பல்கலைக்கழக கல்வியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. கலாமணி நிகழ்த்தவுள்ளார்.

நடைமுறைப்படுத்தப்படாத சுற்றறிக்கையால் என்ன பயன்?

பிரான்ஸில் மன்னர் ஆட்சிக்கு எதிராக மக் களின் பிரெஞ்சுப் புரட்சி வெடிக்கின்ற காலத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் குறித்துப் பலரும் பேசுவார் கள். அநீதி ஆட்சியால் வறுமையிலும் பசியிலும் பட்டினியிலும் வாடிய மக்களின் சார்பில் லூயி மன் னனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம். ""வயிற்றை ஒரு நேரம் கூட நிரப்புவதற்கு பாண்(றொட்டி) கூடக் கிடையாது மக்கள் கஷ்டப் படுகின்றார்கள். அவர் கள் என்ன செய்வது?'' என்று கேட்க, ""அப்படியா? பாண் இல்லாவிட்டால் அதற்குப் பதிலாகக் "கேக்' வாங்கிச் சாப்பிடுங்கள்!'' என்று நிலைமை புரி யாத மன்னன் பதிலளித்தானாம்.

அந்த எதேச்சாதிகார ஆட்சி பின்னர் மக்கள் புரட்சி யால் கவிழ்க்கப்பட்டமை சரித்திரம்.

""பாண் இல்லாவிட்டால் கேக் சாப்பிடுங்கள்!'' என்ற அந்தத் தொனியில் இருக்கின்றது கைதுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட் டாபய ராஜபக்ஷ இப்போது வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கை.

முப்படைத் தளபதிகளுக்கும் பொலிஸ்மா அதி பருக்கும் இந்தச் சுற்றறிக்கையை அவர் அனுப்பி வைத்திருக்கின்றார்.

கேட்டுக்கேள்வியின்றிக் கண்டபடி கைதுகள், ஆட்கடத்தல்கள், கடத்தியவர்களைப் பணயம் வைத்து அச்சுறுத்திக் கப்பம் அறவிடுதல், கடத்தப்பட்டவர் களைக் காணாமற் போகச் செய்தல், படுகொலை செய் தல், அடையாளம் காணப்பட முடியாத வகையில் சிதைந்து, எரிந்து, அழுகிய நிலையில் சடலங்கள் ஆங்காங்கே போடப்படுதல் என்று மோசமான மனித உரிமை மீறல்களும் அராஜகங்களும், மஹிந்தவின் ஆட்சியில், முன்னைய காலங்களுடன் ஒப்பிட முடி யாத அளவுக்குத் தாராளமாகத் தொடர்கின்றன.

வெள்ளை வானில் வரும் மர்மக் கும்பல்கள் தங்கு தடையின்றி ஆட்களைக் கடத்திச் செல்கின்றன. அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பெரிய வீதிகளையே நள்ளிரவில் மூடிவிட்டு, வரிசை யாக அவ்வீதியிலிருக்கும் அனைத்து வீடுகளிலும் ஆயுதம் தாங்கிய மர்மக் குழுக்கள் ஆறுதலாகத் தங்கிநின்று பொதுமக்களைத் தாக்கியும், வெட்டியும், அடித்தும், அச்சுறுத்தியும் விட்டு வீடுகளைக் கொள் ளையிட்டு, சூறையாடி, சாவகாசமாகச் செல்கின்றன. இத்தகைய கொடூர அராஜகங்களால் பீதியில் உறைந்து போயிருக்கின்றது தமிழர் தாயகம். யாழ். குடா நாட்டு மக்களின் வாழ்க்கையோ எழுத்தில் வடிக்க முடியாத அளவுக்கு அதளபாதாள சூழல் நிரந்தர மாகிவிட்ட நிலை. மொத்தத்தில் அரச பயங்கரவாதத் தின் குரூரத்தைத் தாங்கமுடியாது தமிழ் மக்கள் தவிக்கின்றனர்.

இந்தக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது என ஈழத்தமிழர்கள் அங்கலாய்த்து ஏங்கி நிற்க, கைது கள், தடுத்து வைத்தல் என்பவற்றை சட்டப்படி எவ் வாறு மேற்கொள்வது என்பது பற்றிய பழைய சுற்ற றிக்கையில் உள்ள விடயங்களை மீண்டும் ஞாபகப் படுத்த முற்பட்டிருக்கின்றார் பாதுகாப்புச் செயலாளர்.

