Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடாநாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-படைகளின் தளபதி! நேற்றும் வாள்வெட்டு சம்பவங்கள்

Featured Replies

யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சர்வமத வழிபாடுகளில் இன்றையதினம் ஈடுபட்டனர்.

இதற்கமைய யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனையடுத்து நல்லுார் கந்தசுவாமி கோவிலிலும் விசேட பூஜைகளையும் இராணுவத்தினர் ஏற்பாடுசெய்திருந்தனர்.

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் அவரது தலைமையில் இந்த வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

பூஜை வழிபாடுகளில் மாவட்ட இரானுவ உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ சிப்பாய்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த பூஜைவழிபாடுகளில் கலந்துகொண்டிருந்த யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியிடம், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவினர்.

அதற்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி

“பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23ஆவது வருடப் பூர்த்தியை கொண்டாடும் முகமாக அனைத்து மதத் தலங்களிலும் சென்று வழிபாடுகளை நடத்துகின்றோம். எமது படையினர் மற்றும் காயத்துக்குள்ளான படையினர், தற்போது சேவையிலுள்ள படையினருக்கு ஆசிர்வாதம் வேண்டி இன்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் பாதுகாப்பினை மேலும் உறுதிசெய்து அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பை உறுதிசெய்துள்ளோம்.

எனினும் இப்போது பாதுகாப்பு கெடுபிடிகளை குறைத்திருக்கின்றோம். மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம். தேவைப்படுகின்ற இடங்களில் பாடசாலைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றோம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை யாழ் குடாநாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி கூறினாலும், யாழ் குடாநாட்டில் மீண்டும் வன்முறைக் கும்பல்களின் அட்டகாசங்கள் தீவிரமடைந்திருக்கின்றன.

வாள் வெட்டுச் சம்பவங்களும், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி அச்சுறுத்தும் சம்பவங்களிலும் ஆவா கும்பல் உள்ளிட்ட வன்முறைக் கும்பல்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவது தொடர்பில் யாழ் குடாநாட்டு மக்கள் அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து வீதியில் இறக்கிவிடப்பட்டுள்ள ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரின் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக வடக்கு கிழக்கில் மீண்டும் ஒரு யுத்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதனால் மக்கள் வெளியில் செல்வதற்கும் அச்சத்தில் இருப்பதாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சிறிலங்கா நாடாளுமன்றிலும் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/122319

  • தொடங்கியவர்

சஹாரான் குழுவை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் சிங்கள-பௌத்த முப்படைப் புலனாய்வுப் பயங்கரவாதிகள் ஊடாக ஊக்குவித்து, சம்பளம் கொடுத்து ஒரு முஸ்லீம் பயங்கரவாதக் குழுவாக எப்படி கட்டியெழுப்பினார்களோ, அதே பாணியில் வடக்கில் காடையர்களை குழுக்களாக ஒன்றிணைத்து "ஆவா", "தனு", "ரொக்" போன்ற பெயர்களில் வாள்வெட்டு கும்பல்களை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் சிங்கள-பௌத்த முப்படைப் புலனாய்வுப் பயங்கரவாதிகள் ஊடாக உருவாக்கி இயக்கி வருகிறார்கள்!

இந்தக் கும்பல்களின் உறுப்பினர்கள் சிங்கள-பௌத்த இராணுவ முகாம்களுக்குள் சுதந்திரமாக போய் வருவதை சில சந்தர்ப்பங்களில் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்பு கைதுசெய்யப்பட்ட பலரும் பின்னர் சந்தடியின்றி விடுவிக்கப்பட்ட பின்னணியும் இந்தக் கும்பல்களை இயக்குவது சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளே என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

அண்மையில் வடக்கிலிருந்து மாற்றலாகி போன சிங்கள போலீஸ் பயங்கரவாதியான ரொஷான் இந்த வாள்வெட்டு கும்பல்களுக்கு கொடுத்த நற்சான்றிதழ்களும் இந்தக் கும்பல்களை இயக்குவது சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளே என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.