Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை, இந்தியா மீது மீண்டும் ஐ.எஸ் எச்சரிக்கை

Featured Replies

இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிர்காலத்தில் ஐ.எஸ் அமைப்பால் அச்சுறுத்தல் ஏற்படுமென இந்தியப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

இந்தியப் புலனாய்வு பிரிவு இந்தியாவின் பொலிஸ் பிரதானிகளுக்கு 3 கடிதங்கள் ஊடாக இது குறித்து தெரியப்படுத்தியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈராக், சிரியாவில் தமது பலங்களை இழந்துள்ள ஐ.எஸ் அமைப்பின் கவனம் இந்து சமுத்திர வலயத்தை நோக்கி திரும்பியுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள குறித்த எச்சரிக்கை கடிதம் ஊடாக, இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் தாக்குதல் நடத்தப்படக்கூடிய இடங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவின் கேரளா மாநிலத்தில் குறைந்தது 100 பேர் வரை கடந்த சில வருடங்களில் ஐ.எஸ் அமைப்புடன் இணைந்துள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கை-இந்தியா-மீது-மீண்டும்-ஐ-எஸ்-எச்சரிக்கை/175-234410

 

இந்திய புலனாய்வு பிரிவு இந்தியாவில் ISIS அமைப்புக்கு ஆட்களை சேர்த்துக்கொண்டு இன்னொரு பக்கம் இப்பிடியும் எச்சரிக்கும்.

  • தொடங்கியவர்

இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால், கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இராக் மற்றும் சிரியாவில் தங்கள் முகாமை இழந்ததை தொடர்ந்து, இந்திய கடலோர பகுதிகளை நோக்கி ஐஎஸ்ஐஎஸ் கவனம் செலுவத்துவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, கேரளாவின் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உளவுத்துறை எழுதிய 3 கடிதங்களில் ஒன்றில், இராக் மற்றும் சிரியாவில் தங்கள் முகாமை இழந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர், தொடர்ந்து ஜிகாத்களை தங்கள் சொந்த நாட்டில் இருந்தே தொடருமாறு செயல்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.

மற்றொரு கடிதத்தில், "கொச்சியில் உள்ள முக்கிய ஷாப்பிங் மால்களை தாக்குவது ஐஎஸ்ஐஎஸ்-ன் இலக்காக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கையில், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி 8 இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட மக்கள் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த சம்பவத்துக்குப் பிறகு, கேரளம் மற்றும் தமிழகத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சார்பில் ஏற்கெனவே விசாரணை நடத்தினர்.

அண்மையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புள்ளதாக கோவையில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். ஐஎஸ் பயங்கரவாதிகள் கேரளத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று என்ஐஏ எச்சரிக்கை விடுத்துள்ளதால் கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது.
 
கடந்த மே மாதம், இலங்கையின் உளவுப்பிரிவினர் அளித்த தகவலின்படி, கடலோர பகுதிகள் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு இங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.