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது' என்பர். அது போல கைதுகள் தொடர்பான இந்த எழுத்துமூல ஏட் டுச்சுரைக்காய், ஈழத்தமிழர்களின் வாழ்வியல் அவ லங்களை ஒருபோதும் நீக்கப் போவதில்லை என் பது தமிழர்களுக்கு வெள்ளிடைமலையாய் தெரிந்த விவகாரம். அதுவே அவர்களின் பட்டறிவும் கூட.

என்ன, ஏது என்று கேட்கக்கூட அனுமதியின்றி மிக மோசமான முறையில் தாக்கப்பட்டு ஆட்கள் கடத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும், படை யினரோ அல்லது பொலிஸாரோ என்று தங்களை இனங்காட்டாமலேயே அட்டகாச நடவடிக்கைக ளோடு தமிழர்களைத் தாக்கிப் பலவந்தமாக அழைத் துச் செல்வதும், வெள்ளைவான் போன்றவற்றில் வரும் மர்மக் குழுக்களால் திடீர் திடீரென ஆட்கள் கடத்தப்படுவதுமான மோசமான பிரச்சினைகளால் தமிழினம் அவலமுற

அந்தப் பிரச்சினையை எவ்வாறு முகம் கொடுத்து சமாளிப்பது என்று தெரியாமல் அவர்கள் பீதியுற் றுத் தடுமாறியிருக்க

ஏன் அதற்கு வழியில்லையா என்பதுபோல கைது களை எவ்வாறு சட்டப்படி செய்யவேண்டும் என படையினருக்கும் பொலிஸாருக்கும் அறிவுறுத்தி நல்லுபதேசம் செய்து பதில் தர முயல்கிறார் பாது காப்புச் செயலாளர்.

கைதுகள் தொடர்பாக இவ்வாறு தத்துவம் பேசு வது, "சாப்பிடுவதற்குப் பாண் கூட இல்லை!' என்ற மக்களைப் பார்த்து, "பாண் இல்லாவிட்டால் கேக் சாப்பிடுங்களேன்!' என்று பதிலளித்த மன்ன னின் போக்குப்போலவே உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலையில் தாம் விடுத்த அந்த அறிக்கையை இப்போது மீண்டும் ஒரு தடவை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டு, அது பற்றிய தகவலை ஊடகங்களுக்கு வெளி யிடும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார் பாது காப்பு அமைச்சின் செயலாளர்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான அரசுப்படைகளின் மோசமான மனித உரிமை மீறல்கள் சர்வதேச மட் டத்தின் தீவிர கவனிப்புக்கும் ஆழ்ந்த சிரத்தைக்கும் உள்ளாகியுள்ள பின்னணியில், அதனால் எழுந்துள்ள அழுத்தங்கள், நெருக்கடிகள், இடர்கள் போன்றவற் றைச் சமாளிப்பதற்காக பழைய இப்போது செயல் முறையில் பின்பற்றவே படாத நடைமுறைப் படுத்தப்படாத உளுத்துப்போன சுற்றறிக்கை யைத் தூக்கிப் பிடித்திருக்கிறார் அவர்.

ஒருவரைக் கைதுசெய்யும்போது பின்பற்றவேண் டிய ஒழுங்குகள், அவரை மனிதாபிமானத்துடன் நடத்துதல், கைது குறித்து உறவினருக்கு அல்லது நண்பருக்கு அறிவித்தல், அத்தகைய அறிவித்தலை சம்பந்தப்பட்ட நபர் வழங்குவதற்கு அவரை அனு மதித்தல், கைதுகுறித்து மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அறிவித்தல்..... என்று நடைமுறையில் பின்பற்றவேபடாத ஒரு "மாயாஜாலத்தை' அவிழ்த்து விட்டு சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முயல்கிறது அரசு.

தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப் படுத்தி, நெரித்துத் தான் செய்யும் அட்டூழியங் களை மூடி மறைப்பதற்கு கொழும்பு அரசு வழ மையாகக் கையாளும் குள்ளநரித்தன தந்திரோ பாய விளையாட்டின் மற்றொரு அத்தியாயமாகவே இந்த சுற்றறிக்கையும், அது வெளியிடப்பட்டமை பற்றிய பிரசாரமும் அமைகின்றன

உதயன் ஆசிரியர் தலையங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.